எலினோர் ஆஸ்ட்ரோம் (Elinor Ostrom) ஆகஸ்ட் 7, 1933இல் பிறந்து ஜூன் 12, 2012இல் மறைந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஆவார், ஆலிவர் இ. வில்லியம்சனுடன் சேர்ந்து, analysis of economic governance, especially the commons (பொருளாதார நிர்வாகம், குறிப்பாக பொது மக்களின் பகுப்பாய்வுக்காக) என்ற பங்களிப்பிற்காக 2009ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணி இவர்தான். ஆஸ்ட்ரோம் 1965 முதல் 1991 வரை ப்ளூமிங்டனில் உள்ள இந்தியனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
காடுகள், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் எண்ணெய் வயல்கள் போன்ற பொதுவான வளங்களை அரசாங்க ஒழுங்குமுறை அல்லது தனியார்மயமாக்கல் இல்லாமல் எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதில் ஆஸ்ட்ரோம் கவனம் செலுத்தினார். உலகெங்கிலும் உள்ள சிறிய சமூகங்கள் பொது வளங்களை அதிகமாகச் சுரண்டுவதைத் தடுக்கும் சுயராஜ்ஜிய நிறுவனங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தது ஆஸ்ட்ரோமின் மிக முக்கியமான சாதனையாகும். ஆஸ்ட்ரோம் இந்தியனா பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாடு மற்றும் கொள்கை பகுப்பாய்வு மையத்தினை இணைந்து நிறுவினார், அங்கு அவர் ஒரு பேராசிரியராகவும் பணியாற்றினார் மற்றும் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்தார். ஆஸ்ட்ரோமின் பணி புரட்சிகரமானது, Governing the Commons என்ற அவரது புகழ்மிக்க புத்தகத்துடன் வள மேலாண்மையின் நடைமுறையில் உள்ளக் கருத்துக்களைச் சவால் செய்தது. Understanding Institutional Diversity மற்றும் Working Together: Collective Action, the Commons and Multiple Methods in Practice உள்ளிட்ட பல புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். தனது ஆராய்ச்சியில், ஆஸ்ட்ரோம் பகுத்தறிவு தேர்வுக் கோட்பாட்டையும் (rational choice theory) வளர்ச்சி பொருளாதாரத்திலிருந்து தெளிவன புரிதலைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்குப் பயன்படுத்தினார்.
Theory of Collective Action (கூட்டு நடவடிக்கை கோட்பாடு)
தனது விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், கூட்டு நடவடிக்கை மூலம் பொதுவான வளங்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான எட்டு கொள்கைகளை ஆஸ்ட்ரோம் உருவாக்கினார், அவை
1) பொதுவான வளத்தின் தெளிவான எல்லைகளை வரையறுத்தல்:
2)பொதுவான வளங்களைப் பயன்படுத்துவதற்கான விதிகள் உள்ளூர் தேவைகள் மற்றும் நிலைமைகளுக்குப் பொருந்துவதாக இருத்தல் வேண்டும்.
3) குழு முடிவெடுப்பதை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
4) பொதுவான வளங்களின் பயன்பாடு கண்காணிக்கப்பட வேண்டும்.
5)வரையறுக்கப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கான தடைகள் குறைக்கப்பட வேண்டும்.
6) மோதல்கள் எளிதாகவும் முறைசாரா முறையிலும் தீர்க்கப்பட வேண்டும்.
7)உயர் அதிகாரிகள் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் சுய-ஆளும் முறையினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
8)சிறிய அமைப்புகளைப் பெரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதை மேற்கொள்ளவேண்டும்.
எலினோர் ஆஸ்ட்ரோமின் கோட்பாடு, உள்ளூர் சமூகங்கள் தங்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்க மிகவும் பொருத்தமானவை என்று கூறுகிறது, ஏனெனில் அவர்கள் இந்த வளங்களின் முதன்மை பயனர்கள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, வளங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து ஒழுங்குமுறைகளும், வளங்களுடன் நேரடி தொடர்பு இல்லாத உயர், மத்திய அதிகாரத்தால் அல்ல, மாறாக உள்ளூர் மட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
ஆதாரம்: www.britannica.com; www.investopedia.com; www.econlib.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

