Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: ஆதி வள்ளியப்பன் எழுதிய *வாவுப் பறவை* – வெ. நீலகண்டன்



வாவுப் பறவை
ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம்: புக் ஃபார் சில்ரன்
(பாரதி புத்தகாலயம்)
மொத்த பக்கங்கள்: 63
விலை: ₹ 160/-
புத்தகம் வாங்க: http://thamizhbooks.com/

கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்லப்படுகிறது. வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடுவதாலேயே நிஃபா வைரஸ் பரவுகிறதென்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். எபோலா, சார்ஸும்கூட வௌவால்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் கிராமப்புற வீடுகளின் பழைமையான பரண்களில் அங்குமிங்கும் ஓடித் திரிந்து கொண்டிருக்கின்றன வௌவால்கள். அமைதி குலைந்துவிடும் என்பதற்காக பட்டாசே வெடிக்காமல் வௌவால்களைப் பாதுகாக்கும் கிராமங்களும் இங்கே இருக்கின்றன. நிறைய கற்பிதங்களும் நம்பிக்கைகளும் வௌவால்கள் குறித்து இருக்கின்றன. வாவுப் பறவை என்பது சங்க இலக்கியங்களில் வௌவாலைக் குறிக்கும் சொல்.

இந்த நூல், வௌவால்கள் குறித்த அப்படியான கற்பிதங்களைத் தகர்த்து அறிவியல் உண்மைகளைப் பேசுகிறது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் வௌவால்கள் பற்றிய குறிப்புகள் தொடங்கி, அவற்றின் உடலமைப்புகள், வகைகள், இனப்பெருக்கம் என அவற்றின் முழு வாழ்க்கைமுறையையும் சொல்லித்தருகிறது இந்த நூல். விதைப் பரவலுக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் வௌவால்கள் பெருமளவு உதவுகின்றன.

Adhi Valliappan's Vaavuparavai (Vavval - Bat) Book Review by V. Neelakandan. ஆதி வள்ளியப்பன் எழுதிய *வாவுப் பறவை* - வெ. நீலகண்டன்

மா, கொய்யா, பேரீச்சை, வாழை போன்ற பழத் தாவரங்களுக்கு வௌவால் பெரும் சேவை புரிகிறது. பழ வௌவால்களின் எச்சத்திலிருக்கும் விதைகள் மூலம் வெப்பமண்டலக் காடுகள் செழிக்கின்றன. உலகெங்கும் 300 வகைத் தாவரங்களை வௌவால்கள் பரப்புகின்றன. அதேநேரம் ரத்தத்தை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வௌவால்களும் இருக்கின்றன. மெக்ஸிகோ, தென் அமெரிக்க நாடுகளில் மூன்றுவகையான குருதியுண்ணி வௌவால்கள் வாழ்கின்றன… இப்படி வௌவால்களைப் பற்றி வியப்பூட்டும் ஏராளமான செய்திகள் இந்த நூலில் உள்ளன.

வைரஸுக்கும் வௌவால்களுக்குமான தொடர்பு குறித்தும் இந்த நூலில் விரிவாகப் பேசுகிறார் வள்ளியப்பன். விலங்குவழி தொற்றக்கூடிய 15 வைரஸ் குடும்பங்கள் வௌவால்களில் வாழ்கின்றன. அவற்றில் 30 சதவிகிதம் கொரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் மனிதர்களைத் தாக்குவதற்கான காரணங்களையும் விவரிக்கிறது நூல், வௌவால்கள் பற்றிய புரிதலுக்கு இடையிடையே தரப்பட்டுள்ள கட்டச் செய்திகள் உதவுகின்றன.

நன்றி: விகடன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here