ஜான் நெவில் கீன்ஸ் (John Neville Keynes) ஆகஸ்ட் 31, 1852இல் பிறந்து நவம்பர் 15, 1949இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் ஜான் மேனார்ட் கீன்ஸின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. நெவில் கீன்ஸ் ஆல்பிரட் மார்ஷலின் முன்னாள் மாணவர் ஆவார். பொருளாதாரத்தில் நெவில் கீன்ஸின் மிக முக்கியமான பங்களிப்பாக Logic and methodology (தர்க்கம் மற்றும் வழிமுறைத் துறை) போன்றவையாக இருந்தன. அவரது முதல் முக்கிய படைப்பான, Studies and Exercises in Formal Logic 1884ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, இப்புத்தகமானது கருத்துக்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியது மட்டுமல்ல கணித குறியீடுகள் பயன்படுத்தவில்லை என்னது குறிப்பிடத்தக்கது.
நெவில் கீன்ஸின் பொருளாதார முறை குறித்த முக்கிய படைப்பு The Scope and Method of Political Economy 1891இல் வெளியிடப்பட்டது, இதில் பொருளாதாரத்திற்கான அணுகுமுறைகளை inductive and deductive (தூண்டல் அல்லது பகுத்தறிதல்) என வகைப்படுத்தியது. நெவில் கீன்ஸ், தூண்டல் மற்றும் பகுத்தறிதல் இரண்டும் சிறந்த பொருளாதார பகுப்பாய்வின் அத்தியாவசிய கூறுகள் என்று வலியுறுத்தினார். நேவில் கீன்ஸ், அரசியல் பொருளாதாரத்தைச் செல்வத்தின் உற்பத்தி, பகிர்வு மற்றும் குவிப்புடன் தொடர்புடைய ஒரு நேர்மறையான அறிவியல் அல்லது சமூகத்தில் மனிதக்குலத்தின் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து எழும் நிகழ்வுகளைக் கையாளும் அறிவியல் என்று வரையறுத்தார்.
நெவில் கெய்ன்ஸ் பொருளாதாரத்தைப் பின்வருமாறு பிரித்தார்:
Positive Economics (நேர்மறை பொருளாதாரம்) – பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஆய்வு.
Normative Economics (நெறிமுறை பொருளாதாரம்) – பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய ஆய்வு.
Applied Economcis (பயன்பாட்டுப் பொருளாதாரம்) – பொருளாதாரக் கலை, அல்லது பொருளாதாரக் கொள்கை பற்றியது. பொருளாதாரக் கலை, நேர்மறை பொருளாதாரத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை நெறிமுறை பொருளாதாரத்தில் தீர்மானிக்கப்பட்ட நெறிமுறை இலக்குகளுடன் தொடர்புப்படுத்துகிறது.
நெவில் கீன்ஸ் மூன்று நிலைகளை வேறுபடுத்தினார்.
(1) தொடக்கத்தில், பொருளாதார நிபுணர் பொருளாதார உறவுகளைப் பற்றிய நுண்ணறிவைப் பெற உலகின் உண்மை நிலையினைக் கவனிக்கிறார்.
(2) முந்தைய கவனிப்பிலிருந்து பெறப்பட்ட தெளிவாகக் கூறப்பட்ட வளாகங்களிலிருந்து, பின்னர் அவர் அரசியல் பொருளாதாரத்தின் பொதுவான விதிகளை இனம்கண்டு அனுமானத்தின் மூலம் உருவாக்குகிறார்.
(3) இந்த விதிகள், தூண்டல் சரிபார்ப்பு மூலம் சோதிக்கப்படுகின்றன.
இரண்டாவது நிலை மட்டுமே கண்டிப்பாகப் பகுத்தறியும் தன்மை கொண்டது, மேலும் இது முந்தைய மற்றும் அடுத்தடுத்த, முதன்மையாகத் தூண்டல், நிலைகளுடன் தொடர்புடையது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இதன் விளைவாக, பொருளாதாரம் பகுத்தறிதல் மற்றும் தூண்டல் முறைகளைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்
www.britannica.com; www.hetwebsite.net; www.newworldencyclopedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

