அலஹாபாத் டூ லண்டன் (Allahabad to London) - (அலஹாபாத் விமான விபத்து குறித்த இரங்கல் கவிதை) - Tamil Poetry - BookDay Kavithaikal

கவிதை : அலஹாபாத் டூ லண்டன்

கவிதை : அலஹாபாத் டூ லண்டன்

முதல் விமான பயண அனுபவத்தை எதிர்நோக்கிய பயணி முதல் ,
முன்னாள் முதல்வர் வரை..
அடுத்த இருபது மணி நேர பயண முடிவில்,
ஒவ்வொருவரும் பல கனவுகளுடன்,
ஒவ்வொருவரும் பல கடமைகளுடன்..

பல்வேறு நாட்டினர்,
பல வேறு மொழியினர்,
அனைவரும் கடைசியில் பேசியது ஒரே மொழி தான்..

அலறல் மொத்தமும் ஒரே மொழியில்..
மழலைகள் கூட அழுகுரலில்..

அடித் தொண்டையில் எழுந்த கூக்குரல்கள்,
கருகும் வரை தொடர்ந்து கசிந்தன..

கறும்புகை எழுப்பிய கார்பனுக்கும்,
பயணிகள் எழுப்பிய அழுகுரலுக்கும் ,
அரைமணி நேர போட்டியில்,
கறும்புகையே வென்றது..
என் சொந்தங்களின் உடல் அடையாளம் தெரியாமல் வெந்தது..

பத்து நிமிட தாமதத்தால் விமானத்தை தவற விட்ட ஒருவரும்,
பத்து நொடிக்கு முன் குதித்து உயிர் பிழைத்த ஒருவரும்,
எமனின் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்தார்கள்.

இறைவனின் விதியா?
இஞ்சினின் சதியா?
மரணப்பிடியில் மனிதர்கள்.

முகமறியா அந்த சொந்தங்களை எண்ணி,
பாரதம் முழுதும் அழுதது..
அடுத்த நொடி உறுதி இல்லை என்பதை
உள்மனம் உணர்ந்தது..

இறைவா,
உறவுகளை இழந்த சொந்தங்களை தேற்ற
எங்களிடம் சக்தி இல்லை,
இனியும் இதுபோல் நடக்காமல் தடுத்துவிட்டால்,
உன்னைவிட வேறு சக்தி இல்லை!

 

எழுதியவர் : 

ஆழ்ந்த அஞ்சலியுடன்
ஜிதேந்திர பாபு ஜானகிராமன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *