இரா நடராஜன் (Ayesha Era Natarasan) எழுதிய அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் (America Karuppu Adimaikalin Suyasarithai) - நூல் அறிமுகம் - https://bookday.in/

அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் – நூல் அறிமுகம்

அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ் – நூல் அறிமுகம்

பிரடெரிக் டக்ளஸின் சுயசரிதை உலக அடிமை முறை பற்றிய மிக முக்கியமான தெரு ஆவணம் என்று சொல்லலாம்.
– நெல்சன் மண்டேலா

அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை. அமெரிக்காவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பல அடிமைகள் வெள்ளை இன அமெரிக்க உரிமையாளர்களிடம் பட்ட பெரும் துயரங்களை கண்ணீரோடு வெளிப்படுத்தி இருக்கிறது இப்புத்தகம்.

தங்களுடைய சொந்த நாடுகளில் பெரும் மகிழ்ச்சியுடன் குதூகலத்தோடும் சுற்றி திரிந்து கொண்டிருந்த கருப்பர்கள் ஒரு இலங்கை வேட்டையாடுவதை போன்று வேட்டையாடப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

அங்கே வெள்ளை இன உரிமையாளர்களின் கசையடிகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆட்பட்டு படுக்க இடமும் உடுக்கை உடையும் உண்ண உணவும் இன்றி பிறந்த குழந்தைகள் முதல் இறக்கும் நிலையில் உள்ள முதியவர்கள் வரை படாத பாடு பட்டு கொண்டு தான் ஒரு அடிமை என்று உணர்வை கூட அவனுக்கு ஏற்படாத வண்ணம் அவர்களை கொடுமைப்படுத்துவதுமாக இருந்துள்ளனர் அந்த வெள்ளை இன மக்கள்.

ஒரு அடிமையின் தந்தை யார் என்று கூட அந்த அடிமைக்கு தெரியாது .பல அடிமை குழந்தைகளுக்கு ஒரு வெள்ளை இன முதலாளி தான் தந்தையாக இருக்கிறான் .உலகில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அது பிறந்த தேதியும் தன் தாய் தந்தை யார்? என்பதையும் அறியாமல் இருப்பது என்ன ஒரு கொடுமையான சூழ்நிலை.

முதலாளியை பார்த்தால் தண்டனை ,எதிர்த்து பேசினால் தண்டனை, பேசாமல் மௌனம் காத்தால் தண்டனை, வேலை சரிவர செய்யாமல் இருந்தால் தண்டனை என எத்தனை எத்தனை தண்டனை. இவர்கள் தண்டனை வழங்குவதற்காகவே ஒவ்வொரு காரணங்களை உருவாக்கினர். கருப்பு அடிமைகளுக்கு கல்வி முக்கியமாக மறுக்கப்பட்டது .அடிமைகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கவும் இல்லை. அதை அவர்கள் நினைக்க நேரமும் கூட இல்லை.

சூரிய கதிர்கள் பூமியில் தொடுவதற்கு முன்பாக துயில் எழுந்து பல மையில்கள் நடந்து தங்களுடைய முதலாளிகளின் பண்ணைகளில் வேலை செய்து சூரியன் அஸ்தமனம் ஆனபின் இரவுகளில் தங்கள் கூடடைந்து அன்றைய வேலைக்கான உணவையும் மறுநாள் தேவைக்கான உணவையும் தயார் செய்து இருக்கும் கொஞ்ச நேரத்தில் தூங்குவதே அவர்களின் வாழ்க்கை சுழற்சி ஆக இருந்தது.

ஒரு முதலாளி நினைத்தால் தன் அடிமைக்கு தூக்கு தண்டனை வழங்கலாம் ,கசையடி வணங்கலாம், ரத்தம் வரும் வரை அடிக்கலாம் .மொத்த உரிமையும் அந்த முதலாளிக்கு உண்டு ஏன் என்று யாரும் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. இவ்வளவும் தாங்கிக் கொண்டு தன் வாழ்வை நகர்த்தி கொண்டு தான் ஆக வேண்டும் .விரும்பி இறக்க கூட ஒரு அடிமைக்கு உரிமை இல்லை.

அப்பேற்பட்ட அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர் தான் நமது நாயகன் பிரடெரிக் டக்ளஸ். இவ்வளவு கொடுமைகளுக்கு இடையில் இவருக்கு கிடைத்த கல்வி இவரின் அடிமை வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக மாற்றியது.

கல்வி என்றால் பள்ளிக்குச் சென்று எல்லாம் யாருமே அவருக்கு கற்றுத் தரவில்லை. தன்னுடைய உரிமையாளரின் அறியாமையால் சிறிது நாள் கல்வி அவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்பு அதுவும் சரிவர பொறுக்காமல் இடையில் நிறுத்தப்பட்டது.

அவர் கற்ற கல்வியை அவரிடம் சேர்ந்து இன்னும் பல அடிமைகளுக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் தங்களுடைய அறிவையும் புத்தி கூர்மையையும் விசாலப்படுத்திக் கொண்டு முதலாளிகளிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி அவர்களுடைய வாழ்நாளை கடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அதற்கான நேரமும் வந்தது. தன்னுடைய அடிமை வாழ்க்கையில் இருந்து டக்ளஸ் மீண்டெழுந்தார்.அவர் எப்படி மீண்டெழுந்தார்.அவர் மீண்டெழ காரணமாக நிகழ்வு என்ன?யார் அவருக்கு உதவி செய்தது.

அடிமை வாழ்விலிருந்து விடுபட்ட பின்பும் அவர் அனுபவித்த வலிகள் என்ன.எழுத்து பணியில் தன்னை எவ்வாறு ஈடுபடுத்திக்கொண்டார்.தன்னுடைய சுயசரிதை எழுதும் அளவுக்கு அவருக்குள் இருந்த மன ஓட்டம் என்னவாக இருந்தது. போன்ற கேள்விகளுக்கான பதிலை புத்தகத்தை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

நூலின் தகவல்கள் : 

நூல் : அமெரிக்க கருப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ்
ஆசிரியர்: இரா நடராஜன் (தமிழில்)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 96

நூல் அறிமுகம் எழுதியவர் : 

நன்றி
✍️ நளினி மூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *