நிலவே,
சிறிது நாட்கள்
வெளியில் வராதே!

காற்றே
சிறிது காலம்
தென்றலை அனுப்பாதே!

பனியே,
சிறிது காலம்
தண்மையாய் இராதே!

மலர்களே,
சிறிது காலம்
மலர்வதை மறந்து விடுங்கள்!

குளிரோடையே,
சிறிது காலம்
சூடாக ஓடு!

பெண்களே,
சிறிது காலம்
சிரிக்காமல் இருங்கள்!

இப்படியாக
இருப்பீர்களானால்,

அழுகைக் குரலும்
அவல வாழ்வும்
எவர் செவிகளில் விழுமோ
அவரே கவிஞர்.
அவர்தான் கவிஞர்!

– பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *