Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆத்மார்த்தியின் “வாழ்தல் இனிது” – பா.அசோக்குமார்

18 தலைப்புகளில் பல்வேறு வகையான உணர்வுகள், தகவல்கள், நபர்கள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நூலே இது.
80’ஸ் கிட்ஸின் நினைவலைகளாகவே இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.
முதல் பதிப்பாக வெளிவந்த ஆண்டு 2016. ஆனால் இதில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் யாவுமே எழுத்தாளர் அவர்களின் பால்யகால நினைவலைகளின்  மீட்சியாகவே மிளிர்ந்துள்ளன.
எண்பதுகளில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் படிக்கும்போது தமது வாழ்வனுபவத்தை அசைபோடக் கிடைக்கும் எண்ணற்ற தகவல்கள் விரவியுள்ளன எனலாம்.
தத்தமது வாழ்வியல் சூழலுடன்  பொருத்தி பார்த்தும் வேறுபட்டு நிற்பதை அனுசரித்து ஆராதனை செய்து மகிழும் பேரானந்தம் கிட்டுவது உறுதி.
சில நேரங்களில் நாம் அனுபவிக்க தவறிய தருணங்களை படிக்கும் போது எழுத்தாளரின் மேல் பொறாமை மேலிட்டு எழுவதையும் தவிர்க்க இயலவில்லை என்பதே நிதர்சனம்.
இசை, புத்தகம், காதல் , பாடல்கள், வாசனை, மரணம், கலைக் கூத்தாடிகள், திருநங்கை, இரவு என பல்வேறு உணர்வுகளின் பகிர்தலுடன் டைரி, டிரங்க் பெட்டி, சாவியிலிருந்து குழந்தைகளின் பொம்மை மற்றும் கைபேசி வரையிலான நினைவு பரிமாற்றங்கள் ஒவ்வொன்றையும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தி நமது உள்ளுணர்வை சிலாகிக்க வைப்பதாகவே படைத்துள்ளார்.
“குழந்தைகளின் வங்கிகளில் பொம்மைகளைத் தானே சேமிக்க முடியும்?”
என்பது போன்ற அறிவார்ந்த ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் பல இடங்களில் விரவிக் கிடக்கின்றன.
பள்ளி பருவத்தில் தான் அனுபவித்த, சந்தித்த நபர்கள், தருணங்கள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அனுபவித்து வாழ்தலின் மீது ஒருவித பிடிப்பை ஏற்படுத்தும் வண்ணம் எடுத்தியம்ப விதத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்கிறார் எழுத்தாளர்.
– ஈர்ப்பு என்னும் ...
ஆத்மார்த்தி
இக்கட்டுரை நூலின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை கட்டுரைகளின் தொடக்கத்தில் வழங்கி அதனினூடே தனது கருத்துக்களை வலுப்படுத்தும் யுக்தி அலாதியான இன்பத்தை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது.
” பொன்மூக்குத்திப் பூக்களால் சிரிக்கும்
வேம்பின் புண்ணியத்தில்
அத்தனை கசப்பாக இல்லை
இந்தக் கோடை”
          -கதிர்பாரதி.
“வாடகைக்கும் வட்டிக்கும்
சீக்கு இல்லை லீவு இல்லை”
            – மு.சுயம்புலிங்கம்.
” சொல்லிக் கொள்ளும்படி
எதுவும் இல்லை
வாழ்தலின் நிமித்தம்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”
             – கவிதா முரளிதரன்
    போன்ற எண்ணற்ற கவிதை வரிகளும் இந்நூலில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.
எழுத்தாளரின் சுய தம்பட்டமாக மாறிவிடும் சூழல் பல இடங்களில் இருப்பினும் அவற்றையெல்லாம் வெகு லாவகமாக மடைமாற்றி உணர்வுகளைக் கடத்தும் பாங்கு கவனிக்கத்தக்கது. எழுத்தாளரின் கவன வீச்சும், ஞாபக சக்தியும் மிரட்டும் வகையில் உள்ளதாகவே தொனிக்கிறது.
நல்லவோர் வாழ்வனுபவக் கட்டுரை நூல். அசை போட்டபடியே நமது வாழ்வனுபத்தை எழுதத் தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
ஆத்மார்த்தி எழுதிய 'வாழ்தல் இனிது ...
“வாழ்தல் இனிது”
ஆத்மார்த்தி.
யாவரும் பப்ளிஷர்ஸ்.
பக்கங்கள்: 116
₹.100/-.
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.

Latest

நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி

  இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம்...

நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.

   கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பான 'நதியற்ற ஊர்' என்ற...

மு.முபாரக் கவிதை

முட்டாள் பைத்தியம் திமிர் பிடித்தவன் சுயநலவாதி தற்பெருமைக்காரன் சோம்பேறி கடன்காரன் கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை  தெரியவில்லை... அன்பான...

கவிதை : செல்போன் விளையாட்டு – ந க துறைவன்

அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க அக்கா சாப்பிட கூப்பிட்டாங்க யாருக்கும் பதில் சொல்லாமல் தலைகுனிந்து இருக்கிறான். கையில் இருக்கும்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி

  இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம் 12 சிறுகதைகளை இதில் கொடுத்திருக்கிறார். பல இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார். முதலில் 'பனைவிடலி' என்ற சொல்லாட்சிதான் என்னை ஈர்த்தது....

நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.

   கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பான 'நதியற்ற ஊர்' என்ற நூலின் மூலம் தனது கவிதை பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டுள்ளார் கவிஞர் தினேஷ் பாரதி.    மொத்தம் முப்பத்தொரு கவிதைகள். இவற்றில் பெரும்பான்மையானவை...

மு.முபாரக் கவிதை

முட்டாள் பைத்தியம் திமிர் பிடித்தவன் சுயநலவாதி தற்பெருமைக்காரன் சோம்பேறி கடன்காரன் கோபக்காரனென எத்தனையோ வார்த்தைகள் இந்த உலகத்தில் புழங்கிக்கொண்டிருக்கிறதென்பது இதுவரை  தெரியவில்லை... அன்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளும் பேசத்தெரியாத அம்மாவிற்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here