இது
ஓர் அழகான உலகம்!
இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா?
இது
தானாகவே
உருவானதா?
உலகம்
அழகானதே!
அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது?
இது
ஒரு முடிவற்ற கதை!
இப்போது
உலகத்திற்கு வருவோம்;
உலகம்
ஓர் ஒப்பற்ற அழகு!
எந்த ஒரு மனிதனும்
இவ்வுலகத்தை
அழகாக்கியதில்லை;
மாறாக….
அசிங்கப்படுத்தியே
வந்தான், வருகிறான்;
வருவான்?
அந்த
அசிங்கப் படுத்தல்
வேறொன்றும் இல்லை;
சாதி செய்து….
சமயம் செய்து….
சாக்கடையாய் ஓட விட்டதுதான்!
********
… கவிஞர் பாங்கைத் தமிழன்…

