Subscribe

Thamizhbooks ad

அன்பு மொழி பேசும் சிறார் கதைகள் – ஆதி வள்ளியப்பன்

பேரன்பின் பூக்கள்

சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி

வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃபார் சில்ரன்,

 044 – 24332924

அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன.

தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு வந்த மலையாளச் சிறார் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்கிறது. யூமா வாசுகி, உதயசங்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களின்வழி மலையாளச் சிறார் இலக்கியம் தொடர்ச்சியாகத் தமிழுக்கு வளம் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

மலையாளச் சிறார் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களான கே. சிவதாஸ், பாப்புட்டி, சிப்பி பள்ளிப்புரம் உள்ளிட்டவர்களது படைப்புகள் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் மலையாளச் சிறார் இலக்கியத்தின் ‘கதைப் பாட்’டியான சுமங்களாவின் கதைகள் ‘பேரன்பின் பூக்கள்’ என்ற தொகுதியாக யூமா வாசுகி மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. சுமங்களாவின் முக்கியக் கதைத் தொகுதியான ‘மிட்டாய்ப் பொதி’, மலையாளத்தில் 40 ஆண்டுகளுக்குமுன் வெளியானது. மொத்தம் 29 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுதியே ‘பேரன்பின் பூக்க’ளாகி உள்ளது.

உணர்வுள்ள உயிரினங்கள்

பொதுவாகச் சிறார் இலக்கியம் என்றாலே விலங்குகளைப் பேச வைப்பது, நீதி போதனை செய்வதுதான் ‘ஈசாப் கதைகள்’ தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொகுதியில் கதாபாத்திரங்களாக வரும் உயிரினங்கள் மனிதர்களைப் போன்ற குணாதிசயங்களுடன் இல்லை. வீட்டைச் சுற்றி வாழும் உயிரினங்கள் அவற்றுக்கே உரிய குணாதிசயங்களுடன் பேசும் வகையில் தொடக்கக் கதைகள் அமைந்துள்ளன.

காட்டு உயிரினங்கள் எப்படி வீட்டு விலங்குகளாக மாறின என்பது குறித்த ‘விலங்குகளின் கிராமம்’ என்ற கதையில் உயிரினங்களின் உணர்வுகளும் சொல்லப்பட்டிருப்பது, மேம்பட்டதொரு உணர்வைக் கடத்துகிறது. பொம்மைகளை உயிரற்றவையாகவும் செயற்கையானவையாகவும் கருதும் மனநிலையை ‘பொம்மை வீடு’, ‘நீலாவின் கதை’ போன்றவற்றில் ஆசிரியர் வெற்றிகரமாக மாற்றிக் காட்டியிருக்கிறார். அதேநேரம் ‘பாம்பும் பாலும்’, ‘முருகேசனும் புலியும்’ போன்ற கதைகள் முன்வைக்கும் கருத்துகள் சற்றே பிற்போக்குத்தனத்துடன் அமைந்துள்ளன. இந்தக் கதைகள் கடத்தும் சேதி முக்கியமானது என்றாலும், சொல்லப்பட்ட முறை நெருடலாக உள்ளது.

நன்னம்பிக்கை விதைகள்

பொதுவாகக் குழந்தைகளை பயமுறுத்தவே பேய், பூதம் போன்ற கதாபாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். கதைகளிலும் அவை அச்சுறுத்துபவையாகவே பொதுவாக உருவகிக்கப்படுகின்றன. ஆனால், ‘தம்பிப் பயலும் பூதங்களும்’ கதையில் வரும் பொடியன் பூதங்களை நையாண்டி செய்து, அவற்றைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறான். இதேபோல ‘அப்ப மரம்’ என்ற ‘மாய யதார்த்த’ பாணிக் கதையும் மாறுபட்டு அமைந்துள்ளது. பேய் வீட்டைத் தேடி ஐந்து குழந்தைகள் போகும் சாகசம் நிறைந்த ‘நதிக்கரை வீடு’, பிச்சையெடுக்க சிறார்களை கடத்திச் செல்லும் கும்பல் குறித்த ‘விடுமுறைக் காலம்’ போன்ற சுவாரசியமும் திருப்பங்களும் நிறைந்த நெடுங்கதைகளும் இத்தொகுப்பில் உண்டு.

‘யானைக்கு ஏன் தும்பிக்கை வந்தது?’, ஆங்கில எழுத்தாளர் எனிட் பிளைடனின் ‘ஃபேமஸ் ஃபைவ்’ போன்றவற்றை சில கதைகள் லேசாக நினைவுபடுத்தினாலும், சுமங்களாவின் கதைகள் அனைத்தும் நம் மண்ணில் ஆழ வேரூன்றியவையாகவும் அன்பையும் மேம்பட்ட மதிப்பீடுகளையும் குழந்தைகளுக்கு உணர்த்தக்கூடியவையாகவும் திகழ்கின்றன.

தமிழில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட மலையாளச் சிறார் இலக்கியத்தில், இந்த நூல் நிச்சயமாக ஒரு மைல்கல். ஒரு கதைத் தொகுப்பாக முக்கியமாக உள்ள அதேநேரம், மொழிபெயர்ப்பிலும் இந்தத் தொகுதி தொட்டுள்ள உயரம் நிச்சயமாக பெரிதுதான். தமிழில் சிறார் இலக்கியம் எந்த திசைநோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்கான திசைகாட்டியாக இந்தப் புத்தகத்தைக் கொள்ளலாம்.

நன்றி: இந்து தமிழ்த் திசை

 

Latest

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here