ஜேம்ஸ் லாரன்ஸ் லாஃப்லின் (James Laurence Laughlin) ஏப்ரல் 2, 1850இல் பிறந்து நவம்பர் 28, 1933இல் மறைந்த அமெரிக்காவினைச் சார்ந்த செலாவணிகளை பற்றி ஆராய்ந்த மிகவும் அறியப்பட்ட பொருளாதார நிபுணர், சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத் துறையின் நிறுவனரும் ஆவார். லாஃப்லின் (புதிய) தொன்மை பொருளாதார அறிஞராகக் கருதப்படுகின்றார், முழுமையான கட்டுப்பாடற்ற மற்றும் கடின பணம் (hard money – கடினப் பணம் என்பது நாணயம், கடன்கள், அரசியல் நன்கொடைகள் எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
பொதுவாக, இது ஒரு அரசாங்க நிறுவனம் அல்லது பிற நிதி அமைப்புகளால் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட நிதிச் சங்கிலியைக் குறிக்கிறது) ஆகிய கருத்துக்களை சார்ந்த நிலைப்பாடு உடையவர். தங்கத் திட்டம், இருஉலேக திட்டம், பண அளவு கோட்பாடு, செலாவணி மற்றும் வங்கி அமைப்புகளின் செயல்பாடு குறித்த அவரது கருத்துகள் முக்கியமானதாகக் கருதப்பட்டன.
லாரன்ஸ் லாஃப்லின், அளவு கோட்பாட்டின் தத்துவார்த்த மற்றும் தரவு அடிப்படையிலான விமர்சனங்களுடன் சர்ச்சையைத் தூண்டினார், அதே நேரத்தில் இர்விங் ஃபிஷர் பண மரபுவழியின் முக்கிய பாதுகாவலராக உருவெடுத்தார். மாற்றத்தக்கக் காகிதப் பணத்தின் சிக்கலானது விலைகளையோ அல்லது பண அளிப்பையோ உயர்த்தாது, மாறாக பணத்துடன் தொடர்பில் உள்ள தங்கத்தின் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று லாஃப்லின் வாதிட்டார். அவரது நிலைப்பாடு பணத் தேற்றத்தின் பாரம்பரிய நடுநிலைமையுடன் பொருந்தாததாகக் கருதப்பட்டது.
லாஃப்லினுக்கும் அளவு கோட்பாட்டாளர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் அடிப்படை ஆதாரங்களை அடையாளம் காண, பணத்தின் நடுநிலைமை முன்மொழிவு இரண்டு கூறுகளாக பார்க்கப்படுகின்றது அவை, பணத்தின் நடுநிலைமை மற்றும் இயல்பான பணத்தின் பங்கு ஆகும். பொருளாதாரக் கோட்பாடு மற்றும் வரலாறு பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருந்த அவர், அரை நூற்றாண்டு காலமாக கிரீன்பேக் பணவீக்கம் (US டாலா்), தடையற்ற வெள்ளி நாணயம் அல்லது பணத் தரத்தின் தேய்மானம் ஆகியவற்றிற்குத் தொடர்ச்சியாக எதிர்ப்பாளராக இருந்தார்.
ஆதாரம்: www.hetwebsite.net; www.encyclopedia.com; www.journals.uchicago.edu ; www.ideas.repec.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

