நேற்று நள்ளிரவில்
ஒரு நீலக் கடலில்
நீந்திக் கொண்டிருந்தேன்.
கருப்பு இரவில்
நீலக் கடலில்
ஆழத்தின் அந்தகாரத்தில் அமிழ்ந்துகொண்டிருக்கும் பொழுது
கடலுக்கு மேலிருந்து
அவசர உதவியாய் மின்னிக்கொண்டிருந்தது உன் முகம் மட்டுமே.
நட்சத்திர பின்னணியில்
மேலே தெரியும்
உன் முகத்தை
இந்த கடலின் ஆழத்திலிருந்து பார்க்கிறேன்.
இப்போது
நட்சத்திரங்கள் தெரியவில்லை.
ஆழம் மட்டும் கூடிக் கொண்டே போகிறது.
மேலிருந்து நீ கேட்கும்
“இருக்கிறாயா இருக்கிறாயா”
மட்டும் கிசுகிசுப்பாய் கேட்கிறது.
நீ இன்னும்
எவ்வளவு ஆழம் ?
– பாலா


மன ஆழம் காண
துவங்கிய பொழுதினில்
கடலின் ஆழம் சற்றே
குறைந்தே போனது…
ஆழம் காணத் துடிக்கும்
உங்களின் முயற்சியில்
பாராட்டாய் என்னலை ….
Thank You
மனதின் ஆழம் அறியத்துவங்கும்
உம் முயற்சிக்கு பாராட்டுகள்..
Thank You
சூப்பர்
Thank You