“கசகச னு ஒரே வியர்வையாக இருக்கு. வெயில்காலம் ஆரம்பிச்சிருச்சுல அதான்”.பேசியபடி தண்ணீரில் மூக்கை அலசிப் பார்த்தது மித்து.
நெடி தாங்க. முடியாமல் அப்படியே பின்னுக்கு ஓடியது.’இது என்ன?இப்டி ஒரு வாடை,.ஆத்து தண்ணீர் கெட்டு போயிருச்சோ?’
“படிச்ச மனுசன் பாடு தான் பாட்டா பாடுது ஊருதான்”.
தத்துவ தாத்தா ஆந்தை பாடியவாறே அங்க வந்தார். “என்ன எல்லாரும் ஆத்தோரமா நின்னுட்டீங்க?”னு கேட்க “வாங்க வாங்க, தண்ணீர் குடிக்க அலக விட்டேன்.உயிரே போயிருச்சு” என்று மித்து அழுகாத குறையா பேசுச்சு.
“எல்லாம் கழிவுதான்..அங்க இருக்கிற சாயப்பட்டறையில இருந்து வருது…ஆறே செத்த மாதிரி ஆகிருச்சு”.
“வட்ட வட்டமா நுரை நுரையா வருதே? நம்ம இப்டி தான் சாவோம் போல” சொல்லிட்டுப் பறந்தது மித்தி.
“ஓடுற தண்ணியில ஒரு குடம் விசம் குடிக்க நெனச்சா ஆகிடும் நாசம்”.
பஞ்ச் பேசிப் பறந்துட்டாரு ஆந்தையாரு.
என்ன குழந்தைகளா? ஆறு குளங்கள் மாசடையறத பத்தி என்ன நினைக்கறீங்க?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.