அ.சீனிவாசனின் கவிதைகள்
*******************************************
1.
கண்களை அகலத் திற—
எந்த கதவு மூடியிருக்கிறது
என்று ஒரு கை பார்த்துவிடலாம்.
*******************************************
2.
உன்னை நம்பு;
கட்டாயம் உன்னால்
என்னை நேசிக்க முடியும்!
*******************************************
3.
யாரும் இல்லாதபோது
கடவுள் தான் கிடைக்கிறார்—
சண்டை போடுவதற்கும்.
*******************************************
4.
நீ என்னை நேசித்தால் என்ன செய்வேன்?
உன்னை நேசிப்பேன்.
நீ என்னை நேசிக்காவிட்டால் என்ன செய்வேன்?
உன்னை நேசிப்பேன்.
*******************************************
5.
என் பக்கம் யாருமில்லை என்று
ஆரம்பத்தில் கவலைப்பட்டேன்.
என் பக்கம் என்பக்கம் இருக்கிறது—
அதுவே என் பக்கம்!
பிறகு என்ன கவலை?
*******************************************
6.
இல்லாதவர்கள் சொல்வார்கள்—
“மடியில் கனமில்லை,
வழியில் பயமில்லை.”
இல்லாததால் தான் சொல்வார்கள்—
“மடியில் கனமில்லை,
வழியில் பயமில்லை.”
*******************************************
7.
“இல்லை” என்று சொல்லிவிட்டு
வேறு வேலையைப் பார்க்க முடியாதபோது—
அங்கு ஏதோ இருக்க
ஆரம்பிக்கிறது.
*******************************************
எழுதியவர் :
✍🏻 அ.சீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

