ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - poem - Tamil Kavithaikal - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள்

1. பலியாக்கிவிடும் பாசம்.
********************************

நிராகரிப்பின் அக்கிரமத்தால்
சிதைந்து போன
காதலில்
துளிர் விடுகிறது
சமூக அவலம்
வரலாற்றுத் துயரமாக
பெற்ற கடனைத் தீர்க்க
உணர்வுகளை கொன்றொழித்தப் பொழுது.
***

2. மீச்சிறு ஏக்கம்
*********************

வெறுமையினூடாக விழுந்ததை
தேடிக்கொண்டிருக்கும் பொழுது
கையில் சிக்கியது
கருணை தான்.
பொழச்சுப்போ
மறுமுறையாவது
தரித்த கோலத்தின் பொருட்டாவது
மனிதனாக வா.

அப்பொழுது
கிடைப்பது
ஆயுதமாக இருந்தால்
என் மீது வருத்தப்படாதே
தவறு என்னுடையதல்ல.
இம்முறையும்
என்னைக் குனிய வைத்து
எடுக்க வைத்தது
நீதான்
பாரிய வாஞ்சையை
ஒதுக்கி.
***

எழுதியவர்:

ரவி அல்லது

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *