Aangiri Shortstory By Karkavi ஆங்கிரிசாமி குறுங்கதை - கார்கவி

ஆங்கிரிசாமி குறுங்கதை – கார்கவி

இவர்தான் ஆங்கிரிசாமி… இவர் பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு அந்த காலத்து வேலைனு அப்பப்ப பீத்திக்கிர அளவுக்கு ஒரு ஆபிசுல பியுனா இருக்கார்……

அழகான பொண்டாட்டி லவ்லிரோசா ஆனா.. அவருக்கு எப்போதும் அவளமட்டும் புடிச்சதே இல்ல….

எப்போதும் வேலை உண்டு வீடு உண்டுனு பணத்த சேக்குரதுல மட்டும்தான் குறியா இருப்பாரு…

தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்லிகிட்டு கோவத்த நுனி மூக்குலயே வச்சிக்கிட்டு திரிவார்…

இப்படியே சண்டையுமா, மனஸ்தாபமா போன இவங்க வாழ்க்கைல ரெண்டு குழந்தை வந்து பிறந்தாங்க….. அவங்தான் ஆதிரன், ஆதிரா…. இவங்க ரெண்டு பேரும்ணா ஆங்கிரிசாமிக்கு கொள்ள பிரியம்… ஆனா மனைவிய மட்டும் எரிஞ்சி விழ எப்படி கத்துக்கிட்டாரனு தெர்ல….

யார பாத்தாலும் அடியில நெருப்பு வச்சமாறி இருக்குரதால அவரோட அழகான பேரு அரவிந்த்சாமி இப்பலாம் ஆங்கிரிசாமி யா ஆகிடாப்ல…..

என்னதான் வெளில, மனைவிகிட்ட கோவப்பட்டாலும் புள்ளைங்ககிட்ட சக்கரையா கரஞ்சிடுவாரு நம்ம சாமி்… அதபாத்து நம்ம லவ்லிரோசா மனச ஆறுதல் படுத்திக்குவா…

பசங்களுக்கும் பத்து வயசு வந்துச்சு.. ஈரத்தோட டம்ளர் தந்தாளும் கோவபடுற சாமிக்கு ரொம்ப கஸ்டமான நிலை வந்துச்சு….

நேரம் தவறாம சோறுபோடும், அக்கரையா பாத்துக்குர அழகு ரோசாக்கு உடம்புல நோவு.. ..

காலம் போக போக சத்தம் குறைய ஆரம்பிச்சது அன்புகாட்டுன புள்ளைங்க எல்லாம் அடுத்தடுத்த அன்பு தேடி போயிட்டாங்க

ஒருநாள் எல்லாத்தையும் இழந்தது போல ஒரு சூழ்நிலை… காரணம் ரோசா தவறிட்டா…

அழகு மல்லி…அவளுக்கு புருசனா உயிரு…அம்மா அப்பா பாத்துவச்சாலும் குனிஞ்ச தல நிமிராம புருசன ஏத்துகிட்டா..மல்லிகைப்பூ வலிக்காம தலையில வச்சி எடுப்பா..இப்ப ஊரே கொண்டு வந்துருக்கு பாக்க அவ இல்ல…

ஓரமா ஒரு சேர்ல உட்காந்துருந்த சாமிகிட்ட ஆறுதல் சொல்லகூட யாரும் கிட்ட வரல…ஏன்னா அவர் குணம் அப்டி..தூரமா நின்னு புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லி வநத வங்க இறுதிசடங்க முடிச்சிட்டு போனாங்க….

வந்தவங்கலாம் போனாலும் இன்னும் ரோசா அந்த வீட்டுலதா இருக்கா அந்த அடுப்பங்கரையா…பாத்ரம் கழுவ சத்தமா… வார்க்கோல்ல கைரேகையா… இப்படி பாக்ர இடமெல்லாம் நிரம்பி இருந்த ரோசாவ நனச்சிகிட்டே வாசல் வர போனான் சாமி….

எப்போது அடுத்த வீட்டு சுவத்துல உச்சா போனாலே அந்த தெரு நாய கல்லால அடிப்பான்…இப்ப “ச்ச்ச்ச” னு கூப்டு கைல குடிக்க கொடுத்த டீ ய அந்த நாய்க்கு ஊத்துனான்…. அத குடிச்சிகிட்டே அவன் கைய புடிச்சது அந்த நாய்….மனசுல தேங்கிங்கிடந்த கோவம் எல்லாம் கண்ணீரா வழிஞ்சி ஓடுனது அந்த வாசலோட ஆங்கிரி சாமிக்கு……….

“இருக்கும் பொழுது தெரியாத அருமை அவங்க இல்லாதப்ப புரிஞ்சாலும் பயனில்ல அப்டிங்கரதுக்கு நம்ம ஆங்கிரிசாமி…ஒரு நல்ல எடுத்துக்காட்டு………

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *