‘சுவற்றிலேயே எழுதாதே’ என்று
அந்த சுவற்றிலேயே எழுதும்
திறமைசாலிகள் அல்லவோ நாம்
மதுவும் புகையும் உடல் நலனைக்
கெடுக்கும் என்று எழுதும் நாம்
வாழ்க்கை ஏழைகளுக்குக் கேடு
விளைவிக்கும் என்று எதில்
எழுதுவோம்?
எச்சரிக்கை மீறிக் குடித்து குடி மூழ்கிப் போவதைப் போல்
எச்சரித்தாலும் ஏழைகள் வாழ்ந்து
கெட்டுப் போகும் கட்டாயத்தில்
இருப்பதால் எழுதவே அவசியம்
ஏது என்கிறோமா?
மனித மாண்புகளை மறந்து,மறுத்து வாழும் இந்த
மனிதர்கள்
உயர்வு தாழ்வு கற்பிப்பதில் மட்டும்
உயர்ந்து நிற்கிறார்களே!
வர்ணத்தில் வராதவர்கள் என்று
வகைப்படுத்தி வசை பாடுவதில்
மட்டும்
வல்லவர்களாய் இருக்கிறார்கள்
இந்த வாழத் தகுதியற்றவர்கள்
முட்டியும் மோதியும் முன்னேறத்
துடிக்கும் மக்கள்தான் இந்த
மூளை மழுங்கியவர்களின்
இலக்காகி மூர்ச்சையாகிறார்கள்
கலை என்னும் போர்வையில்
கண்டதும் பேசி
மனிதாபிமானம் என்ற வேரில்
அமிலம் ஊற்றுகிறார்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.