ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan) எழுதி காக்கைக்கூடு பதிப்பகம் வெளியிட்ட "காட்டின் கதைகள்" (Kaatin Kathaikal) - புத்தகம் ஓர் அறிமுகம்

ஆதி வள்ளியப்பன் எழுதிய “காட்டின் கதைகள்” – நூல் அறிமுகம்

காட்டின் கதைகள்:- நம்மை விட காடு நிஜமானது

– பி.சந்தோஷ்

கோடை விடுமுறையில் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று இருந்தேன். எங்கள் பள்ளியில், குமரசாமி நினைவு நூலகத்தில், எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய காட்டின் கதைகள் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

இந்தப் புத்தகத்தை ஒரே நாளில் வாசித்தேன். இயற்கையைக் குறித்து, முக்கியமாகச் சுற்றுச்சூழல் குறித்து எழுதப்பட்ட சிறிய நூல் இது.

புத்தகத்தில் முன்னுரை இல்லை. புலிக்குக் கிச்சுகிச்சு மூட்டிய தாத்தா, நீலாவின் காடு, வினோத சிட்டுக்குருவிகள், தினமும் என்னை பார்க்க வந்த கிளி ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இருந்தன.

முன்னுரையும் பதிப்புரையும் இல்லாமல் புத்தகம் இருந்தது. மின்விசிறிக் குழிக்குள் கூடு வைத்துக் குஞ்சு பொரிக்கும் சிட்டுக்குருவி என்ற ரஞ்சித் லாலின் பின்னட்டைக் குறிப்பு எனக்குப் பிடித்திருந்தது.

நீலாவின் காடு பகுதியை வாசித்தேன். என் அத்தை வீடு திருச்சுழியில் இருக்கிறது. திருச்சுழியில் இருந்து கும்பகோணம் வரும்போது முதல்முறையாக காட்டைப் பார்த்தேன். ரயிலில் வரும் பொழுது இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு வந்தேன். மயில், மான்கள் புல்வெளியில் நடந்து போனதைப் பார்த்தேன். திடீரென்று மழை பெய்யும் பொழுது, ஜில்லென்று இருந்தது. ரயில் காட்டைக் கடந்த பின், விலங்களுக்கும் பறவைகளுக்கும் வீடு தான் காடு என்பது புரிந்தது.

வினோத சிட்டுக்குருவி பகுதியில், “ஒருமுறை மின்விசிறி சுழன்று கொண்டிருந்தபோது பெற்றோர் பறவையில் ஒன்று அடிபட்டு இறந்து விட்டது. அந்த நேரத்தில் ஒரு குஞ்சு தான் பறக்கும் பயிற்சி பெற்று வெளியேறி இருந்தது. மற்றொன்று பறக்கக் கற்றுக் கொண்டிருந்தது. பெற்றோரில் ஒன்று இறந்துவிட்டாலும் குஞ்சுகள் அடிபடாதது எனக்கு நிம்மதியை தந்தது.” என்ற பகுதியை வாசிக்கும் போது மனம் நிம்மதி அடைந்தது. எங்கள் வீட்டு மின்விசிறியிலும் குருவி, கூடு கட்டும். இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, என்னுடைய நிஜமான அனுபவம், சந்தோசம் தந்தது. கற்பனைகளைக் கடந்து, நிஜமான அனுபவமே, இந்தப் புத்தகத்தைப் புரிய வைத்தது.

நூலின் தகவல்கள் : 

நூல் :- காட்டின் கதைகள் (Kaatin Kathaikal)
ஆசிரியர்:- ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : காக்கைக்கூடு பதிப்பகம்
விலை : ரூ. 20

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பி.சந்தோஷ்,
எட்டாம் வகுப்பு,
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *