மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் (1961ல் எழுதிய அறிவியல் கட்டுரை)
மேற்கண்ட கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டார். அந்த அளவுக்கு மிகவும் ஆபத்தான கேள்வி அது. ஒவ்வொரு மொழியிலும் மனித நாற்ற வாயுவுக்கு ஒரு பெயர் உண்டு. உங்கள் மொழியில் என்ன பெயர், ஆனால் சொன்னால் கூசுமே. மனிதன் கூடுமான வரை மறைத்து வைக்க விரும்பும் – ஆனால் அத்தியாவசியமான கழிவு வெளியேற்றம் அது.
தொழிற்சாலையில் இருந்து வாயு-புகை வெளியேறுவதை நகரத்தின் நாகரிக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்று பார்க்கிறோம். வரையறைவாதம் தொழிற்சாலைகள் உருவாவதை தொழிற்புரட்சி என்று பெயரிட்டு உள்ளது. நாம் எதை எதையோ கொண்டாடுகிறோம். தாய்-தினம் முதல் பேஸ்-பால் வாரம் வரை. ஆனால், இப்படி ஆய்வகத்தில் உயிரை விடும் விஞ்ஞானிகளை நாம் சரியாக கொண்டாடுவது இல்லை. ஏன் பெரிய மனக்குறை இது.
விஞ்ஞானிகளிடம் குறைகள் இல்லாமல் இல்லை. ஒரு விதியை வெளியிட்டு பிடிவாதமாக – நானே எல்லாம் என அதிகாரமாக செயல்படும் ஓரிரு நபர்களை நீங்கள் விதி விலக்கு செய்தால்… வெறும் காகித மேசை மேதாவிகளை தவிர்த்தால்… உண்மையிலேயே ஆய்வகத்தில் வாழ்நாளையே கழித்து முடித்துவிடும் (மேற்குறிப்பிட்டது போன்ற) சிலரையேனும் சந்திக்க முடியும்.
இன்று கரியமில வாயுதான் மனித உபரி கழிவாக வெளியேறும் வாயு என்று தெரியும். அன்று அது என்ன வாயு என கண்டறிய நடந்த வாயு – ஆய்வு பற்றி வரலாறு பெரிய அளவில் எதையும் பதிவு செய்து வைக்கவில்லை. உதாரணமாக அது ‘ஸெனான் புளூரைடு’ என்று நினைத்தார்கள். மோசமான கோட்பாட்டு அறிவியல் ஆய்வக அறிவியலை எப்படி பாதிக்கும் என்பதற்கு ஸெனான் புளூரைடின் கண்டுபிடிப்பே ஒரு உதாரணம்.
‘முட்டாள்கள்’ இன்றைய நவீன வேதியியலாளர் குரல் உங்களுக்கு கேட்கும் மகா முட்டாள்கள், அபூர்வ வாயு அல்லது அருமண்வாயு என பெயர் பெற்றது ஸெனான். அந்தப் பெயர் வருவதற்கே காரணம் இவ்வகை வாயுக்கள் வேறு எந்த வகை தனிமத்தோடும் வினைபுரியாது என்னும் அபூர்வ தன்மையால்தான்… இது தெரிந்தும் கூட சில முட்டாள் வேதியியலாளர்கள் ஸெனானையும், புளோரினையும் நிக்கல் குடுவையில் வைத்து கலந்து பிரிக்க முடிவெடுத்திருப்பார்கள்?
ஏதோ அப்படி செல்வது ரொம்ப எளிதான காரியம் போல தெரிகிறது அல்லவா. கொஞ்சமாக ஸெனானை ஒரு நிக்கல் உலோகத்தால் ஆன வேதிக்குடுவையில் போட்டு (அல்லது செலுத்தி) அதில் புளோரின் கலந்து… முடிவை அறிவித்து உலகையே அசந்து போக வைத்து நோபல் பரிசு கூட பெறமுடியும் என்பது போல இருக்கிறது.
உண்மையில் இன்று நாம் மனித நாற்ற வாயு பற்றி நிறைய ஆய்வக தகவல்களோடு இருக்கிறோம். வெறும் கரியமிலவாயு மட்டுமல்ல வேறு பலவும் இந்த நாற்ற வாயுவில் உண்டு. நாற்றத்தை பொறுத்து அதில் அதிகமுள்ள வேதிப்பொருளை அறிந்து சொல்ல வேதியியல் இன்று கற்றுள்ளது. ஆனால் அந்த அறிவை அடைவதற்கு மரணம் உட்பட வேதியியல் பல ஆபத்து கடந்தது. நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.
உதாரணமாக நாம் புளோரினின் (துர்நாற்ற) வரலாறை பரிசீலிப்போம். 1529ல் மனித நாற்ற வாயு பற்றிய முக்கிய ஆய்வில் ஈடுபட்ட முதல் அறிஞரான ஜார்ஜ் அக்ரிகோலா. தாதுக்களின் முதல் நவீன அறிஞரும் அவர்தான். ஜெர்மனியின் சுரங்கங்களில் மனிதனின் ஆகப் பழைய திரவமான புளோரினின் தாத்தா தனிமம் ஒன்றை அவர் அந்த தொழிலாளர்கள் மூலம் அறிந்தார். சுரங்கங்களில் இருந்து கிடைத்த தகர்க்க முடியாத கரியை அந்த திட கலவை மிக எளிதாக உருக்கியது. அப்போது வந்த வாடைதான் புளோரின் பற்றிய ஜார்ஜ் அக்ரிகோலாவின் ‘வேறு’ எண்ணத்திற்கு காரணம். இரண்டாவது அந்ததிடக்கலவை – புளோரின் இளம் மஞ்சள் பச்சை கலந்த நிறத்தில் இருந்ததும் ஒரு காரணம். அது பாயும் திரவமாக்கப்பட்டபோது… லத்தின் மொழியில் – ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாயும் திரவம் – புளூயர் என்று அழைக்கப்படுவதால் – அதற்கு புளோரின் என்று அக்ரிகோலா பெயர் வைத்தார். எடுத்த உடன் புளோரின் என்று வைத்துவிடவில்லை. முதலில் புளோயர்கல் என்றே அவர் அழைத்தார்.
1960இல் புளோரின், புளோரைட் என்ற பெயரை பெற்றிருந்தது. ஜெர்மனியின் விழி ஆடி நிபுணர் ஹென்ரிச் ஸ்ச்வென்ஹார்டு கடுமையான அமிலங்களில் புளோரினை செலுத்தி என்ன நடக்கிறது என எட்டி பார்த்தபோது, அவரது கண்- கண்ணாடியில் புகை அப்பியது. அது நிரந்தரமாக புகையாகவே நின்றுவிட்டது. அல்லது அவர் அப்படி நினைத்தார். ஆனால் மனித நாற்ற வாயுவின் வாடை மூக்கை துளைத்தது. இரண்டு மூன்று நாட்கள் அந்த வாயுபற்றிய ஆய்வில் இருந்த ஹென்றிச் பிறகு அத்திரவம் கண்ணாடியை உண்மையில் உருக்கி இருந்ததை அறிந்தார். கண்ணாடியை உண்மையில் உருக்கி இருந்ததை அறிந்தார். கண்ணாடியை புளோரின் கொண்டு உருக்கி அழகிய பல உருவங்கள் செய்து உலகை ஆச்சரியப்பட வைத்தாலும் தனது இந்த அறிதலை அவர் ரகசியமாக வைத்தார். அமிலத் தன்மை எறிய புளோரின் மனித நாற்றவாயுவை வெளியிடும் என்பது உண்மையினால் உடன் இருப்பவர்கள் தப்பித்து ஓட வேண்டி இருக்கும் அல்லவா. எனவே ரகசியம் காத்தது ஒரு விதத்தில் நல்லதாக போனது.
இந்த கண்ணாடி தின்னும் அமிலமான புளோரினை பிறகு ஸீலே (ஆக்ஸிஜன் கண்டிப்பு புகழ்) 170ல் மீண்டும் எடுத்து மனித நாற்ற வாயு விஷயத்தை வேதியியலாளர்கள் இந்த வாயுவோடு ஏன் இணைத்தார்கள் என பல வகையில் ஆய்வு செய்து புளோரிக் அமிலம் என அதற்கு பெயரும் இட்டார். தனக்கு பல விதமாக வாயுத் தொல்லை ஏற்படுத்திக் கொண்டு சுயநாற்ற வாயுவை ஆய்வு செய்ய முயன்றார். ஒரு குப்பியில் அந்த வாயு எவ்வளவு முயன்றும் அடங்கவில்லை. பொதுவாக எந்த வேதிப் பொருளை ஆய்வு செய்தாலும் ஸீலே அவற்றை மூக்கிற்கு கிட்டே எடுத்து செல்வது லேசாக நாக்கில் வைத்து சுவை பார்ப்பது என முயல்வது வழக்கம். புளோரிக் அமிலத்தை அவ்விதம் செய்ய அவருக்கு மனம் பல வகையில் ஆய்வுகளை தொடர்ந்து அழுகிய முட்டை வாடை மனித நாற்றவாயுவில் வருவதை ஒப்பிட ஹைட்ரஜன் சல்பைட்டோடு புளோரிக் அமிலத்தை கலந்து பார்த்து மூக்கில் இழுத்ததால் நோய்வாய்ப்பட்டார். 43 வயதிலேயே இறந்தும் போனார்.
இன்று அழுகிய முட்டை வாடையோடு நாற்ற வாயுவை மனிதன் வெளியிட சல்ஃபர்தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. உணவில் நார் சத்து தரும் பருப்பு வகைகள் அதிகம் சேர்ந்தால் சல்ஃபர் வாயு வடிவில் வெளியேறும். அதற்கு உணவை செரிக்கும் ஒரு என்சைம்தான் காரணம். மனிதன் நுகரும் பிராணவாயு ஆக்ஸிஜனால் ஆனது என்று பெயரிட்டவர் ஷீலே. புளோரிக் அமிலத்தில் ஆஸ்கிசனே இல்லாத ஒரு வகை வாயு எப்படி வெளியேறும் என யோசித்து அதை பதிவும் செய்து சென்றார் ஷீலே.
ஆனால் அதே ஹட்ரஜனையும் புளோரிடையும் இணைத்து சூடுகட்டி பிழைத்து, ஆனால் ஸெனான் புளோரைடை நிக்கல் குடுவையில் கலந்து மிக கச்சிதமான மனித நாற்ற வாயுவை ஆய்வகத்தில் ஏற்படுத்திட நடந்த சோதனையில் பெல்ஜியம் வேதி அறிஞர் லொவ்யோட் ஆய்வகத்திலேயே இறந்து போனார்.
இன்று நமக்கு நவீன வேதியியல் பல அறிய நாற்ற வாயு தகவல்களை கொடுத்திருக்கிறது. நாம் உண்ணும் உணவுக்கும் நமது செரித்தல் முறைக்கும் வேதி ஆய்வகம் ஒன்றில் நடக்கும் உச்சகட்ட வேதிவினைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. நமது ஒட்டுமொத்த உணவு- ஆய்வகம் ஒன்று சேர்ந்த ஒற்றை ஆய்வகம் வாயில் தொடங்கி பின்பக்கம் ஆசன வாயில் அது முடிவடைகிறது. முன் சிறு குடல், இடை சிறு குடல் மற்றும் பின் சிறு குடல் இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை வேதிக் கூடங்கள்.
உமிழ் நீர் சுரப்பி முதல், இரைப்பை சுரப்பிகள், கணையம், கல்லீரல் மற்றும் பித்தப்பை என்று பலவேதி செயல்பாடுகளால் உடலில் வாயுக்கள் தோன்றும் உணவு செரித்தலின்போது அதை மாவாக்கி அடித்து பிரித்து சத்தை பிழிந்தெடுத்து உடலின் செல்களில் சேர்க்க நடக்கும் பெரிய வேதி வேலை அது. அந்த சமயத்தில் ஹைட்ரஜன் கரியமில வாயு, நைட்ரஜன், மீத்தேன் என பல வகையில் வாயுக்கள் வெளியேறுகின்றன.
தாவரம் அல்லது விலங்குகளை சமைத்து நாம் உணவாக உட்கொள்கிறோம். அத்தோடு பழச்சாறு தண்ணீர், தேனீர் எனவும் அருந்துகிறோம். நம் வாய்வழியேயும் சில வாயுக்கள் உள்ளே போய் விடுகின்றன. நாள்தோறும் 2 லிட்டர் நாற்ற வாயு உற்பத்தி ஆகிறது. சில சமயம் அளவுக்கு அதிகமான உணவை உண்டு அதை செரிக்க முடியாமல் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இதனால் பாக்டீரியாக்கள் மரிக்கின்றன. இந்த இறந்த பாக்டீரியாக்களின் மணமும் கலந்து வீசுகின்றன. இது நல்லதல்ல. கூடவே நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மருத்துவந்தரும் வேதிக்கலவைகள் ஏற்படுத்தும் வினைகளும் புதிய வகை வாயுக்களை உருவாக்குகின்றன.
ஆனாலும் புளோரின் பிரச்சினையை யாரும் கைவிடவில்லை. விரைவில் அதன் தொழிற்துறை பயன்பாடுகள் வெளியாயின. அத்தோடு நிற்கவில்லை 1943ல் ராணுவத்திற்கு புளேரின் குண்டுகள் தயாரித்து ஹென்றி மொய்சான் எனும் அறிஞர் புதிய பாதைக்கே வழிவகுத்தார். அதன் வழியே அந்த இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தயாரிக்க புளோரின் பயன்பாடு அறிமுகம் ஆனது. நாற்றவாயு வெளியிடுவதற்கும் அணுகுண்டு வீசுவதற்கும் இப்படி ஒரு விநோத தொடர்பை வேதியியல் சாதித்தது. கரியமில வாயு அடைக்கப்பட்ட பானங்களை அருந்துவதால் நாற்றவாயு உடலில் அதிகம் சுரக்கும். மேலும் உடலில் சில என்சைம்களின் பற்றாக்குறை ஏற்பட்டால் அதீத புரத உணவை செரிக்க முடிவது இல்லை. இதனால் வேதிவினை தவறாகி அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்களும் உருவாகின்றன என்று டொனால்டு போஸ்ட் எனும் ஆஸ்திரேலிய வேதி அறிஞர் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால் மனித நாற்றவாயு குறித்த ஆய்வுகள் இன்று முழுமை அடைந்து விட்டதாக சொல்லி விட முடியாது. உடலில் உற்பத்தியாகும் வாயுக்களில் அறுபது சதவிகிதம் வாய் வழியே ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. ஆனால் வாய் வழியே வெளியேறும் வாயுவில் உணவு மணமே பெரும்பாலும் வீசுகிறது. பின்னாலிருந்து வெளியேறுபவை பல்வகை நாற்ற வாயுக்களாக இருப்பது ஏன் என்பதன உட்பட பல கேள்விகள் மிச்சமுள்ளன. நமது உடல் ஒரு வேதியியல் ஆய்வுக் கூடம் வாயுக்கள் சிலவெளியேறலாம் தவறில்லை. உள்ளே பொசுங்கி புகைவிட்டு நிலமை மோசமானால் இந்த ஆய்வுக் கூடமே மொத்தமாக மூடப்படும் என்பதற்கு ஷீலேவும் லொவ்யோட்டும் சாட்சி.
(ஐசக் அஸிமவ் – உலகம் அறிந்த அறிவியல் எழுத்தாளர் 1961ல் The Magazine of Fantasy and Science Fiction இதழில் எழுதிய கட்டுரை.)