அந்த வான் கனியை
வெட்கத்தில்நீந்த வைத்தது
உன் மந்தகாசம்
உருளும் திவலைகளில்எல்லாம்
உனது குறுநகை
சொட்டுச் சொட்டாய்..
உன்செவ்விதழ் வழி வழிந்த
அமுதம் என்னிடம்
தீரத்தமானது.
ஆணிவேர்களை அசைத்து
ஆலிங்கனம் செய்யும்
சீகரம்
தடுப்பாடையை
நீக்கத்தயங்கும்
என்னைப் புறந்தள்ளி
உன்னுள் புகுந்து கூத்தாடும்
மாஆலி
– யாழ் எஸ் ராகவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

