டி.ஆர். காட்கில் (D.R.Gadgil – தனஞ்சய் ராமச்சந்திர காட்கில்) ஏப்ரல் 10, 1901இல் பிறந்து மே 9, 1971இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணர் ஆவார். பொருளாதார திட்டமிடல், பிராந்திய திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு காட்கிலின் முக்கியப் பங்களிப்பினை செய்துள்ளார். அவர் இந்திய அரசின் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும், புனேவில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் மாநிலங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டின் முறை குறித்து காட்கில் ஆய்வுகளை மேற்கொண்டார். 1969 ஆம் ஆண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கினார், இது பிரபலமாக காட்கில் சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டங்களில் மாநிலங்களுக்கு மத்திய நிதி உதவிக்கான அடிப்படையை உருவாக்கியது. காட்கில் சூத்திரமானது, மக்கள் தொகை (60%), தனிநபர் வருமானம் (10%), வரி வருவாய் (10%), நீர்ப்பாசனம் மற்றும் மின் திட்டங்கள் (10%) மற்றும் சிக்கல்கள் (10%) போன்ற அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.
நாட்டின் பொருளாதார மாற்றத்தில் மிக முக்கியமான நிகழ்வு கைவினைப் பொருட்களின் வீழ்ச்சியாகும், இதற்கு பெரும்பாலும் ரயில்வே கொள்கை, சுதந்திர வர்த்தகக் கொள்கை மற்றும் இந்தியாவில் தொழில்நுட்பக் கல்வி இல்லாதது ஆகியவை காரணமாகும். விவசாயத்தின் வணிகமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவை இந்தியாவில் தொழில்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தன. காட்கில் தொழில்துறை தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்டு, அதிக ஊதியத்தைத் தவிர, தொழில்துறை வீட்டுவசதி, வேலையின்மை காப்பீடு, ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், மருத்துவக் காப்பீடு போன்ற பல நலத்திட்டங்களைப் பரிந்துரைத்தார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, நேரடி வரிகளை அதிகரித்தல், பொதுக் கடன் வாங்குதல், உற்பத்தி வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல், நிர்வாகச் செலவினங்களில் சிக்கனம், லாபம் மற்றும் முதலீடுகள் மீதான கட்டுப்பாடு, விலைக் கட்டுப்பாடு மற்றும் பங்கீடு, அத்தியாவசியப் பொருட்களின் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் இந்த அனைத்து நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல நிதி நடவடிக்கைகளை காட்கில் பரிந்துரைத்தார்.
விலை கொள்கையைப் பொறுத்தவரை, வேளாண் பொருட்களின் விலைகளை நிலைப்படுத்துவதும் விலைக் கோட்டைப் பராமரிப்பதும் நெருங்கிய தொடர்புடையவை என்று காட்கில் கூறினார்; மேலும், கிராமப்புற மக்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், துணி, சர்க்கரை, சமையல் எண்ணெய், சோப்பு, தேநீர், புகையிலை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். காட்கில் இந்தியப் பொருளாதார சங்கத்தின் உறுப்பினராக இருந்தார் மற்றும் 1940இல் அதன் தலைவராகப் பணியாற்றினார்.
ஆதாரம்: www.mintageworld.com; www.theintactone.com; www.alchetron.com; www.economicsdiscussion.net
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

