Azhagu Childrens Story By Era. Kalaiyarasi. அழகு குழந்தைகள் கதை - இரா கலையரசி

அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி




கழுத்தை ஆட்டி ஆட்டி “நான் நல்லா ஆடறேனா பா”னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா.

“ம்.ம்.நல்லா இருக்கு”னு சொன்ன அப்பா மயிலை பார்த்து, “அப்பா, நீங்க அழகா இல்ல. அம்மா எவ்வளோ அழகா இருக்காங்க. அம்மா தோகை நீளமா விசிறி போல இருக்கு. எனக்கு வேர்த்தா விசிறி விடுவாங்க. நீங்க நல்லாவே இல்லப்பா.எனக்கு அம்மாவைத்தான் புடிக்கும்” னு சொல்லி ஓடியது குந்த்ரா.

அருகே வேய்ந்திருந்த மின் வேலியை நெருங்க அதில் அழகான கொடி படர்ந்து இருந்தது.

பல வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக் கண்களைக் களவாடியது. குந்த்ரா மெல்ல வேலியை நெருங்கி விட்டது.

“அழகு பூ பாரு அழகு னா யாரு? வந்து என்னைப் பாரு”.

பாடிக்கிட்டே அலகை வேலியிடம் கொண்டு போக, பாய்ந்து வந்தது அப்பா மயில்.

இலேசாக மின்சாரம் அப்பா உடலில் உரசியது”.க்யாவ் ‘என கத்தியவாறு விழுந்தது அப்பா மயில்.

குந்த்ரா பயந்து ஓடி பார்த்தது. காயத்துடன் இருந்த அப்பா அழகாகத் தெரிந்தார்.

அழகு அன்பிலா? தோற்றத்திலா? குட்டீஸ். சொல்லுங்க பார்ப்போம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *