கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




மென்மைப்பூச்சி
********************
பறக்க நினைக்கும் பொழுதெல்லாம்
ஏதோ ஒரு காரணத்தினால்
இறகின் வண்ணத்தைத்
தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய்
உன் பார்வைகளால்
பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?…………

நான் தினம் பறக்கும்
நிலவின் நிழலில் மட்டும்
என்னை மிஞ்சிய பல பட்டாம்பூச்சிகள்
நீ மேனி உரசிய காரணத்தினால்
கலைந்துவிட்டன காத்திருப்பு வண்ணங்கள்…………….

ஒரு புள்ளியில் யாரெல்லாம்
அழகை அடைகாத்து சிலாகித்தார்களோ
அவர்களுக்கு மட்டும்
கன்னத்தை வண்ணமாக்கிச் செல்கிறது
இந்த அழகு பட்டாம்பூச்சி……

நானும் வண்ணமாகி விடுகிறேன்
குழந்தையின் கையில் சிக்கிய வானவில் வளையங்களைப் போல
நீளமும் சதுரமும் வட்டமுமாய் மாறிப் போன
உணர்வி ததும்பிகளாய்
வண்ணங்கள் மட்டும் எனது எண்ணத்தூரிகையில்
மேலும் கீழுமாக…….

இருக்கட்டும்
இறுக்கம் திறந்த இறகுகளைக் கொண்ட அந்த ஒரு பட்டாம்பூச்சி
வானவில்லாய்
எனது எட்டாவது வண்ணத்தில்…………..

மெல்லியதொரு_இறுக்கம்
*******************************
இறுக அழுத்தி
கரம்பற்றி நகரும்
துணைகளுக்கு
இறுக்கத்தை மேலும் கற்றுத்தருகின்றன
இருவித்திலை தாவரங்கள்….

யதார்த்தமாக
கரம் கோர்த்த ஒரு மோதிரத்தின் வலி
கரம் மாறும் பொழுது வலிக்கத்தான் செய்கிறது்…….

ஒத்து ஊதும் நாயனத்தின் இறுதியில்
இரு உள்ளங்களின் சிரிப்புதான்
நுரையீரலை இசைப்படுத்துகிறது…….

கைப்பிடித்து
முகம்பார்த்து
பூச்செண்டை விசிறி எறியும் பொழுது
அறிவதில்லை
எறிவது மீண்டும் தரை திரும்புமென…….

சிவப்புக் கம்பள விரிப்புகளுள்
அவ்வப்போது விருப்பப் பாதங்களும்
அன்றாடம் வெறுப்பு பாதங்களும்
சற்று அதிகமாகவே பதிவுறுகின்றன……..

கவிஞர் சே கார்கவி

அன்பின் பதிலி கவிதை –  அகவி

அன்பின் பதிலி கவிதை – அகவி




கடிதம் எழுதுதல்
தன்னை எழுதுதல்

இப்போதெல்லாம்
கடித கர்ப்பிணி
யாய்
தினம்தினம் அலையும்
தபால்காரரை
காணவே முடியவில்லை

நொடியில்
குரல் கேட்கும்
முகம் பார்க்கும் காலமிது
அன்பின் கசிந்துணர்வை தரவோ பெறவோ
இயலுகிறதா
நவீன கரங்களால்.

அன்புள்ள
எனத் தொடங்கி
உயிருக்குள்
உயிர் ஊறவைக்கும்
கடுதாசி காலம்
அரிதாகிப்போனது

உறவுமுறைக் கடிதங்கள்
எனும் பாடத்தை
நடத்தி முடித்தேன்.
பின் பயிற்சிக்காக
ஐம்பது அஞ்சல் அட்டை வாங்கி அப்பாவுக்கோ அம்மாவுக்கோ
கடிதம் எழுதுங்கள்
என்றேன்

சிலர் மட்டும்
மாமாவுக்கு
சித்தப்பாவுக்கு
தாத்தாவுக்கு என எழுதினர்
பிறகுதான் தெரிந்து
திடுக்கிட்டேன்
இவர்களுக்கு தாய் தந்தை
இல்லை என்று

பதிலித் தாய் தந்தையாய்
மாமா, தாத்தா
சித்தப்பா
போதுமா
மனிதராக இருக்கும்
எவரும் இருக்கலாம்
பதிலித்தாய் தந்தையாய்
இன்று
பதிலித் தபால்காரராய் இருக்கும்
கூரியர் இளைஞரைப் போல.

மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

பூங்காவில் தீவிரமான நடைபயிற்சியில் இருந்தார்கள்.பரசுவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு. எத்தனை நாள் தான் கொடுக்காமல் இருக்கறது? இன்னைக்கு குடுத்திடணும்னு இருந்தார். இதோ" தென்றலில் அசைந்து வரும் மலராய்" நடந்து வருகிறார் வசந்தா. "டீ.சர்ட்" ல் கண்ணைப் பறிக்கிறார். மெதுமெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார்.பரசுவும்…
வழித்துணையாய் வந்த வாசிப்பு கட்டுரை – வே. சங்கர்

வழித்துணையாய் வந்த வாசிப்பு கட்டுரை – வே. சங்கர்




ஒற்றைவரியில் வரலாற்றைச் சொல்லமுடியாமல் போகலாம். ஆனால், ஒற்றைவரியில் வரலாற்றை வாசிக்க வைத்துவிடமுடியும்.
தொடக்கத்தில் வாராந்திர மற்றும் மாதாந்திர ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளை வாசித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நானும் ஒரு வாசிப்பாளரானேன்.

அம்புலிமாமாவும், பாலமித்ராவும், ரத்னபாலாவும் பிற்காலத்தில் வந்த கோகுலமும் என்னுள்ளே செய்த மாயாஜாலம் அளப்பரியது. பி.டி.சாமியின் இரும்புக் கை மாயாவி என்ற புத்தகத்திற்குள்ளேதான் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.https://bookday.in/wp-admin/post.php?post=38278&action=edithttps://bookday.in/wp-admin/post.php?post=38278&action=edit

பிறகு தொடர் வாசிப்பில் தீவிர வாசிப்பாளரானேன். தற்போது எழுத்தாளன் என்ற அடுத்த பரிமாணம். வாசிப்பு என்பது ஒருவகை மனஉந்துதல். எதற்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளம்போல் புத்தகவாசிப்பு, இன்றளவும் உள்மனதிற்குள் எப்போதும் சீறிப்பாய்ந்துகொண்டிருக்கிறது.

புத்தகம் வாசிக்காத நாட்கள் பல இருந்தபோதும், வாசிப்பின் ஈரம் சுத்தமாக வறண்டுபோனதில்லை. யாரேனும் ஒருவர் புத்தகத்தைப் பற்றி பேசினாலோ அல்லது கேட்டாலோ போதும் மீண்டும் வாசிப்புத் ’தீ’ பற்றிக்கொள்ளும்.

இதைத்தான் வாசிக்கவேண்டும் என்று யார் வலியுறுத்தியும் ஒருவரை வாசிப்பாளராக மாற்ற முடியாது. வாசிப்பு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆரம்பத்தில், எனக்கு வார இதழ்களில் வெளியாகும் கவிதைகள் பிடிக்கும். அது புதுக்கவிதையா, மரபுக் கவிதையா அல்லது ஹைக்கூ கவிதையா என்றெல்லாம் தரம்பிரித்துப் பார்க்கத் தெரியாது.

அந்தக் கவிதை காதலைப் பற்றிப் பேசுகிறதா?, சமூகத்தைச் சாடிப் பேசுகிறதா?, பெண்ணியம் பேசுகிறதா?, அல்லது எதார்த்தத்தைக் கவிதை வடிவில் எழுதப்பட்டிருக்கிறதா? என்ற எந்தவொரு ஆதியும் அந்தமும் இல்லாமல்தான் கவிதையை வாசிக்கப் பழகினேன்.

ஒருகட்டத்தில் நானும் வார்த்தைகளை மடக்கி மடக்கி கவிதை மாதிரி ஒன்றை எழுதிக்கொண்டு எல்லோரையும் துரத்தித் துரத்தி வாசிக்க வைத்து வதம் செய்தேன்.

இப்படியே சென்றுகொண்டிருந்த கவிதை வாசிப்பு ஒருதிடீர் திருப்பத்தில் கவிதைகளை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். கண்டமேனிக்கு கவிதை என்றபெயரில் கிறுக்கி கவிஞர்களை அவமதிக்கக்கூடாது என்று தெளிவுகொண்டேன்.

அதுமட்டுமல்ல, எப்படிப்பட்ட கவிதைகள் ஒருவரை வசீகரிக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். எப்படி கவிதைகளை ரசிக்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல விடலைப்பருவத்தில் அரும்பிய மீசையை காதலித்ததைப் போலவே கவிதைகளைத் தாண்டி காதல் கதைகளையும் உருகி உருகி நேசித்தேன். பழைய புத்தகக் கடைகளில் தேடித்தேடி வாசித்தேன்.

வளர் இளம்பருவத்தின் அடுத்த நகர்வாக துப்பறியும் கதைகளின் தாக்கம் என்னுள்ளே தலைதூக்கியது. அப்போதைய ராணி காமிக்ஸ்தான் எனது அன்றைய அகோர அறிவுப்பசிக்குத் தீனிபோட்டது.https://bookday.in/wp-admin/post.php?post=38278&action=edit

பள்ளிக்கால, நட்பு வட்டத்தில் துப்பறியும் கதைப் புத்தகங்கள் வாசிப்பவர்களை வலிந்து நட்பாக்கிக் கொண்டது மட்டுமல்லாமல், இந்த வாரம் எந்தப் புத்தகம் வெளியாகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன்.

புத்தகம் சார்ந்து பேசுவதும் புத்தகங்கள் வாசிப்பதையும் வாழ்வோடு இயைந்த ஒன்றாகவே எனதுகாலம் கழிந்ததே ஒழிய அதை ஒரு வெட்டி வேலையாக ஒருபோதும் நினைத்ததில்லை.
என்வயதொத்த மாணவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார்கள். அல்லது புத்தகங்கள் வாசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். பள்ளிக் கல்லூரி பாடப்புத்தகங்களைவிட அவற்றைத் தாண்டிய புதுப்புது புத்தகங்களோடு என்னை நானே புதைத்துக்கொண்டது சுகமாக இருந்தது.

ஒவ்வொன்றையும் ஒப்பீடு செய்தும் வேறுபடுத்தியும் கூர்ந்து கவனிக்கவும் புத்தகங்கள் எப்போதும் என்னோடு வழித்துணையாக வந்தன. என் மனதோடு பேசவும், என் மன எழுச்சியை ஆற்றுப்படுத்தவும் புத்தகங்கள் துணைநின்றன.

சம்பாத்தியம் புருசலட்சணம் என்ற சூழலில் சிக்கித்தவித்து வேலை தேடி அலைந்தபோது ஒருவித வெறுமை மனதைக் கவ்விப்பிடித்தபடியே இருந்தது. அக்காலகட்டத்தில் எல்லாம் என் வாழ்க்கை தடம்புரளாமல் வைத்துக்கொண்டது புத்தக வாசிப்புதான்.

இப்போது கிடைப்பதுபோலவே அப்போதும் எனக்கு ஏராளமான நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தையெல்லாம் புத்தகங்கள் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு என்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தன.

புத்தகங்களில் அப்படி என்னென்ன வகையான புத்தகங்களை எல்லாம் வாசித்தீர்கள் என்று கேட்டால் அத்தனை எளிதாகப் பதிலளிக்கமுடியாது. கதைகள் வாசித்தேன். கட்டுரைகள் வாசித்தேன். கதைகளில் காதல் தாண்டி புனைவுகள் இல்லாத இலக்கியங்களை வாசித்தேன். ஒவ்வொரு நகர்வுகளின்போதும் உறுத்தல் இல்லாத உலகத்தை தேடிக்கொண்டே இருந்தேன். இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன்.https://bookday.in/wp-admin/post.php?post=38278&action=edit

வரலாற்றுப் புனைவுகள் ஒருகாலத்தில் கோலோச்சிக்கொண்டிருந்தன. கல்கியும் சாண்டில்யனையும் வாசிக்காதவர்களை ஒரு வாசிப்பாளராக ஒத்துக்கொள்ளவில்லை இச்சமூகம்.
அதற்காகவேனும், புரிந்ததோ இல்லையோ வரலாற்று நாவல்களை வாசித்தேன். எனக்கு இன்ன இன்ன கதைகள் தெரியும் என்று சொல்லிக்கொள்வதையே ஒருவிதப் பெருமை இருந்தது. அதற்கு அந்த காலகட்டத்தில் உரிய அங்கீகாரமும் கிடைத்தது.

என்வீட்டுப் பெண்கள் (சித்தி, அத்தை, அடுத்தவீட்டு அக்கா) லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், விமலாரமணி, வாஸந்தி, என்று எழுத்தாளர்களைத் தரம்பிரித்து வாசிப்பு செய்து கொண்டிருந்த அவர்கள் பேச்சின் மூலம் பெண் எழுத்தாளர்களும் சிறுவயதிலேயே எனக்கு அறிமுகமானார்கள்.

எழுத்தாளர் பாலகுமாரனை எழுத்துச்சித்தர் என்று கொண்டாடினார்கள். நானும் சிறிதுநாட்கள் அந்தமோகத்தில் கரைந்துபோனேன். பின் சுதாரித்துக்கொண்டு மற்ற எழுத்தாளர்களின் எழுத்தையும் ரசிக்கவேண்டும் என்ற ஒருவித வெறியை நானாகவே வளர்த்துக்கொண்டேன்.

அதுமட்டுமல்ல, எல்லோரும் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, எஸ்.பாலசுப்பிரமணியம் என்று ஒருகூட்டம் கொண்டாடிக்கொண்டிருந்தபோது நான் மட்டும் ராஜேந்திரக்குமார் என்ற எழுத்தாளனை என் மானசீக எழுதாளனாக எண்ணிக்கொண்டு மாங்குமாங்கென்று வாசித்துக்கொண்டிருந்தேன்.

தற்போதைய என் எழுத்தில் ராஜேந்திரக்குமார் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். கவிதைப் புத்தகங்களில் மு.மேத்தா, வைரமுத்து ஒரு தனிரகம் என்ற போது, தபுசங்கர் என் பால்யகாலத்து கற்பனையை கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் கட்டி இழுத்து தன்பக்கம் வைத்துக்கொண்டார்.

இத்தனைக்கும் நடுவில் முதல்தலைமுறையில் கல்லூரிக்குச் சென்று ஆங்கில இலக்கியம் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஆங்கில இலக்கியம் அத்தனை எளிதாக என்னுள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறம் என்றாலும் தேர்வுக்காகவேனும் வாசிக்கவேண்டிய நிர்பந்தம்.

ஒருகட்டத்தில் 14ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களான சாசர், சர்ரே, வைட், என்று தொடங்கிய கவிதை வாசிப்பு கொஞ்சம்கொஞ்சமாக ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி, டபுள்யூ.பீ.யீட்ஸ், என்று எல்லையில்லாமல் விரிந்துகொண்டே சென்றது. எல்லாமே தேர்வுக்கான மதிப்பெண் பெறுவதற்காகத்தான் வாசித்துவைத்ததுதான்.

விரிவுரையாளர்கள் ஒவ்வொரு ஆங்கிலக் கவிதையையும் சிலாகித்துக் கொண்டிருந்தபோது அன்றைய காலத்தில் அர்த்தம் தெரிய ஏதேனும் ஒரு பஜார் கைடு தேவைப்பட்டது. கவிதைவரிகளை மனனம் செய்வது பரிட்சை எழுதுவதற்குமட்டும் என்றாகிப்போனது. தேர்வு எழுதிய அடுத்தநாளே அத்தனையும் மறந்துபோனது.

ஆனால் கவிதையை ஓரளவுக்கு ரசிக்கத் தெரிந்த என்னால், முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போராடியதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. புரிந்துகொள்ளமுடியாமல் போனதற்கான சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒரு பின்னணியைக் கொண்டிருந்தன. அதை அறியாமலே அக்கவிதைகளை அணுகியதும் வாசித்ததும்தான் என் பெரும்தவறு என்று பிறகுதான் உணரமுடிந்தது.

எத்தனையோ நாவல்களை ஆங்கிலத்தில் வாசித்தபோதும் தாமஸ் ஹார்டிதான் எனது முதலிடம். இவர்களைப் பற்றியெல்லாம் தற்போது பேசினால் இன்றைய இளைஞர்கள் என்னை ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்த ஜந்துவைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள்.

சரி அப்படி என்னதான் இன்றைய இளைஞர்கள் வாசிக்கிறார்கள் என்று தேடுதல் வேட்டை நடத்தியபோது பாவ்லோ கொய்லோ என்றார்கள். அவர் எழுதிய மொத்த நாவல்களையும் வாங்கிக் குவிக்கத் தொடங்கினேன்.

பிரேசில் எழுத்தாளராக இருந்தபோதும் அவருடைய எழுத்து இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் ஆங்கிலத்தை ஒத்ததாக இருந்ததால் வாசிக்க இலகுவாக இருந்தது. இளம் பெண்கள் சேட்டன் பகத் என்றார்கள். ஒருசிலர் ரவீந்தர் சிங் என்றார்கள். அதையும் முழுமூச்சில் வாசித்துவிட்டு அடங்காப் பசியோடு அடுத்தடுத்து வாசிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்து கொண்டு கல்விசார்ந்த புத்தகங்களை வாசிக்காமல் இருந்தால் பெரும் தவறல்லவா? ஆகவே பள்ளிக்கூடம், ஆசிரியர், குழந்தைகள் என்ற தலைப்பில் எந்தபுத்தகம் வந்தாலும் வாங்கி வாசித்துவிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

மாடசாமியை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டேன். ஆயிசா நடராஜனை கொஞ்சம் ஓரவஞ்சனையோடுதான் வாசிக்கிறேன் இவர்கள் மூலம்தான் பாவ்லோ ஃப்ரைரேவும் அமனஸ் வீலியும் என்னுள்ளே ஊடுருவினார்கள்.https://bookday.in/wp-admin/post.php?post=38278&action=edit

இன்றைய கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசிய வசந்திதேவியையும், சிவகுருநாதனையும், உமா மகேஸ்வரியையும் வாசித்துக்கொண்டே செல்லச் செல்ல கலகலவகுப்பறை சிவா, சிலேட்டுக்குச்சி எழுதிய முத்துக்கண்ணன் என்று ஏராளமான சமகால எழுத்தாளர்கள் வரிசைகட்டி நின்றார்கள். இருக்கிறேன்.

ஸ்.ராமகிருஷ்ணனையும், ச.தமிழ்ச்செல்வனையும், ஜெயமோகனையும், இமயத்தையும், சாருநிவேதாவையும், பவாசெல்லத்துரையையும், பாரதிகிருஷ்ணகுமாரையும் மிகத்தாமதமாகத்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அவர்களின் எழுத்து வேறுமாதிரியானது என்பதோடு இல்லாமல் திரும்பத்திரும்ப வாசிக்க வைக்கும் வசீகரம் அந்தப் புத்தகங்களில் உண்டு என்பதை உணர்ந்துகொண்டேன்.

இதைத்தான் வாசிக்கவேண்டும் என்ற எவ்வித வரைமுறையையும் நான் வைத்துக்கொள்வதில்லை. இதையெல்லாம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்க இளமைப் பருவத்தில் கிடைத்த நட்புகள் தற்போது இல்லை.

அப்படியே தப்பித் தவறி யாரேனும், இதையிதையெல்லாம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்கும் புத்தகங்களில் எல்லாவற்றையும் நான் வாசிப்பதில்லை. ஏனென்றால் அவர்களது ரசனை வேறு. எனது ரசனை வேறு. நானே தேர்ந்தெடுத்த புத்தகங்களில் என்னை ஏமாற்றி சூடுபோட்ட புத்தகங்கள் ஏராளம். ஒருவேளை காலப்போக்கில் எனது ரசனை சற்றே மாறியிருக்கலாம். அல்லது அந்த எழுத்து என்னைக் கவராமல் போனற்கு ஏராளமான காரணமிருக்கலாம்.

மின்னிதழில் எழுதப்படும் எழுத்துக்கள் என்னை ஈர்க்காமல் இல்லை. ஆனால், மொபைல் ஃபோனிலும், லேப்டாப் வெளிச்சத்திலும் வாசிக்கும்போது என் கண்கள் சிலபக்கங்களைத் தாண்டுவதற்கு முன்னதாகவே சோர்ந்துபோய் விடுகிறது. அதுமட்டுமல்ல, மூடிவைத்த பக்கங்களில் இருந்து மீண்டும் தொடர்வது அத்தனை சுலபமாக இல்லை..

தற்போதெல்லாம், நாவல்களும் சிறுகதைகளும் வாசிப்பது குறைந்திருக்கிறது. சமகால எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் எனக்கு அறிமுகமாகிறார்கள். அவர்கள் எழுதிக்கொண்டே அரசியல், இலக்கியம், சமூகம், ஊடகம், என்று வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் எழுத்துக்களையும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது எனது வாசிப்பு.

இன்னும் வாசிக்கவேண்டும். ஒரு நாளுக்கு இத்தனை பக்கங்கள் என்று வாசித்துக்கொண்டிருந்த என்னை சமீபகாலமாக மொபைல் ஃபோன் எனது மதிப்புமிகு நேரத்தை திருடிக்கொண்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

வெறும் காட்சிஊடகங்களை ஒருகட்டத்திற்கு மேல் மீள்நினைவுபடுத்தி கூறவும் முடியவில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் இடமளிப்பதாகவும் தெரியவில்லை.
பலரும் என்னை கேட்கும் கேள்வி எப்படி இத்தனை புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. புத்தக வாசிப்பு என்பது மனம் சார்ந்தது. புத்தகங்களின்மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பு சார்ந்தது.

நான் வாசிக்கும் புத்தகங்கள் என்னோடு வெறுமனே வாய்மூடிக்கொண்டு வருவதில்லை. செல்லுமிடமெல்லாம் என்னோடு தொணதொணத்துக் கொண்டே வழித்துணையாக வருகிறது. எந்த மேடை ஏறிப்பேசினாலும் எனக்கு குறிப்பெடுக்க புத்தகங்கள்தான் உடன்வருகிறது.

வாசிக்கும் பல புத்தகங்கள் என்னோடும் என் கொள்கையோடும் முரண்பட்டாலும் என்னிடம் கோபித்துக்கொண்டு நிர்கதியாய் என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டு விலகிச் செல்வதில்லை.

நான் வெளியேற்றும் மூச்சுக்காற்றில் கொஞ்சம் புத்தகம் சுவாசித்துக்கொண்டும், புத்தகம் வெளியேற்றும் மூச்சுக்காற்றை நான் சுவாசித்துக்கொண்டும் ஒருவருக்கு வழித்துணையாய் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். பேரமைதியைக் கொண்டாடிக்கொண்டும் புலம்பல்களைப் புறம்தள்ளிக்கொண்டும் சென்றுகொண்டே இருக்கிறோம்.

எந்த நிகழ்வாக இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்ல புத்தகங்களை விட்டால் நான் எதைப் பற்றிப் பேசமுடியும்? எனக்கு வழித்துணையாய் வந்த புத்தகங்கள் ஏராளம் இனி வரப்போகும் புத்தகங்களும் ஏராளம். வயோதிகத்தில் வதைபட்டாலும் வழித்துணைக்கு புத்தகமே உடன்வர வரம்வேண்டும் தோழர்களே.

தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




2004 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் “சண்டக்கோழி” படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஏவிஎம், பிரசாத் போன்ற ஸ்டுடியோக்களுக்குள் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. செக்குரிட்டி தொரத்திவிடுவார் அல்லது ஆயிரத்து எட்டுக் கேள்விகள் கேட்பார். அத்தனைக்கும் பதில் தெரிந்திருக்கவேண்டும். ஒரு மார்க் மிஸ் ஆனாலும் உள்ளே செல்ல முடியாது. அல்லது டிப்டாப் ட்ரெஸ் அணிந்து யாரையும் கண்டு கொள்ளாமல் விருவிருவென நடந்தால், விஐபியென நினைத்து விட்டுவிடுவார்கள். சும்மாவே நம்ம ட்ரெஸப் பாத்து நாய் குரைக்குது இதுல எங்க போறது விஐபி கெத்துக்கு. இந்தக் கோடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைப்பேசிக் காலம் வந்தது. ஸ்டுடியோவுக்குள் போகும்போதே ஏதோ முக்கியமான கால் பேசுவதுபோல் ஆக்ட் பண்ணியபடி உள்ளே சென்றால் நம்மை வழிமறிக்க மாட்டார்கள். இப்போது வரை நான் இந்தக் கொள்கையைத் தான் பின்பற்றுகிறேன். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை விஐபி என்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் மட்டும் தான். அது ஒரு பஞ்சாயத்துக் காட்சி ராஜ்கிரண் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் தான் இயக்குநர் லிங்குசாமி என்பது நான் ஏற்கனவே அறிந்ததுதான், ஆனால் அவர் வேலை செய்யும் விதத்தைப் பார்த்ததில் எனக்கு அவர்மேல் இருந்த மரியாதை மேலும் கூடியது. விசால் நாயகனாக நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டது. நண்பர் கவிஞர் ந. முத்துக்குமார் எழுதிய “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” பாடல் பெரிய ஹிட்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

இயக்குநர் லிங்குசாமி என்பவருக்குள் மிகச் சிறந்த கவிஞர் இருப்பார். மிகச் சிறந்த ரசிகர் இருப்பார். அவருக்கு திரைப்பட நண்பர்களுக்கு இணையான இலக்கிய நண்பர்கள் உண்டு. இவ்விரண்டுக்கும் இணையான சாமானிய மனிதர்களின் நட்பும் உண்டு. அத்தனை எளிமை. அத்தனை இனிமை. ஒரு நாள் அவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. நான் எனது ஹைக்கூ நூலான “ஹைக்கூ தோப்பு” ஐ அவருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றேன். அவரை நான் சந்திக்கிறவரையிலும் எனக்குள் முதன் முதலில் நான் அவரை நேரில் பார்த்த “சண்டக்கோழி” படப்பிடிப்பும் அவரது பரபரப்பும் மட்டுமே வந்து வந்து போனது. அலுவலகம் கலையால் நெய்யப்பட்டிருந்தது. அவரது அழகிய மனம் போல் அலுவலகமும் இருந்தது. அடுத்தபடியாக அவரின் மூன்றாம் கை இயக்குநர் கவிஞர் பிருந்தாசாரதி அண்ணன் அலுவலகத்தை அலங்ரித்துக் கொண்டிருந்தார்.

எனது “ஆத்தா ஓஞ்சேல” பாடலை மனம் திறந்து பாராட்டினார் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உச்சபட்ச பாராட்டுக்குமேல் ஒன்றிருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது எனக்கது. பின்பு எனது சில திரைப்பாடல்கள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகளை சிலாகித்தார். நான் எனது நூலை அவருக்களித்தேன். அவர் அவரது “லிங்கூ” எனும் அழகிய நூலை எனக்களித்தார். பல பேச்சுக்கள் ஓடின. இறுதியாக அழைத்த விசயம் சொன்னார், நான் தற்போது இயக்கும் படத்தை முடித்துவிட்டு “சண்டக்கோழி – 2” எடுக்கும் திட்டம் இருக்கு,. அதில் நீங்கள் ஒரு பாடல் எழுதவேண்டும் என்றார். என் மனம் அப்போதே என் காலில் கத்தியைக் கட்டி களம் இறங்கத் தயாராகியது.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “சண்டகாகோழி – 2” தொடங்கியாச்சு வாருங்கள் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோ என்றார். அது ஓர் இரவு சந்திப்பு. வந்து சிறிது நேரம் காத்திருப்பின் பின் நண்பர் யுவன் சங்கர் ராஜா வந்து கீபோர்டில் விரல்கள் பாவ, மெட்டு ஈரத்தரையாய் இதம் வார்க்க, “கம்பத்துப் பொண்ணு கம்பத்துப் பொண்ணு” சொற் பூக்கள் உதிரத்தொடங்கின. சரியாக ஓர் இரண்டுமணி நேரத்தில் பாடல் ரெடியானது. அந்த வாரத்திலேயே குரல் பதிவு நடந்தது. யுவன் சங்கர் ராஜா கொஞ்சிக் கொஞ்சிப் பாடித் தந்தார். பாடலைக்கேட்ட அண்ணன் லிங்குசாமி அவர்கள் என்னைக் கட்டியணைத்து எனக்கு ந.முத்துக்குமார் கிடைச்சிட்டார் என நெகிழ்ந்தார். நான் சிறகடித்தேன். அவருக்கு “தாவணி போட்ட” தீபாவளியைப் போல் குறைவின்றி ஒரு பாடல் வேண்டும் என்பது இலக்கு. ந.முத்துக்குமார் இல்லாததால் நடந்தேறாமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் இருந்திருக்கிறது அவருக்கு. அது இப்போது அறவே இல்லை. “பாம்பாட்டம் ரெட்ட சடடா” வரியை கொண்டாடினார். படப்பிடிப்பில் பலமுறை கதாநாயகன் விசால் ரசித்தது “ஈசல் றெக்கை பிச்சு வந்து இதயத்த நெஞ்சுக்கிட்ட” வரியை என அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம். படத்தில் அந்தப் பாடலை மிக அழகாய் விஷுவல் செய்திருப்பார்கள். அந்த திருவிழா கூட்டத்தில் விசாலும் கீர்த்தி சுரேஷும் மான்கள் போல் ஓடி கொஞ்சுவது பார்ப்பவர்களையும் காதலிக்கச் சொல்லும்.https://bookday.in/paadal-enbathu-punaipeyar-webseries-24-writter-by-lyricist-yegathasi/

பல்லவி:
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்குற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

ஆலமரத்து எலடா
அவ கன்னக் குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டச் சடடா – இப்போ
பாக்குது என்னத் தொடடா

அடடடட…
மஞ்ச செவப்புக் கண்ணாடி போல
என்ன நீ சாய்க்காத
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரிப் பூரா தூங்கல

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

சரணம் – 1
தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
அம்மியா அரைக்கிற ஆளா நீ அசத்துற
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்தப் பாச்சுற

சவ்வு மிட்டாயி வாட்சப் போல
என்னதான் கட்டிக்கிட்ட – அடி
குச்சி ஐஸு கறையப் போல
சட்டையில ஒட்டிகிட்ட

கடுங்காபி இதம் போல
மனச நீதான் ஆத்துற
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

சரணம் – 2
ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்கறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலப் போல மனச நீயும் ஆட்டுற

பஞ்சு மிட்டாயி ரெண்டத் திருடி
கன்னத்தச் செஞ்சுக்கிட்ட – அடி
ஈசல் றெக்கையைப் பிச்சு வந்து
இதயத்த நெஞ்சுக்கிட்ட

ஆத்தாடி காத்துல
உன் பேரத்தான் கூவுறேன்…
கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

கம்பத்துப் பொண்ணு…
கம்பத்துப் பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூருக் காத்து சூறாளி போல
புழுதிப் பறக்கத் தாக்குற

கம்பத்துப் பொண்ணு… ஏ
கம்பத்துப் பொண்ணு…

இந்தப் பாடலுக்கு சிங்கப்பூரில் கூடுதலான வரவேற்பும் கொண்டாட்டமுமாம், நான் இயக்கிய முதல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் சொன்னார். காரணம் “கம்பம்” என்பதற்கு கிராமம் என்பது அங்கே பொருளாம். அப்படியெனில் அந்தப் பாடல், “கிராமத்துப் பொண்ணு…
கிராமத்துப் பொண்ணு…” என்ற அர்த்தத்தில் தங்கள் மொழியில் முதல் வரி அமைந்தவண்ணம் வந்துள்ள பாடலென மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இந்தப் பாடலுக்காக 2018 ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் V4 அவார்ட் எனக்குக் கிடைத்தது. இந்த விருது நிகழ்விற்குத்தான் நான் முதன்முதலாக குடும்பத்தோடு சென்றிருந்தேன். விருதைப் பெற்று நான் பேசியது,

“பாட்டெழுத வாய்ப்பளித்த அண்ணன் லிங்குசாமி அவர்களுக்கும், விருதுக் குழுவினருக்கும் மற்றும் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்காமல் பாட்டெழுதும் சம்பளத்தில் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு, கதை கவிதை பாடலெனச் சுற்றித்திரியும் ஒரு பைத்தியத்தை இத்தனை ஆண்டுகளாக பொறுத்தருளும் என் குடும்பத்திற்கும் என் நன்றி”

மதம் மாறுவது ஒரு குற்றச் செயலா? கட்டுரை – தங்கராசு

மதம் மாறுவது ஒரு குற்றச் செயலா? கட்டுரை – தங்கராசு



மாதா

இந்தியாவில் மதம் மாறுவோர் பிரச்சனைகளின் வேர்கள் சாதிய கட்டுமானத்திலும், அதன் பாகுபாடான நடைமுறையிலும் உள்ளது. சாதிக் கொடுமைகளை ஒழிப்பது, தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் தரமான இலவசக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி அனைவருக்கும் இலவச மருத்துவம், அனைவருக்கும் ஊட்டச் சத்துடன் கூடிய உணவு, வேலை வாய்;ப்பு போன்றவற்றை அளித்தால் மதம் மாறுவது குறையும். இவைகளெல்லாம் மதமாற்றத்தைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், நாட்டில் பெருகிவரும்
வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஒழிக்கப் பயன்படும். சில மத அடிப்படைவாதிகள் மாற்று மதத்தினரை வன்முறை மூலம் கையாளுகிறார்கள். வன்முறைக்கு வன்முறையும் பதிலாக இருக்க முடியாது. கோபம், வெறுப்பு, பேராசை, சுயநலம், குரோதம், நிறைந்துள்ள உலகில் அன்பு, கருணை, இரக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் இவற்றையே உயர்ந்த அறங்களாக மதங்கள் போதிக்கின்றன. அன்பினாலும், தன்னலமற்ற சேவையினாலும் மக்களை வெல்ல முடியும். ஆனால் நாம் ஒவ்வொருவரும் இவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்பதே நமக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டிய வினா.

தேசிய அளவில் கிறிஸ்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் 48 சதம் பேரும், பழங்குடியினரில் 14 சதம் மக்களும், பிற்பட்ட சாதியில் உள்ள 26 சதம் பேரும் முன்னாள் இந்துக்களே. தாழ்த்தப்பட்ட மக்களில் சரி பாதிப் பேர் தங்களது சொந்த மதத்திலுள்ள ஆதிக்க சக்திகளின் சாதிய, தீண்;டாமைக் கொடுமைகளால் கிறிஸ்துவத்திற்கு மாறியுள்ளார்கள். இந்தியாவிலுள்ள இருபது சதமான மக்கள் இன்றும் சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

குறிப்பாக வட இந்தியாவில் ;கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித் பெண்கள் மீது வல்லுறவும், வன்முறையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வோரு இந்துவும் தனக்கு கீழிருக்கிற சாதிகளை ஒடுக்குகிறார்.

தேவாலயங்கள் எந்த மத மாற்றத்தையும் ஊக்குவிக்கவில்லை. மதம் மாறி நடந்த திருமணத்தைக் கூட சிறப்புத் திருமண சட்டத்தின் படி பதிவு செய்யப்படுகிறது. கிறித்துவர் அல்லாத மணமக்களை அவர்கள் சொந்த மதத்தின்படியே கடைப்பிடிக்கச் சொல்கிறோம் என்று கிறிஸ்துவ அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மதத்திலுள்ளவர்கள் மற்ற மதத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்ற உணர்வோடுதான் வாழ்கிறார்கள். புறவய மணமான மதம் மாறிய திருமணங்களை எந்த சமயத்தாரும் தங்கள் மதத்தில் நிகழ்ந்த அவமானமாகவே
நினைக்கிறார்கள். மதப் பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் மற்ற மதித்தவரைச் சகோதரராக ஏற்றுக்கொள்வதில்லை. மதங்களுக்குள் ஆழமாக வேரூன்றி, அவற்றை இயக்குவது சாதியப் படி நிலைகளே. ஆகையால் மத மாற்றத் தடைச் சட்டம் மூலம் மதம் மாறுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 25வது பிரிவு, ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுத்துவ ழிபடவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை வழங்குகிறது என்றாலும், எவரும் ஒருவரையும் மதம் மாற கட்டாயப் படுத்துவது தவறான செயலாகும்.
மதம் மாற வேண்டும் என்ற உணர்வு அவர் அடி மனதிலிருந்து தன்னிச்சையாக எழ வேண்டும். மாற்று மதத்திற்கு வருவோரின் தரம்தான் முக்கியமே தவிர, அவர்களின் எண்ணிக்கை அல்ல. ஆனால் ஒருவர் மதம் மாறிவிட்டால் மட்டும் அவருடைய வாழ்வில் சுபிட்சம் வந்துவிடாது. அதே வேளையில் மத மாற்றத்தைத் தடுப்பதற்கு குற்றவியல் சட்டம்தான்
தீர்வா?

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகளைக் கிறிஸ்துவ சமுதாயம் நடத்தி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவர்கள் பட்டம் பெற்று அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் பணியில் சேர்ந்து பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் நடத்தும் மருத்துவ மனைகளில் சாதி, மத, இன, மொழி பேதமின்றி நாள்தோறும் லட்சக்;கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கிறார்கள். இவர்களில் எவர் ஒருவரையாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள யாரும் வற்புறுத்தவில்;லை. மநுவின் பெயரால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வகுப்பறைகள் உருவாக்கி கல்வி புகட்டியது மிஷனரி பள்ளிகளே. எந்த குருகுலமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வழங்கவில்;லை.. சு+த்திரர்களுக்கு பெருந்தெய்வ வழிபாடு மறுக்கப்பட்ட போது, தேவாலயங்களைத் திறந்துவிட்டு தேவகுமாரனைத் தரிசிக்கச் செய்தவர்களும் கிறிஸ்தவர்களே.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் திருமதி.வசுந்தரா ராஜே சிந்தியா, தற்போதைய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, பியு+ஸ்கோயல், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதாப் சின்கா போன்ற பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெற்றவர்களாவார்கள். மேற்கண்ட மிஷனரி பள்ளிகளில் கல்விகற்போர் பெரும்பான்மையினர் இந்து மாணவர்களே. இந்த விபரங்கள்
அடிப்படையில் தான் தஞ்சை மாவட்டம் மிக்கேல் பாளையம் கிறிஸ்தவப் பள்ளியில் நிகழ்ந்த பிரச்சனைகளைப் பார்க்க வேண்டியுள்ளது.

சாக்ரடீசுக்கு; மரண தண்டனையும், மகத்தான அறிவியலாளர் கலிலியோவை சிறையில் அடைத்ததும், புருனோவை உயிரோடு கொளுத்தியதும் மதத்தின் பெயரால் நடந்த கொடுஞ்செயல்கள். கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்ற மதக் கோட்பாட்டிற்கு மரண அடி கொடுத்த சார்லஸ் டாhவினின் பரிணாமக் கோட்பாட்டைக் கிறிஸ்தவ சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. அண்மையில் தான் போப்பாண்டவர் அதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.. ;இது வரை மனிதர்கள் நடத்திய யுத்தங்களில் மடிந்த வீரர்களை விட, இயற்கை பேரிடர்களான பூகம்பம், புயல், பெருவெள்ளம் இவற்றில் இறந்தவர்களை விட மதக் கலவரங்களால் கொல்லப்பட்ட மக்களே அதிகம் என வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
மத மோதல்கள் இன்று வரை தொடர்கின்றன. இடைக்காலத்தி;ல் 200 ஆண்டுகள் விட்டு விட்டு கொடூரமான சிலுவை யுத்தங்கள் நடந்தன. கிறிஸ்துவத்தில் கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட் என்றும், இஸ்லாம் மதத்தில் ஷியா, சன்னி என்றும் கடும் சச்சரவுகள் நடந்தன. சமண-புத்த-பிராமணிய மதங்களுக்கிடையே கடும் மோதல்கள் நடந்தன. சமண, பௌத்தத்தின்
வீழ்ச்சிக்குப் பிறகு பிராமணிய மதத்திற்குள் சைவ- வைணவ மோதல்கள் நிகழ்ந்தது. அதிகாரக் கட்டமைப்பும், வழிபாட்டு முறைமைகளும் மதக் கட்டமைப்பைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அதனால் தான் மத பீடங்களிலிருந்து இன்று வரை அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் வெளிவரவில்லை .

மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும். சொர்க்கம், நரகம், லோகம், பரலோகம் இருப்பதாக சொல்லப்பட வேண்டும். கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள் அவதரித்த கதை வேண்டும். அதிகாரம் மிக்க மத குருமார்களும், சுவாமிஜிகளும், சாதுக்களும் இருந்தாக வேண்டும். ஆதி மனிதன் யுகத்தில் உருவான கடவுள்- மத நம்பிக்கை, ஆண்டான்- நிலப்பிரபு யுகங்களில் நிறுவனமயமாக நிலை பெற்றது. முதலாளித்துவ யுகத்திலும் தொடர்கிறது. பொருள் சார்ந்த முக்தி கிடைக்காது ஏமாந்து போயிருந்தவர்கள் அனைத்து வர்க்கங்களிலும் இருந்தார்கள். மனம் சார்ந்த முக்தியாவது கிடைக்காதா என்று ஏங்கினார்கள்.

பொருளாதாரம், அரசியல், ஒழுக்கம் சார் துறைகளில் சரிவு ஏற்பட்டிருந்த சு+ழலில்தான் மதம் உருவாகியது. மதங்களின் தோற்றத்திற்குப் புற-அகச் சு+ழல்காரணமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு மதத்தின் தோற்றத்திற்கும் பொதுவாக வெகுமக்களின் ஆவலாதியே காரணமாக இருந்தது.

இந்தியாவில் 800 ஆண்டுகள் மொகலாயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்து மதம் அழிக்கப்படவில்லை. 250 ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில் எந்த மதத்தையும் அழிக்கவில்லை. மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர்களுக்குச் சேவை செய்வதற்காகக் குமாஸ்தாக்களை உருவாக்கக் கொண்டுவரப்பட்டாலும், கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கும், பிற்பட்ட வகுப்பினருக்கும் கல்வி வழங்கினார்கள். வகுப்பறை என்ற அமைப்பே 150 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.. ஐரோப்பாவிலிருந்து மதப் பிரச்சாரர்கள் இங்கு வந்தாலும், வாழ்நாளின் பெரும்பகுதியைக் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலுமே செலவிட்டார்கள்.

பக்தி இலக்கிய காலத்தில் திருநாவுக்கரசர் பல பிரதேசங்களுக்குச் சென்று மத மாற்றம் செய்தார். சமணப் பள்ளிகளை இடிக்கச் செய்து, அரசரின் உதவியுடன் சைவக் கோவில்களை எழுப்பினார். அந்தக் காலத்தில் நாட்டை ஆளும் மன்னர்கள் மதம் மாறினால் குடிமக்களும் மதம் மாறியவர்களாகவே கருதப்படுவார்கள். வேறு மதத்தைப் பின்பற்ற முடியாது. தென்னிந்தியாவில் முதன் முதலில் மத மாற்றத்தை நிகழ்த்தியவர் நாவுக்கரசரே. அதனால்தான் இன்றளவும் சமயவாதிகளால் போற்றப்படுகிறார்.

உலகில் அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி, செயலாக இருந்தாலும் சரி வகுப்புவாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்து விதமான வகுப்பு வாதங்களும் மத அடையாள உணர்வுடன், தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. மதத்தை, அரசியல் வாழ்வின் அனைத்துவிதமான வடிவங்களிலும் தனிமைப் படுத்தினால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் குறைந்த அளவிலியே இருக்கும். இங்கு மதம் என்பது அரசியல் வழியாக, அதிகாரம் வழியாக நிலைநிறுத்தப்படுகிறது. மதம் சார் அரசியல் எல்லோரி;டமும் பரப்பப்படுகிறது. மத நம்பிக்கை முக்கியமல்ல. மதத்தின் மெய்யறிதல் முக்கியமல்ல. மத அடையாளம் மட்டுமே முக்கியம். இந்த அடையாளத்தைச் சு+டிக்கொண்டு பெருந்திரளாவது மட்டுமே தேவை. அதனூடாக அதிகாரத்தை அடைவது ஒன்றே இலக்கு.

உலக மக்கள் தொகை 790 கோடியில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மத நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். இவர்கள்தான் அங்கு தொல்லியல் பொருட்களையும், பாரம்பரியத்தையும், மரபுக் கலைகளையும் பாதுகாக்கிறார்கள். சமூக அறங்களை உயர்த்திப் பிடிப்பது, சுற்றுச் சு+ழலை பாதுகாப்பது இவர்களால் தான் நடக்கிறது. சமய நம்பிக்கை இல்லாத பகுதிகளில் குற்றச் செயல்கள் மிகக் குறைவாக இருப்பதோடு, மதத்தைப் பின்பற்றுபவர்களை விட, மதமற்ற மக்களே மகிழ்ச்சியாகவும், நிறைவான வாழ்க்கையும் வாழ்கிறார்கள்.

முகவரி
மாதா
மே-பா மா.தங்கராசு
75- கிழக்கு தெரு
சக்கம்பட்டி
ஆண்டிபட்டி- அஞ்சல்
தேனி- மாவட்டம் 625512
செல்- 9442452505

நாடிய உள்ளம் கவிதை – சக்தி ராணி

நாடிய உள்ளம் கவிதை – சக்தி ராணி




எங்கிருந்தோ…வந்த பறவை…
என் மீதுள்ள
நம்பிக்கையால்…
என் இல்லத்தில் கூடு அமைக்க…

வராத விருந்தினர்…
வருகை புரிந்தது போல்
ஒவ்வொரு நாளும் அதன்
நலம் விசாரித்தே…
அன்பாய்…உறவாட…

சுற்றங்களின் எண்ணிக்கை
அதிகரித்தது போல்…
முட்டையிட்டு…அடைகாக்க

காத்தலின் பயனாய்…
குஞ்சுகளும் ஒவ்வொன்றாய்
புது உலகைக் காண…வெளி வர

ஒவ்வொன்றிற்கும் பெயர்
வைத்தே…அன்போடு உறவாடி
தாய்ப்பறவை ஊட்டும் அழகை…
இமைக்காமல் ரசித்தே…
பொழுதைக் கடத்திட…

வளர்ந்த பறவைகளும்…
சிறகு விரித்த பயனாய்…தன்
வாழ்க்கை தேடிச்சென்றே…
வலசை போக…

கூடும்…நானுமாய்…
காத்திருக்கிறோம்…என்
இல்லம் நாடி வராவிடினும்…
என் உள்ளம் நாடும் என்றே…

சக்தி

கலையின் கவிதைகள்

கலையின் கவிதைகள்




இயற்கையும் மனிதனும்
****************************
குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும்
கோழிகளுக்குத் தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது
எப்படியென்று
நாம்தான்
எப்போதும் கற்துகளிலே!
***************************
வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும்
கூடு நனைந்து போனதற்காக
போக்கிடமில்லையென புலம்பியழுததில்லை
உலா போய்க்கொண்டுதான் இருக்கின்றன…

நல் மண்ணில் வாழும்
கரையான் காற்று மழையில் கரைந்தாலும்
உறைந்து போக வில்லை
விரைந்து
கரையெழுப்பி வாழுகிறது …

வழிகளிருந்தும்
விழிகள்தான் செல்வதில்லை செல்லாதவற்கு!

-கலை

கானல்வரிகள் சந்திப்பதில்லை கவிதை – புதியமாதவி

கானல்வரிகள் சந்திப்பதில்லை கவிதை – புதியமாதவி




யுகங்களின் சூரியக்கதிர்கள்
அவள் மேனியில் விதைத்த
வேர்வையின் துளிகள் பெருகி
அலைகளாயின.
அடங்காத அலைகளுக்கு அடியில்
அவள் பனிக்குடம் நிரம்பி
பூமி பிரசவிக்க ஆரம்பித்தது.
அவள் கடற்கரைக்கு வந்தாள்.
பட்டினப்பாக்கம் அசதியில்
தூங்கிக்கொண்டிருந்தது.
கானல்வரி பாடிப் பிரிந்தவர்கள்
சந்திக்கவே இல்லை.
உடைந்து கிடந்த யாழின் நரம்புகளில்
துடித்துக்கொண்டிருந்தது
இன்னும் பாடாத பாடலின் இசை.
பறந்தலை அவள் நரம்புகளைக் கிழித்து எறிந்து
கருப்பையில் பசியாறிக்கொள்கிறது.
உழிஞை மரத்தடியில்
அவள் இப்போதும் காத்திருக்கிறாள்.

புதியமாதவி