Subscribe

Thamizhbooks ad

ஆயிரம் சூரியப் பேரொளி – காலித் ஹுஸைனி…. தமிழில் ஷஹிதா…!

காபூலில் பிறந்து அமெரிக்காவில் வாழும் காலித் ஹுசைனியின் இரண்டாவது நாவல். முதல் நாவலான பட்ட விரட்டி (KITE RUNNER) தமிழில் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்டது. அது இரு ஆண் நண்பர்களுக்கான நட்பை, எதிர்பார்ப்பை, ஏமாற்றங்களைப் பேசியது எனில் இந்தப் புத்தகம் இரு பெண்களிடையே ஏற்படும் புரிதல்கள், ஒற்றுமை பற்றிப் பேசுகிறது. மொழி பெயர்த்த ஷஹிதா சென்னையைச் சேர்ந்தவர். தற்போது புதுக்கோட்டையில் வசிக்கிறார். மிக மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.
பாரசீக மொழி, தமிழ் போலவே பல க்ளாசிக் இலக்கியங்களைப் கொண்டது. அதன் மொழியை சுவை மாறாமல் அற்புதமாகக் கொடுத்திருக்கிறார். எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இன்னும் மூன்று வருடங்களில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடெமி விருது உறுதி.
கதைக்குள் செல்வதற்கு முன் ஆப்கானிஸ்தான் வரலாறு கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஆப்கான் கடந்த நாற்பது வருடங்களாகவே ஒரு கொந்தளிப்பான தேசம். எழுபதுகளின் பிற்பகுதியில் சோவியத் யூனியனின் நேரடி ஆட்சியின் கீழ் வருதல், பின்பு நஜிபுல்லா மூலம் சோவியத் ஆட்சி, முஜாகிதின்கள் என்ற அமைப்பில் பலர் ஒன்று சேர்தல், அவர்களின் கீழ் வருதல், அல்காய்தா என்ற உள் அமைப்பு உருவாதல், அதனின்று சிலர் தாலிபன் என்ற பெயரில் முஸ்லிம் அடிப்படைவாதம் பேசுதல்… இவற்றினிடையே வெடிக்கும் குண்டுகள், இறக்கும் உடல்கள், புதைக்கப் படும் மனித நேயம், பெண் கல்வி…….
Khaled Hosseini: How I Write
எழுத்தாளர் காலித் ஹுஸைனி
தண்டனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு முன்னர் தூக்கு தண்டனை நிறைவேற்றல், புர்கா அணிந்துதான் அதுவும் ஆண் துணையுடன்தான் பெண்கள் வெளியே செல்ல வேண்டிய நிலை…. இவையெல்லாம் நாவலில் அங்கங்கே வருகின்றன. எப்படி எந்த ரூபத்தில் வருகின்றன என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.நாவல் நான்கு பகுதிகளில் 51 அத்தியாயங்களாகப் பரவி விரிந்துள்ளது.
முதல் பகுதி மரியம் என்ற இளம் பெண்ணிற்கானது. தாயை இழந்த நிலையில், தந்தை ஜலீலால் தன் மூன்று மனைவியுடன், முறை தவறிப் பிறந்த மரியத்தை வைத்துக் கொள்ள பிரியப்படாமல் ஒரு நாற்பத்தைந்து இளம் முதியவர் ரஷீதுக்கு வாழ்க்கைப் பட கட்டாயப் படுத்தப் படுகிறாள். ஹெராத் நகரத்திலிருந்து காபூல் நகரத்திற்கு புலம் பெயர்தல்… அவளைச் சுற்றி நகரும் கதை.
இரண்டாம் பகுதி லைலா என்ற சிறுமிக்கான பகுதி. மரியம் வீட்டருகே வசிப்பவள். அப்பா ஒரு புத்தகப் பிரியர். அம்மா அரசியல் பேசுபவர். முஜாகிதின்களை ஆதரிப்பவர். தங்கள் இரண்டு மகன்களை நாட்டின் விடுதலை முஜாகிதின்களால்தான் சாத்தியம் என்று நம்பி போருக்கு அனுப்பியவர்கள். பலி கொடுத்தவர்கள்.
Meet the director of "Mariam," a powerful film about Muslim ...
லைலாவின் பால்ய கால ஸ்நேகிதன் தாரிக். குண்டு வீச்சு ஒன்றில் ஒரு காலை இழந்தவன். அரசியல் நிகழ்வுகள் குடும்பங்களை இடம் பெயர வைக்கின்றன. சிறு வயது நட்பு காதலாகிக் கசிந்த போது தாரிக் இடம் பெயர்கிறான். லைலா குடும்பம் குண்டு வீச்சுக்குப் பலியாக, அவள் மட்டும் காப்பாற்றப் படுகிறாள், ரஷித் – மரியம் மூலம். மூன்றாம் பகுதி மரியம் – லைலா உறவு முறைகளை விவரிக்கிறது. ஆரம்பத்தில் எதிர் நிலை. பின்னர் ரஷித்தின் பெண்ணடிமைத்தனத்தின் நிகழ்வுகளில் மனம் மாறி ஒன்று பட்டு ரஷிதை எதிர்த்தல் என்ற நிலையில் ஒன்றிணைகிறது.
நான்காம் பகுதி லைலா தாரிக் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விளக்கும் நிகழ்வுகள்.
கதையின் மூலம் அந்தக்கால காபூல் நிகழ்வுகளை அருமையாகச் கோவைப் படுத்தியுள்ளார். ரஷீத் மரியம் இடையிலான உரையாடல் ஒன்றில் அவன் லைலாவை மணம் புரியத் தீர்மானித்ததை நியாயப்படுத்தும் பாங்கு பெண்களின் நிலையை எடுத்துரைக்கும் பகுதி. அவளை விட்டு விடுவேன். என்ன ஆகும். குண்டடி பட்டு சாவாள். நான்கு பேர் அவளை சிதைப்பார்கள். மீறி பெஷாவர் போனாலும் பனி மழையில் சாக நேரிடும். இல்லையெனில் அவள் அழகுக்கு நல்ல விலைமகளாகலாம். தேவையா? இவையெல்லாம் அந்த சிறுமிக்கு மரியம் மூலம் தெரிவிக்கப்படுவது. லைலா என்ன செய்தாள் என்பது….
நூலில் காண்க.
பொதுவாக கதை படித்து கண் கலங்கியதில்லை. ஆனால் இதைப் படித்த பின்னர் ஒரு மணிநேரம் எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர்த் துளியுடன் அமர்ந்திருந்தேன். படிக்கும் நெஞ்சங்கள் ஒரு நொடியாவது கலங்காமல் போகாது. இறுதிப் பகுதியில், கதை ஆரம்பத்தில் வந்த ஹெராத்திலேயே – ஒரு poetic justice என்பார்களே அதுபோல, மரியம் வளர்ந்த இடத்திலேயே முடிக்க நினைக்கும் நிகழ்வுகள் .. அதை ஹுசைனி விவரிக்கும் இடம்.. அருமை. இலக்கியத்தின் உச்சம்.
தவற விடாதீர்கள்.
புத்தகப்பெயர் : ஆயிரம் சூரியப் பேரொளி
ஆசிரியர் : காலித் ஹுஸைனி
தமிழில் : ஷஹிதா
வெளியீடு : எதிர் வெளியீடு 
விலை : ரூ.499
Prasancbe Thamirabarani  முகநூலில் இருந்து 

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here