எண்: 9
மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்
தேசிய பாதுகாப்பு
சொன்னது
‘இந்தியாவின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்துதல்; உள்நாட்டு/வெளிநாட்டு பாதுகாப்பில் சமரசமற்ற அணுகுமுறையை அறிமுகப்படுத்துதல்’
‘நமது பாதுகாப்புக்கான கருவிகளை மேலும் உள்நாட்டுமயமாக்கும் வகையில், பாதுகாப்புத் துறையில் ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ என்ற முன்முயற்சியை வளர்த்தெடுத்தல்.
– 2019ஆம் ஆண்டில் பாஜகவின் தேர்தல் அறிக்கை
உண்மை நடப்பு
தேசிய பாதுகாப்பு என்பது வெறுமனே பாதுகாப்பு அல்லது இராணுவ பாதுகாப்பு என்பதை விட, மிகவும் விரிவான ஒரு கருத்தாகும். பொருத்தமான வெளிநாட்டு உறவுகள், முக்கியமான துறைகளில் சுயசார்பு மற்றும் யுத்த தந்திரங்களில் சுயாட்சியைப் பேணுவதற்கான திறன் ஆகியவற்றுடன் இணைந்தாலொழிய இவை இரண்டுமே முழுமையான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. நடைமுறை என்பது மேலே கூறப்படும் கோரிக்கைகளுக்கு நேர் எதிரானது.
பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பில் தோல்வி மற்றும் தவறாக வழிநடத்தும் “ஆத்ம நிர்பர்தா”
பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொதுத்துறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்கும் பணியை மேற்கொண்டது.
தானியங்கி முறையின் கீழ் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டையும், வழக்கு வாரியாக 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்கும் ஒரு புதிய கொள்கை
அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்புத் துறையில் தனியார் துறை செயல்படக்கூடிய கூடுதல் பகுதிகள், குறிப்பாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் ‘யுத்த தந்திர ரீதியான பங்காளிகளாக’ அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் தனியார் துறையை தவறாக நம்பியிருப்பது பாதுகாப்புத் துறையில் தற்சார்பை பல ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும், இந்தியா இறக்குமதியில் பெரும் தொகையை செலவழித்துள்ளது.
மேலும் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதும் அதிகரித்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பெரும்பாலான கருவிகள் டிஆர்டிஓ, எச்ஏஎல், பிஇஎல், பொதுத்துறை நிறுவன கடற்படை கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பிற பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வந்தவை.
இதற்கிடையில், இந்தியாவின் இறக்குமதி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மேம்பட்ட உபகரணங்களுக்கான பெரும்பாலான ஆர்டர்கள், குறிப்பாக அமெரிக்காவிலிருந்து, தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லாமல் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன.
பலவீனமாகும் நமது ஆயுதப் படைகள் இராணுவம் அரசியல்மயமாக்கப்படுகிறது. அதன் தொழில்முறை ரீதியிலான செயல்பாடு மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இத்தகைய நெறிமுறைகளையும் செயல்முறைகளுமே அதன் போரிடும் சக்திகளிடையே ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறது. முடிவெடுத்தல் என்பது அரசியல் தலைமையின் மூலம் அதிகமான அளவில் மையப்படுத்தப்பட்டு வருகிறது. இது, எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அதன் சில படைத் தலைவர்கள், பிற மூத்த அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்களைக் கலந்தாலோசிக்காமல் கூட, புதிய அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தை திடீரென அறிமுகப்படுத்தியது இராணுவத்தின் கட்டமைப்பு, ஒழுக்கம் மற்றும் மன உறுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் முறையாக பயிற்சி பெற்ற வீரர்களின் தேவையினை சுமார் 25 சதவீதம் குறைக்கும். ‘அக்னிவீரர்கள்’ மற்றும் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்களுக்கு இடையிலான குறைந்த மற்றும் வித்தியாசமான ஊதியமும் ராணுவப்படையைப் பிளவுபடுத்தி, அதன் ஒற்றுமையை பலவீனப்படுத்தும்.
சேவைகளை “இந்தியமயமாக்கும்” சமீபத்திய நகர்வுகள் இராணுவத்தில் கலாச்சார சார்புகளை அறிமுகப்படுத்தக்கூடும், மேலும் வகுப்புவாத அல்லது பிற பிளவுபடுத்தும் உணர்வுகளையும் அது பரப்பக்கூடும். படைப்பிரிவுகளின் தொன்றுதொட்ட மரபுகளைத் தொந்தரவு செய்யலாம். மேலும் கணிக்க முடியாத இதர விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
வடக்கு கிழக்கில் நிலையின்மை
பங்களாதேஷ் மற்றும் மியான்மருடன் சிக்கலான எல்லைகளைக் கொண்ட கிட்டத்தட்ட முழு வடகிழக்கு பிராந்தியத்தையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சீர்குலைத்துள்ளது. மணிப்பூரில் பாஜகவின் வகுப்புவாத சூழ்ச்சியானது, மாநில போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளை ஒரு கூர்மையான பிளவுக்குள் இழுத்தது.
பா.ஜ.க.வின் இனவெறி வடகிழக்கில் பெரும்பாலான மக்கள் பிரிவினரை அந்நியப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு ஏற்கனவே பலவீனமாக உள்ள அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் அமைகிறது. மத்திய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறையால் இது மேலும் மோசமடைந்துள்ளது. மியான்மருடனான எல்லைகளில் வேலி அமைக்கவும், சிஏஏ / என்ஆர்சியை அமல்படுத்தவும் எடுத்த முடிவு வடகிழக்கில் மேலும் அதிருப்தியை பரப்பி மக்களிடையே வேற்றுமை உணர்வுகளைத் தூண்டுகிறது. இது சமாதானத்தையும் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் ஆபத்தான ஒரு வெடிமருந்துக் கிடங்காக வடகிழக்குப் பகுதியை மாற்றியுள்ளது.
நிலையின்மைக்கு ஆளாகும் ஜம்மு காஷ்மீர்
இராணுவ ஒடுக்குமுறை மற்றும் நேரடி மத்திய ஆட்சி திணிக்கப்பட்டும் கூட காஷ்மீரில் பரவலான கோபம் இப்போது கண்ணில் படாமல் மறைந்துள்ளது. மத்திய அரசின் பிரதிநிதியான லெப்டினன்ட் கவர்னர் வெளியாட்களுக்கு உரிமம் வழங்குவதிலும், லே மற்றும் கார்கிலை சதுப்பு நிலமாக்குவதிலும் எடுக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் இதுவரை இப்பகுதி மக்களால் ஆர்வத்துடன் பாதுகாக்கப்பட்ட கலாச்சாரம் மற்றும் சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
மோசமடையும் அண்டை நாட்டு உறவுகள்
இந்தியாவுக்கு அதன் அண்டை நாடுகளில் சில நண்பர்கள் உள்ளனர். பா.ஜ.க அரசாங்கத்தின் கீழ் இலங்கை, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான நமது உறவுகள் தற்போது மோசமடைந்துள்ளன. சமீப காலமாக மாலத்தீவு கூட நம்முடன் பகைமை பாராட்டி வருகிறது. மோடி அரசாங்கத்தின் வலிமையான வெளியுறவுக் கொள்கை என்று கூறப்படுவது, இந்தியாவின் நட்பையும் அண்டை நாடுகளுடனான பாதுகாப்பு நலன்களையும் மோசமாக பாதிக்கிறது.
உலகளாவிய வளரும் நாடுகளுடனான உறவுகள்
ஒரு சில பரிவர்த்தனை வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா அல்லது கிழக்கு / தென்கிழக்கு ஆசியா – உலகளாவிய வளரும் நாடுகள் உடனான உறவுகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகள், ஒரு நட்பு நாடு என்ற நமது நற்சான்றிதழை உலகளாவிய பல வளர்ந்துவரும் நாடுகளை சந்தேகிக்க வைத்துள்ளது. இதன் விளைவாக, நம் நாட்டின் யுத்த தந்திர நலன்கள் மற்றும் பாதுகாப்பு நலன்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாஜக அரசின் கொள்கைகள் நாட்டை சீர்குலைத்து, நமது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மோசமாக பாதிக்கின்றன. அண்டை நாடுகளுடனான நமது உறவு மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நெருக்கமான உறவுகள் உலகின் வளர்ந்து வரும் நாடுகளுடனான நமது உறவுகளை பாதிக்கின்றன.
தேசிய பாதுகாப்பை மீட்டெடுப்போம்!
பாஜகவை தோற்கடிப்போம்!
Communist Party of India (Marxist)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.