கற்றல் குறைபாடு
( Learning Disability ) உள்ள குழந்தைகளுக்கான கதை அம்சம் உள்ள அருமையான நூலைப் படைத்துள்ளார் எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன்.
பள்ளியில் பயிலும் மாணவர் மதிப்பெண் குறைவாக பெறுவதும் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையும் உள்ளது.
குறிப்பாக எழுத்து பிழையின்றி அம் மாணவரால் எழுத முடியாத சூழல்.
மாணவரின் தந்தை கடுமையாக தனது மகனை திட்டுகிறார்.
மாணவரின் நிலையை அறிந்து தாய் பள்ளிக்குச் சென்று தனது மகன் குறித்து வகுப்பு ஆசிரியர்களும் விசாரிக்கிறார்.
தனது மகன் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுப்பதும் எதைப் பற்றியும் கவலை இல்லாது ஆடி, பாடி சுற்றித் திரிகிறான் என தெரிவிக்கிறார்.
குழந்தைகள் மனதில் எப்போதும் நிறைய மதிப்பெண்கள் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்காதீர்கள் என்று தாயை கண்டிக்கிறார் வகுப்பு ஆசிரியர்.
அத்தோடு எழுத்துப் பிள்ளைகள் நிறைய உள்ளது என்பதோடு கற்றல் குறைபாடு உங்கள் மகனிடம் தெரிகிறது என விளக்குகிறார்.
உங்கள் குழந்தைக்கு தான் இப்படி வந்து விட்டது என கருதாதீர்கள்.
உலகில் மிகப்பெரிய அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் கூட இது மாதிரி கற்றல் குறைபாடு உள்ளவர்கள் தான்.
கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு அறிவில் எந்த குறைபாடும் இருக்காது. கற்றுத்தரும் முறையில் தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மாணவரின் தாயை புரிய வைக்கிறார்.
மாணவரை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கற்றல் குறைபாடு தான் என்ற காரணத்தை கண்டறிகிறார்கள்.
அதன் பின் மாணவர் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பு ஆசிரியர் பாடம் கற்பித்ததன் விளைவாக மாணவர் நல்ல மதிப்பெண் எடுப்பதோடு பல திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார் என்பதை விவரிக்கும் நூல்தான் இது.
பொதுவாக மூன்று விதமான கற்றல் குறைபாடு உள்ளது.
அதற்கான தீர்வு மற்றும் சிகிச்சை முறைகள் சென்னையில் உள்ள NIEPMD – National Institute of Empowerment with Multiple Disabilities மத்திய அரசு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது.
தொடர்புக்கு :
மின்னஞ்சல் niepmd@gmail.com
இணையதளம்:
www.niepmd.tn.nic.in
இதுபோன்ற நூல்களை சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு மிக்க நன்றிகள்.
இந்நூலை மிகவும் அழகாக வடிவமைத்த ஓவியர் சூர்யா ராஜ் மற்றும் மாணவர்களுக்கான எளிய கதையாக படைத்த எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
MJ. பிரபாகர்
நூல் : எழுத்துப் பிழை
ஆசிரியர் : லட்சுமி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹40/-
பக்கம் : 16
வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

