ஆகஸ்ட் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சர்தாரா சிங் ஜோல் (Economist Sardara Singh Johl Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சர்தாரா சிங் ஜோல் – முனைவர் பு. அன்பழகன்

சர்தாரா சிங் ஜோல் (Sardara Singh Johl) ஆகஸ்ட் 2, 1928இல் பிறந்த புகழ்பெற்ற இந்திய வேளாண் பொருளாதார நிபுணர், எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். ஜோல் பஞ்சாபி பல்கலைக்கழகம், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்படப் பல குறிப்பிடத்தக்கக் கல்விப் பதவிகளை வகித்தார். 2012இல் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இதனால் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தரானார். அவர் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்திற்குத் தலைமை தாங்கியுள்ளார் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய ஆளுநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் பஞ்சாப் மாநில திட்டமிடல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் தகைசால் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜோல் திட்டம்

பஞ்சாப் அரசின் வேளாண் கொள்கைக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக, ஜோல் திட்டம் என்று பிரபலமாக அறியப்படும் பிற பயிர்களுக்கு மாறுவதற்கு வேளாண் சமூகத்திற்கு மானியங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், மாநிலத்தில் கோதுமை மற்றும் அரிசி விவசாயிகளுக்குப் பயிர் சுழற்சி மற்றும் பல்வகைப்படுத்தலை அவர் முன்மொழிந்தார். நான்கு வெவ்வேறு யூனியன் அரசாங்கங்கள், பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநில அரசுகளுக்கும், இலங்கை அரசு ஆகியற்றுக்கு ஆலேசகராகவும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக வங்கி மற்றும் மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் ஆலோசகராக அவர் பணியாற்றினார்.

“Rationalisation of Electricity Tariff in Punjab”, “Diversification of Agriculture in Punjab”, “Structural Adjustments in Cropping Patterns for Growth and Productivity in Punjab” மற்றும் “Structural Reforms in Agricultural Sector for Productivity and Growth in India” உள்ளிட்ட பல அரசாங்க அறிக்கைகளை அவர் தயாரித்துள்ளார், இவை அரசாங்கக் கொள்கை உருவாக்கங்களுக்குப் பெருமளவிற்குப் பங்களித்தது. ஜோல்லின் கூற்றுப்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நுகர்வோர் செலுத்தும் விலையில் 20% கூடப் பெறுவதில்லை என்று குறிப்பிடுகிறார். விவசாயிகள் மற்றும் விவசாயிகள் தற்கொலை என்ற பெரிய பிரச்சனையும் தற்போதைய அமைப்பின் விளைவாகும் என்கிறார் ஜோல்.

ஆதாரம்: www.naas.org.in; www.econbiz.de; www.econbiz.de

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *