Subscribe

Thamizhbooks ad

ஆங்கிரிசாமி குறுங்கதை – கார்கவி

இவர்தான் ஆங்கிரிசாமி… இவர் பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு அந்த காலத்து வேலைனு அப்பப்ப பீத்திக்கிர அளவுக்கு ஒரு ஆபிசுல பியுனா இருக்கார்……

அழகான பொண்டாட்டி லவ்லிரோசா ஆனா.. அவருக்கு எப்போதும் அவளமட்டும் புடிச்சதே இல்ல….

எப்போதும் வேலை உண்டு வீடு உண்டுனு பணத்த சேக்குரதுல மட்டும்தான் குறியா இருப்பாரு…

தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்லிகிட்டு கோவத்த நுனி மூக்குலயே வச்சிக்கிட்டு திரிவார்…

இப்படியே சண்டையுமா, மனஸ்தாபமா போன இவங்க வாழ்க்கைல ரெண்டு குழந்தை வந்து பிறந்தாங்க….. அவங்தான் ஆதிரன், ஆதிரா…. இவங்க ரெண்டு பேரும்ணா ஆங்கிரிசாமிக்கு கொள்ள பிரியம்… ஆனா மனைவிய மட்டும் எரிஞ்சி விழ எப்படி கத்துக்கிட்டாரனு தெர்ல….

யார பாத்தாலும் அடியில நெருப்பு வச்சமாறி இருக்குரதால அவரோட அழகான பேரு அரவிந்த்சாமி இப்பலாம் ஆங்கிரிசாமி யா ஆகிடாப்ல…..

என்னதான் வெளில, மனைவிகிட்ட கோவப்பட்டாலும் புள்ளைங்ககிட்ட சக்கரையா கரஞ்சிடுவாரு நம்ம சாமி்… அதபாத்து நம்ம லவ்லிரோசா மனச ஆறுதல் படுத்திக்குவா…

பசங்களுக்கும் பத்து வயசு வந்துச்சு.. ஈரத்தோட டம்ளர் தந்தாளும் கோவபடுற சாமிக்கு ரொம்ப கஸ்டமான நிலை வந்துச்சு….

நேரம் தவறாம சோறுபோடும், அக்கரையா பாத்துக்குர அழகு ரோசாக்கு உடம்புல நோவு.. ..

காலம் போக போக சத்தம் குறைய ஆரம்பிச்சது அன்புகாட்டுன புள்ளைங்க எல்லாம் அடுத்தடுத்த அன்பு தேடி போயிட்டாங்க

ஒருநாள் எல்லாத்தையும் இழந்தது போல ஒரு சூழ்நிலை… காரணம் ரோசா தவறிட்டா…

அழகு மல்லி…அவளுக்கு புருசனா உயிரு…அம்மா அப்பா பாத்துவச்சாலும் குனிஞ்ச தல நிமிராம புருசன ஏத்துகிட்டா..மல்லிகைப்பூ வலிக்காம தலையில வச்சி எடுப்பா..இப்ப ஊரே கொண்டு வந்துருக்கு பாக்க அவ இல்ல…

ஓரமா ஒரு சேர்ல உட்காந்துருந்த சாமிகிட்ட ஆறுதல் சொல்லகூட யாரும் கிட்ட வரல…ஏன்னா அவர் குணம் அப்டி..தூரமா நின்னு புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லி வநத வங்க இறுதிசடங்க முடிச்சிட்டு போனாங்க….

வந்தவங்கலாம் போனாலும் இன்னும் ரோசா அந்த வீட்டுலதா இருக்கா அந்த அடுப்பங்கரையா…பாத்ரம் கழுவ சத்தமா… வார்க்கோல்ல கைரேகையா… இப்படி பாக்ர இடமெல்லாம் நிரம்பி இருந்த ரோசாவ நனச்சிகிட்டே வாசல் வர போனான் சாமி….

எப்போது அடுத்த வீட்டு சுவத்துல உச்சா போனாலே அந்த தெரு நாய கல்லால அடிப்பான்…இப்ப “ச்ச்ச்ச” னு கூப்டு கைல குடிக்க கொடுத்த டீ ய அந்த நாய்க்கு ஊத்துனான்…. அத குடிச்சிகிட்டே அவன் கைய புடிச்சது அந்த நாய்….மனசுல தேங்கிங்கிடந்த கோவம் எல்லாம் கண்ணீரா வழிஞ்சி ஓடுனது அந்த வாசலோட ஆங்கிரி சாமிக்கு……….

“இருக்கும் பொழுது தெரியாத அருமை அவங்க இல்லாதப்ப புரிஞ்சாலும் பயனில்ல அப்டிங்கரதுக்கு நம்ம ஆங்கிரிசாமி…ஒரு நல்ல எடுத்துக்காட்டு………

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here