பறந்து வந்து
மரத்தின் கீழ் கிளையில்
அமர்ந்த அந்த பறவையிடம்
உன்னை ஏன் எல்லோரும்
பறவையென
அழைக்கிறார்கள் யென்றேன்
அக்கிளையிலிருந்து
பறந்து வேறு
ஒரு மேல் கிளையில்
அமர பறந்து போனது
அந்த பறவை
நானும் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்
நீ பறப்பதனால் தான் உன்னை எல்லோரும் பறவையென்கிறார்களென்று,
கவிஞர் ச.சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.