ஓசூரில் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு : மொத்த விற்பனை எவ்வளவு தெரியுமா !!

ஓசூரில் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு : மொத்த விற்பனை எவ்வளவு தெரியுமா !!




ஓசூரில், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 11வது புத்தக திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த புத்தக திருவிழா ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 110 அரங்குகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

மொத்த விற்பனை.
புத்தக திருவிழாவில் 25 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 10 ஆயிரம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து 12 நாட்கள் நடந்த இந்த புத்தகத்தில் திருவிழாவில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி: மாலை முரசு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *