Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: லட்சுமி பாலகிருஷ்ணனின் ’எழுத்துப் பிழை’ – MJ பிரபாகர்




கற்றல் குறைபாடு
( Learning Disability ) உள்ள குழந்தைகளுக்கான கதை அம்சம் உள்ள அருமையான நூலைப் படைத்துள்ளார் எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன்.

பள்ளியில் பயிலும் மாணவர் மதிப்பெண் குறைவாக பெறுவதும் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையும் உள்ளது.

குறிப்பாக எழுத்து பிழையின்றி அம் மாணவரால் எழுத முடியாத சூழல்.

மாணவரின் தந்தை கடுமையாக தனது மகனை திட்டுகிறார்.

மாணவரின் நிலையை அறிந்து தாய் பள்ளிக்குச் சென்று தனது மகன் குறித்து வகுப்பு ஆசிரியர்களும் விசாரிக்கிறார்.

தனது மகன் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுப்பதும் எதைப் பற்றியும் கவலை இல்லாது ஆடி, பாடி சுற்றித் திரிகிறான் என தெரிவிக்கிறார்.

குழந்தைகள் மனதில் எப்போதும் நிறைய மதிப்பெண்கள் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்காதீர்கள் என்று தாயை கண்டிக்கிறார் வகுப்பு ஆசிரியர்.

அத்தோடு எழுத்துப் பிள்ளைகள் நிறைய உள்ளது என்பதோடு கற்றல் குறைபாடு உங்கள் மகனிடம் தெரிகிறது என விளக்குகிறார்.

உங்கள் குழந்தைக்கு தான் இப்படி வந்து விட்டது என கருதாதீர்கள்.

உலகில் மிகப்பெரிய அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் கூட இது மாதிரி கற்றல் குறைபாடு உள்ளவர்கள் தான்.

கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு அறிவில் எந்த குறைபாடும் இருக்காது. கற்றுத்தரும் முறையில் தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மாணவரின் தாயை புரிய வைக்கிறார்.

மாணவரை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கற்றல் குறைபாடு தான் என்ற காரணத்தை கண்டறிகிறார்கள்.

அதன் பின் மாணவர் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பு ஆசிரியர் பாடம் கற்பித்ததன் விளைவாக மாணவர் நல்ல மதிப்பெண் எடுப்பதோடு பல திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார் என்பதை விவரிக்கும் நூல்தான் இது.

பொதுவாக மூன்று விதமான கற்றல் குறைபாடு உள்ளது.

அதற்கான தீர்வு மற்றும் சிகிச்சை முறைகள் சென்னையில் உள்ள NIEPMD – National Institute of Empowerment with Multiple Disabilities மத்திய அரசு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது.

தொடர்புக்கு :

மின்னஞ்சல் [email protected]

இணையதளம்:

www.niepmd.tn.nic.in

இதுபோன்ற நூல்களை சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு மிக்க நன்றிகள்.

இந்நூலை மிகவும் அழகாக வடிவமைத்த ஓவியர் சூர்யா ராஜ் மற்றும் மாணவர்களுக்கான எளிய கதையாக படைத்த எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

MJ. பிரபாகர்

நூல் : எழுத்துப் பிழை
ஆசிரியர் : லட்சுமி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹40/-
பக்கம் : 16
வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here