அயல்கிரக வாசிகள் உங்களை சந்திக்க வந்தால் நீங்கள் அவர்களுக்கு சிக்கன் 65 பார்ட்டி நடத்த முடியுமா?
அவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவார்கள.. பீர் பார்ட்டி சாத்தியமா.. புதிய ஆய்வில் கரிம சேர்மங்களுக்கு அப்பாற்பட்ட உணவுகளை மட்டுமே அவர்களால் உண்ண முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.. நாங்கள் ஒருகாலத்தில் கல்லூரி விடுதியில் கல்வி கற்ற பொழுது உணவு மோசமாக இருக்கும் நாட்களில் இந்த சகிக்க முடியாத சுவையை ஏலியன்ஸ் தான் விரும்புவார்கள் என்று கிண்டலடித்தது உண்டு..
ஏலியன்ஸ்க்கு சமைப்பவர் என்று எங்கள் விடுதி சமையல்காரருக்கு நாங்கள் சிறப்பு பட்டம் கொடுத்து இருந்தோம்.
ஆனால் இன்று ஆய்வுகளை மற்றும் ஆய்வு அறிக்கைகளை வாசிக்கின்ற பொழுது அயல் கிரகவாசிகள் பூமியில் வாழ்வதற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ரசாயனமான ஆட்டோகடல்ஸ் என்று அழைக்கப்படுகின்ற கரியமில குடும்பத்தை ஒரு போதும் விரும்பவோ எடுத்துக் கொள்ளவோ முடியாது என்பதே, மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. புதிய ஆய்வில் பூமியில் இருக்கும் தனிமங்களிலிருந்து மிகவும் வித்தியாசமான வேற்றுகிரக வாழ்வை பெறுகின்ற ஆற்றலை தான் அவர்கள் கொண்டிருப்பார்கள் என்பது விஞ்ஞானிகளின் அனுமானமாக இருக்கிறது.
பூமியின் உயிரியல்.. பாஸ்பரஸ், சல்ஃபர், நைட்ரஜன், ஆக்சிஜன், மற்றும் ஹைட்ரஜன் போன்ற தனிமங்களுடன் கார்பனை இணைக்கின்ற கரிம சேர்மங்களைத்தான் சார்ந்துள்ளது. மாற்று வேதியியல் கட்டமைப்புகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கு வழி வகுக்கும்.
அவை புவியினுடைய கரியமல்ல வாழ்வுக்கு தக்கதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நீண்டகாலமாக ஏலியன்ஸ் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் வேதியியல் அடிப்படையில் வேறுபட்ட வேதியியல் உருவாக்கத்தை யோசித்து வருகின்றனர். ஒரு வேளை அயல் கிரகவாசிகள் சிலிக்கான் உயிரியலுக்கு அடித்தளமாக இருப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர். ஒருகாலத்தில் எப்போதோ புவியில் வந்து விழுந்த சில எரிகற்கள் வழியே அயல்கிரகவாசிகள் புதையுண்டு அதன்காரணமாக நமக்கு சிலிக்கான், டைட்டானியம் போன்ற உலோகங்கள் கிடைத்திருக்கலாம் என்கின்ற ஒரு அனுமானமும் உண்டு.
இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்வது மிக மிக முக்கியம். இதன் மூலம் பூமியின் வாழ்க்கை மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தின் அனைத்து வகையான வாழ்க்கையையும் எப்படி இருக்கும் என்பது குறித்து உங்களால் முடிவு செய்ய முடிகிறது என்று விஸ்கான்சின்மாடிசன் பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் பாக்டீரியா மற்றும் பரிணாமவியல் உயிரியலாளரான மூத்த எழுத்தாளர் பெடல் கார் மின்சாங் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். இப்போதும் ஸ்பேஸ் டாட் காமில் அந்த பேட்டி அப்படியே இருக்கிறது.
பூமியில் வாழ்வதற்கு முக்கியமாக இருக்கும் ஒருவகையான ரசாயன தொடர்பை தான் ஆட்டோ கடல்ஸ் என்று அழைக்கிறார்கள். இந்த எதிர்வினைகள் இயற்கை முறையில் பரிணாம வளர்ச்சிகாலத்தில் தன்னிச்சையாக நடந்து மூலக்கூறுகளை புதிய புதிய வடிவத்தில் உருவாகி இருக்கிறது.
மனித வாழ்க்கை மட்டுமல்ல.. உயிருள்ள அனைத்தும் ஆராய்ச்சியாளர்களை ஆட்டோ கடலிஸ் பற்றி அக்கறை கொள்வதற்கான முக்கிய காரணமாகவே இன்றுவரையில் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப் போட்டுகொண்டுஇருக்கிறது. இனப்பெருக்கம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். ஆட்டோ கடல்ஸ் முக்கிய எடுத்துக்காட்டு இனப்பெருக்கம் என்று அந்த விஞ்ஞானி கூறுகிறார். வாழ்க்கை அதிக உயிர்களை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது ஒரு செல் இரண்டு செல்களை உருவாக்குகிறது அது நான் குமற்றும் அதற்கு மேலும் ஆகலாம் செல்களின் எண்ணிக்கை பெருகும் பொழுது சாத்தியமான தொடர்புகளின் எண்ணிக்கை மற்றும் பன்முகத்தன்மை அதற்கேற்ப பெருகும் என்பது அவருடைய கருத்து.
இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது அயல் கிரகவாசிகளின் வாழ்வும் ஏறத்தாழ இப்படித்தான் இருந்திருக்கும் என்றாலும் சமீபத்தில் வேதியியலில் நடந்திருக்கின்ற ஸ்படிக கற்களின் வழியே அந்த கற்களை பல் படிவ 3D பதிப்பு அதிவேகமாக பிரதியாக்கம் செய்வது ஒரு ஸ்படிக கல் நூற்றுக்கணக்கான படிக கற்களை உற்பத்தி செய்கிறது என்கிற இடம் எட்டப்பட்ட பொழுது அயல் கிரகவாசிகளின் உடைய உயிர்திருத்தல் என்பது புவியின் உயிரிகளை போல செல்களையும் மூலக்கூறுகளையும் டிஎன்ஏ வையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்கிற அதிர்ச்சி தகவலை அந்த பேட்டியில் அவர்அறிவிக்கிறார்.
எனவே கரிம சேர்மங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தன்னியக்க வினையூக்கம் அயல் கிரகவாசிகளின் உடைய இயல்பாக இருக்கலாம் உயிரற்ற தன்மையிலிருந்து உயிரின் பிறப்பிடமான அபியோ ஜெனிசிஸ் என்பதை இயக்கிட ஆட்டோ கடல்ஸ் உதவும் என்பதால் இதுபோன்ற எதிர்வினை விஞ்ஞானிகளால் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது. ஒரு மூலக்கூறின் பலநகல்கள் உருவாக்ககூடிய சமச்சீர் சுழற்சிகள் என்று அவர்கள் அழைக்கின்ற ஒரு முக்கியமான வேதி தரவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் அதுதான் படிக கற்கள் தாமாகவே தம்மை பிரதியாக்கம் செய்து கொள்கின்ற இடத்தை நோக்கி அவர்களை இட்டுச்சென்றிருக்கிறது. உலகிலேயே நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும் விஷயம் என்னவென்றால் இது போல் மறு உருவாக்கம் செய்யப்படும் ஸ்படிக கற்களுக்கு மரணமே இல்லை!!
இத்தகைய தயாரிப்புகள் இந்த சுழற்சிகள் மீண்டும் நிகழ உதவும் தொடக்க பொருட்களை உருவாக்கலாம். இதன் விளைவாக தானியங்கு வினையூக்கம் ஏற்படுகிறது. ஃப்ராவின்ஸ் கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஜென்பேங்க். அவர் ஒப்பீடு என்பது தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அது ஒரு வெளியீட்டின் மடங்குகளை உருவாக்கும் ஒற்றை எதிர்வினை இங்கு பிரதியாக்கம் என்பது இனப்பெருக்கமா என்கிற ஒரு கேள்வி எழுகிறது என்று கூறி அதற்கான விவரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் சடலங்கள் உண்மையாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு சோதனை செய்கிறது. எனவே இத்தகைய எதிர்வினைகளை கண்டறிய இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட டிஜிட்டல் அறிவியல் ஆவணங்களை விஞ்ஞானிகள் தற்பொழுது ஏஐ (AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் பகுப்பாய்வு செய்கின்றனர். தம்முடைய வாழ்நாள் முழுவதும் நம்மால் செய்யமுடியாத ஒரு வேலையை ஒரு சில வினாடிகளில் செயற்கை நுண்ணறிவு செய்துவிடுகிறது.
செயற்கை நுண்ணறிவின் வழியே திறமையான மொழித் தேடல் மற்றும் மொழிபெயர்ப்பு கருவிகள் மூலம் தன்னியக்க சுழற்சிகளின் பரவலை பற்றிய இந்த முதல் வகை மதிப்பீடு விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அயல் கிரகவாசிகள் விஷயத்தில் விஞ்ஞான உலகில் தற்போது மிகப் பெரிய பதட்டம் நிலவுகிறது. நாம் ஏற்படுத்தும் நம்முடைய சொந்த தயாரிப்பான அற்புதம் அற்புதம் என்று நாம் கொண்டாடுகின்ற செயற்கை நுண்ணறிவு நமக்கு எதிராக அயல் கிரகவாசிகளோடு ஒரு இணக்கமும் தொடர்பும் வைத்துக்கொள்ள சாத்தியங்கள் அதிகம் என்பதை நோக்கி அறிவியல் ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன எனவே நீங்கள் யாரும் சிக்கன் 65 மற்றும் பீர்பாட்டிக்கு தயாராக வேண்டாம். பார்ட்டிக்கு வரும்பொழுது அவை தான் நம்மை சவர்மா ஆக்கி சாப்பிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறது இன்றைய ஏலியன் அறிவியல்!
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான அவசியமான பதிவு..இன்றைய நுகர்வு கலாச்சார நுகத்தடியின் இறுக்கத்தில் மானுடம் நாளும் நசுங்கி வருகையில்..இப்படிப்பட்ட கட்டுரைகள் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த அவசியமாகிறது..AI தொழில் நுட்ப பயன்பாடுகள்.. முதாலாளித்துவ சந்தைப்பொருளாதாரத்தில்லாபநோக்கில்தான் இருக்கும் என்பது தெளிவு..இதைப்பற்றிய தொடர் விவாதமும் விழிப்புணர்வும் தேவை என்பது இன்றைய சமூக அவசியம் ஆகும்..தோழர் ஆயிஷா நடராஜனின் இந்தக்கட்டுரை
அப்படிப்பட்ட விவாதத்தின் ஆரம்பப்
புள்ளியாக அமையும்.
வாழ்த்துகள் தோழர்..