கி.அமுதா செல்வி எழுதிய *பசி கொண்ட இரவு* – நூலிலிருந்து
சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும் ஜாம்பவான்களும் சிறுகதை தொகுப்புகளை தமிழுக்கு அளித்திருக்கிறார்கள். பொதுவாக சிறுகதைகள் இலக்கிய நேயர்களுக்கு பிடித்தவைகளாக இருக்கின்றன.
சில சிறுகதைகளை படிக்கும்போது மனம் அப்படியே ஒன்றிப் போய் விடுகிறது.
எதார்த்தமாக மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை புனைவுகளோடு சேர்த்து சிறுகதையாக மக்களுக்குத் தரும் எழுத்தாளர்கள் வெற்றி பெறுகிறார்கள் கற்பனை உலகத்தில் சஞ்சரித்த சிறுகதைகள் தற்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளவை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
“பசி கொண்ட இரவு ” என்னும் சிறுகதை தொகுப்பு நூலை வாங்கிய போது பத்தோடு பதினொன்று என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த கதைகளை படித்து முடித்த போது சமூகத்தைப் பற்றிய ஒரு புரிதல் பயங்கரமாக மனதைப் படாதபாடு படுத்துகிறது.
பெண் குழந்தைகளை பெற்று பாசத்தோடு வளர்க்கும் தந்தைக்கும் தாய்க்கும் இந்த சிறு கதைகள் சுனாமியை விட கொடுமையான துன்பத்தைத் தருபவை.
இந்த சிறுகதைகளை எழுதியவர் திருநெல்வேலி மாவட்டம் கழுவூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர். முதுநிலை பட்டம் பெற்றவர். சமூகத்தில் புறந்தள்ளப் பட்ட விளிம்பு நிலை மக்களுடன் பத்தாண்டுகளுக்கு மேல் பயணித்து அவர்களுக்காக பணியாற்றியவர். அவருக்கு கிடைத்த கள அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கதைகளை எழுதியுள்ளார்.
தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள் உள்ளன.
புத்தகத்தை புரட்டிப் பார்த்தவுடன் சில சிறுகதைகளின் தலைப்புகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன.
“சீதை வேசியாக்கப்பட்டாள்” “தீட்டு”,
” பாக்கெட் சாராயம் ”
” பசி கொண்ட இரவு”
என.
அந்த கால சினிமா படத்தில் படம் முடியும்போது சுபம் வணக்கம் என்று போடுவார்கள்.படம் சுபத்தில் முடிந்தால் படம் பார்த்தவர்கள் மகிழ்ச்சியாக வீட்டுக்கு திரும்புவார்கள்.படம் சோகத்தில் முடிந்தால் வரும்போது யாருடனும் பேசாமல் நடந்து கொண்டிருப்பார்கள் என்பது அனுபவம்.
இந்த புத்தகத்தில் உள்ள ஒன்பது கதைகளையும் படித்து முடித்ததும் யாரிடமாவது இந்தக் கதைகளை பேசி மூளைக்குள் ஏறிய வித்தியாசமான உளவியல் தாக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஒன்பது கதைகளும் பெண்களைப் பற்றியே பேசுகின்றன. அவர்களின் பாடுகளை கண் முன்னாலே நிறுத்துகின்றன. மீனாட்சி அத்தை என்ற ஒரு சிறுகதையைத் தவிர பிற அனைத்து கதைகளும் சுபத்தில் முடியவில்லை. பெண்கள் ஆணாதிக்க சமூகத்தாலும் பாலியல் வக்ரத்தாலும் மனிதநேயமற்ற நடவடிக்கைகளாலும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உரக்க செல்கிறது.
. காதல் என்னும் ஊழ்வினை கதையில் விதவையான ஜெயக்கொடி மீ ட்டர் வட்டிக்காரன் மாயாண்டியால் ஜெயிலில் தள்ளப்படுகிறார்.
பெரிய மனுஷியான மகள் சந்திரகலா “உளுத்தம் சோறும் கோழி குழம்பும் செய்து தரேன் என்று சொன்ன அம்மா இன்னும் வரலையே. குச்சிலில் உள்ள ஓட்டை வழியே இமைக்காமல் வரவை பார்த்துக் கொண்டிருந்தாள்” கதை முடிந்து விட்டது
“சீதை வேசியாக்கப்பட்டாள்” சந்தேகப்படும் புருஷன் குடிகாரன்.
அன்றாடம் படுத்தும் பாடு.
ஒரு நாள் தூக்கில் தொங்கி விடுகிறான். உளவியல் ரீதியாக சீதை அனுபவிக்கும் அவஸ்தைகள். மகள் சந்திராவை படிக்க வைக்க மருத்துவமனையில் ஆயா வேலை. டாக்டர் ஜெகதீஸ்வரன் செய்யும் கருக்கலைப்பு மருத்துவ சேவை.
மனதை ரணமாக்குறது.
“கனலி ” கதையில் கடைசி முடிக்கும்போது அவள் பீர் குடிக்க தொடங்குகிறாள்.
” தீட்டு “என்ற கதையில் மூன்று நாட்கள் தான் பெற்றெடுத்த மகளை புயல் மழை காற்று என்ற அறிவிப்பை தெரிந்து கொண்டே வீட்டிற்கு வெளியிலே தூங்க வைத்து சாகக் கொடுக்கும் தாய்.
இரண்டு குழந்தைகளுடன் விதவையான தாய் பாக்கெட் சாராயம் விற்பவளாக மாறிய அவலம்.
கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி சாகடிக்கப்படுகிறார்.
நேர்மையான காவல் துறை அதிகாரி செல்லமுத்து சாதிய கொடுமையை நினைத்து மகளுடன் தூக்கில் தொங்கிய சிறுகதை “மூன்றாம் நாளும் முடிந்தது.”
” பசி கொண்ட இரவு” சிறுகதையை படித்து முடித்தவுடன் பாலியியல் தொழிலில் ஈடுபட்ட அப்பெண்ணின் உடல் மட்டும் அழுகவில்லை. இந்த சமூகமும் அழுகி நாறி போய் முடை நாற்றம் அடிக்கிறது என்ற கருத்து மட்டுமே முன்வந்து நிற்கிறது.
ஆளும் அதிகார அமைப்புகள், மக்களை விலங்கியல் காலத்திற்கு அழைத்து செல்லத் துடிக்கும் சக்திகள்
இத்தகைய பாலியல் கொடுமைகள், சமூக வக்கிரங்கள் தொடர்ந்து ஆண் பெண் என வேறுபாடு இல்லாமல் கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் நீடித்திருக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் காற்றை போல கண்ணுக்குத் தெரியாது உறுதியாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது
இந்த சிறுகதை புத்தகம் இளம் பெண்களிடமும் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய புத்தகம்.
விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய சிறுகதைகள்.
சமூக நோக்கு உடையவர்கள் அவசியம் படிக்க வேண்டிய விவாதிக்க வேண்டிய, வேறு திசையில் சிந்திக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு.
நூலின் விவரம்:-
நூல்: பசி கொண்ட இரவு
ஆசிரியர்: கி.அமுதா செல்வி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மொத்த பக்கங்கள்: 144
விலை: ₹.150
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம்:-
ச.செல்லத்துரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.