அப்பா….!!!!
தன்னுடைய
கைக்குக் கிடைத்த
யார் யாரோ குடித்துவிட்டு
வைத்த ஒவ்வொரு
தேநீர்க் குவளையையும்
கண்ணீரால்
கழுவிக்கொண்டிருக்கும்
தன் அப்பாவின்
உழைப்பால்
நிரம்பி வழியும் ஒரு தேநீர்க் கோப்பையில்
தன் மகனின்
கைகளில் மிளிர்கிறது
வியர்வையால்
அகப்பட்ட புத்தகப்பையொன்று ,
கவிஞர் ச.சக்தி ,
பண்ருட்டி,
