Anti-caste poetry By Azhagiri. அழகிரியின் சாதிஎதிர்ப்பு கவிதை

சாதிஎதிர்ப்பு கவிதை – அழகிரி




அகிலத்தை நல்லாட்சி செய்யும்
ஆண்டவன் படைப்பில் என்றும்
இட்டார் பெரியோர் என்றார்
இடாதோர் இழிகுலம் என்றும்
சாதிகள் இரண்டே என்பதே
ஒளவையின் அறநெறி வாக்காம்
உழுதுண்டு வாழ்வோர் ஒரு சாதி
தொழுதுண்டு வாழ்வோர் மறு சாதி
என்பதே சத்தியமான வாக்காம்
பிறப்பினில் அனைவரும் ஒரு சாதி
செய்யும் வினையால் விளைந்து
விரிந்ததே சாதிக்கு ஒரு நீதியாம்
ஒற்றுமை யுடனேயே வாழ்ந்தால்
விடியுமே ஒரு கோடி நன்மை
வேற்றுமை கண்டால் களையென
வாழுமே, நலமாவென சிந்திப்பீர்
அண்டங் காக்கை முதலாக
ஐந்தறிவு உயிரினம் யாவுமே
உணர்த்தும் உண்மை உணர்வீர்
மக்களாய் பிறந்த மன்னவரே
மாக்கள் என்றநிலை மாறிடாது
மாமனிதர் என்றே நல் பெயரெடு
உயர்திணை வழியில் தேவரென
பூவுலகம் உள்ளவரை நின் புகழ்
பாடும் பாடுவதை கேட்பாய்,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *