Show 1 Comment

1 Comment

  1. Stalin. V

    புத்தகத்தின் பெயர்: ஊர்வாய்

    ஆசிரியரின் பெயர்: கவிஞர். கூ. பழனியாண்டி

    பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

    பக்கங்கள்‌: 112., விலை: 120

    இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறா? இப்படி அநேகபேர் பேசி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்னமோ உண்மைதான் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிற
    “தீண்டாமை ஒரு பாவம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம்” என்கிற இந்த மூன்று வாக்கியங்களையும் நாம் அவ்வளவாக பார்க்காமல் தான் கடக்கிறோம்.

    கவிஞர் கூ.பழனியாண்டி அவர்களின் ஊர்வாய் இக்காலகட்டத்திற்கும் தேவைப்படவே செய்கிறது. அதன் வழியே நவீனத் தீண்டாமையை நாம் விரட்டியடிக்க அது உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

    ஒரு எழுத்தாளன் ஒரு பிரச்சனையையும் அந்த பிரச்சனைக்கான காரணத்தையும் நேரடியாக சொல்லிவிட்டான் என்றால் அந்த எழுத்தில் எந்த விதமான சுவாரசியமும் இருந்து விடப் போவதில்லை. அந்த வகையில் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்ற அற்புதமான இடம் ஒன்று உண்டு, அது தாய்க்கும் மகளுக்குமான உரையாடலாக இருக்கும். அந்த உரையாடலில் பேசுபொருளே மகளின் காதல் குறித்ததுதான். மகள் தன் காதலைப் பற்றி அம்மாவிடம் நேரடியாகச் சொல்லாமல் தன்னை ஒரு இறைதேடும் பறவையாக உருமாற்றி, குடும்ப சூழலுக்காக இறைதேட அனுமதித்த அம்மாவிடம், தான் இறைதேடிய இடத்தில் மற்றொரு உயிரும் தன் பசி போக்க இறை தேடி வந்தது என்றும், அப்போது அந்த இரு உயிர்களும் இறையோடு சேர்த்து தங்களின் உயிர் இறையான காதலையும் தேடிக் கொண்டது என்பதையும் எழுத்தாளர் அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார். அதுவே இப்புத்தகத்தின் தனி சிறப்பு.

    “நாம் பேசுகின்ற வார்த்தைகள் வெறுமனே நம்மோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அது மற்றவர்களின் வாழ்வியலிலும் ஏதோ ஒரு விதமான தாக்கத்தையும், விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது” என்பதே இப்புத்தகத்தின் அடி நாதம். தனிமனித பேச்சே ஒருவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனில், ஒரு ஊரே கூடி ஒரு ஆணையும் பெண்ணையும் பற்றி பேசுமேயானால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ணிப் பாருங்கள் என்று ஆசிரியர் நம்மிடம் கூறுகிறார்.

    அட்டை படத்தில் பெண்கள் மட்டும் உட்கார்ந்திருப்பது போல போட்டிருப்பது எனக்கு என்னவோ சிறிய ஒரு கவலையைத் தான் கொடுக்கிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பெண்களை விட ஆண்கள் மிகவும் திறமையான புரம் பேசக்கூடியவர்கள். மறுபதிப்பு செய்யும் பொழுது அந்த அட்டை படத்தில் ஆண்மக்களின் படமும் இடம்பெறுமாறு எழுத்தாளர் மாற்றுவார் என நம்புகிறேன்.

    எந்த ஒரு நிகழ்வுகளிலும் பழியையும் பாவத்தையும் சுமப்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். இந்தக் கதையில் வரும் நாயகியே அவர்கள் கொண்ட காதலின் அடியைச் சுமந்து தன் குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள்…

    நன்றி,

    அன்புடன்: வா. ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *