நூல் அறிமுகம்: தேவனூர மகாதேவாவின் ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும் தமிழில் : கனகராஜ் பாலசுப்பிரமணியம் – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: தேவனூர மகாதேவாவின் ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும் தமிழில் : கனகராஜ் பாலசுப்பிரமணியம் – இரா.சண்முகசாமி




நூல் : ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும்
ஆசிரியர் : தேவனூர மகாதேவா
தமிழில் : கனகராஜ் பாலசுப்பிரமணியம்
விலை : ரூ.25
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : செப்டம்பர்-2022
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

நாற்பது பக்கம் கொண்ட சிறிய நூல். கன்னடத்தில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான நூல்.

1.ஆர் எஸ் எஸ் ஸின் உயிர் எங்குள்ளது?
2.இவ்வாறெல்லாம் ஏடுகள் பேசுகின்றன!
3.இன்று நிகழ்காலத்தில்
4.இந்தப் பின்னணியில் மதமாற்றத் தடை சட்டத்தின் மர்மம்
5.தற்போது…
என ஐந்து கட்டுரைகளும் ஆர் எஸ் எஸ் ஸின் உண்மையான தோற்றத்தையும் அதன் இலக்கையும் மிக நுட்பமாக கவனித்து அவற்றை மக்களிடையே அம்பலப்படுத்தும் முயற்சி தான் இந்நூல்.

ஹெட்கேவர், கோல்வால்கர், சாவர்க்கர் இவர்களின் நயவஞ்சக காட்சிகள் பதியப்பட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ் ஸின் நோக்கம் ஆன்மீகம் அல்ல பொய்யே அவர்களின் மூலதனம். அந்தப் பொய்யை எப்படியெல்லாம் சமூகத்தில் திட்டமிட்டு பரப்பி, இஸ்லாமியர்கள் போன்று வேடமிட்டு வன்முறையைத் தூண்டி தங்களுக்கான அறுவடையை செய்துகொள்கிறார்கள் என்றும், அதற்காக சமூகத்தில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வேலைவாய்ப்பு எதுவும் வழங்கப்படாத மக்களைக் கவர்ந்து அவர்கள் மூலம் கலவரத்தைத் தூண்டி தனக்கான தேவைகளை பூர்த்திசெய்து கொள்கிறார்கள். அதற்காக அவர்களை எப்போதும் எதிர்த்து கேள்வி கேட்காத ஆர் எஸ் எஸ் பயிற்சி கொடுத்து அடிமையாகவே வைத்து இந்தப் பிற்போக்கை செய்து வயிறு வளர்க்கின்றனர். மேலும் சமஸ்கிருதமே அவர்களுக்கு முக்கியமான மொழியாகவும், அது மேலேறி வரும்வரை உப்புக்கு சப்பானியாக அவர்கள் ஹிந்தியை தூக்கிப்பிடிக்கிறார்கள் என்றும் மிகவும் தெளிவான பதிவினை வழங்கியுள்ளார்கள்.

இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரும் இங்கிருந்த இந்து மதத்தின் கோரவடிவம் தாங்காமல் மதம் மாறியவர்களே. ஆனால் அவர்களை வெளியே போ என்று சொல்லும் ஆர் எஸ் எஸ் ஆட்கள், ‘முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கிலிருந்து வந்து அதிகாரத்தின், ராணுவத்தில் கிடைக்கும் பொறுப்புகளின் ஆசை காட்டுதலுக்கு உள்ளாகி முதலில் மதம் மாறியவர்களில் பெரும்பாலானோர் வடக்கின் ஆரிய பிராமணர்கள் தானே?’ என்று நீதியரசர் எச்.என்.மோகனதாஸ் அவருடைய புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி நிறைய ஆர்எஸ்எஸ் குறித்த செய்திகள் நூலில் உள்ளன. மொழிப்பெயர்ப்பு மிகவும் சிறப்பு. ஆசிரியருக்கும், மொழிப்பெயர்ப்பாளருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *