பாஜகவின் என்கவுண்டர் இந்தியா – அ.பாக்கியம்

பாஜகவின் என்கவுண்டர் இந்தியா – அ.பாக்கியம்



இந்தியாவில் பாஜகக்கு வந்தவுடன் என்கவுண்டர் கொலைகளும், வழக்குகளும் 6 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்துள்ளது.

2016-17 மற்றும் 2021-22 -ம் ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவில் 813 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளன.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 69.5 சதவிகிதம் என்கவுண்டர் கொலைகள் உயர்ந்துள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டில் 25 என்கவுண்டர் வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2021-22- ம் ஆண்டில் 124 வழக்குகள் நிலுவையில் உள்ளனர்.

கோவிட் 19 காலத்தில் தொற்றுநோய் உச்சக் கூட்டத்தில் இருந்த போது என்கவுண்டர் வீழ்ச்சி ஏற்பட்டு இருந்தது. தற்போது 69.5% அதிகரிக்கிறது.

BJP's Encounter India - A. Bhakyam பாஜகவின் என்கவுண்டர் இந்தியா - அ.பாக்கியம்

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தவுடன் உத்தரபிரதேச காவல்துறை “ஆபரேஷன் லாங்டா” என்ற பெயரில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 8472 என்கவுண்டர்களை நடத்தியது. இதில் 3300 க்கும் மேற்பட்டவர்களை சுட்டு காயப்படுத்தியது. இவையெல்லாம் இந்த கணக்கில் அடங்காதவை.

பாஜக ஆட்சியில் சட்டபூர்வ என்கவுண்டர்களை கடந்து சட்டபூர்வமற்ற என்கவுண்டர்கள் எண்ணிலடங்காமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

துப்பாக்கி முனையிலும்,வெறுப்பு அரசியலிலும், பொய் மூட்டைகளிலும் பொதுமக்களை கொன்று குவித்துக் கொண்டிருப்பது தான் பாஜக ஆட்சியில் புதிய இந்தியாவாக இருக்கிறது.

– அ.பாக்கியம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *