நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: விஜிலா தேரிராஜனின் ’இறுதிச் சொட்டு ’ – து.பா.பரமேஸ்வரி




நூல் : இறுதிச் சொட்டு
ஆசிரியர் : விஜிலா தேரிராஜன்
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

கதைகள் எப்போது தோன்றியது என்று ஆராய்ந்தோமேயானால் கற்கால மனிதன் தான் கண்டுக் களித்த தன்னை பெரிதும் பாதித்த தான் கடந்துச்சென்ற அனைத்தையும் குகைப்பாறைகளில் ஓவியங்களாகச் சித்தரித்து வைத்தான். கதைகளின் தோற்றம் என்பது மனிதகுலம் இந்த பேரண்டத்தில் ஜனனம் எடுத்துக் கொஞ்சமுமாகத் தமது சிந்தனைச் செறிவையும் அறிவாற்றலையும் பெருக்கத் துவங்கிய கணம் முதல் பிறந்தது என்பதே உண்மை.மெல்ல பரிணமித்த இலக்கிய கலாச்சாரம் மனித அறிவைப் பெருக்கிக் கூடுதலாக தமது எண்ணச் செரிவுகளை மனதின் தூண்டலில் தோன்றிய அனைத்தையும் முன்பை விட மேம்பட்ட வகைமையில் உருவங்களாக, கல்வெட்டுகளாக, ஓவியங்களாக, சிற்பங்களாக, வரி கோடுகளாகத் தமது உணர்வுகளை, வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களை படிமங்களாக வடித்து வைத்தான். அப்படியான கல்வெட்டுக் கதம்பங்களே பிற்காலத்தில் கற்கால மனித குலத்தின் வரலாற்றை ஆய்வு செய்ய பேருதவியாக இருந்தது.

தொடர்ந்த காலங்கள் மொழிகளின் தோற்றம் நமது மூதாதையர் பேச்சு மொழி வழக்கில் ஆகச்சிறந்த கதைச் சொல்லிகளாக அறிவு ஜீவிகளாகச் சொல்லாடல்களின் வழியாக பாடல்கள் மூலம் என மக்கள் மொழியாக மண்ணின் களஞ்சியமாகக் கதைகள் உருப்பெற்றன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டன. போக, சங்க கால இலக்கியங்கள் மனிதர்தம் வாழ்க்கையை உள்வாங்கிப் படைக்கப்பட்ட கதைகளைக் களங்களாகச் சுமந்து நின்றது. இலக்கியம் என்பதே மனிதவாழ்க்கையை உள்ளடக்கிய எழுத்துக்களின் சாரம் தானே.. பரிணாமங்களின் வளர்ச்சியும் கூட…இப்படியான பரிணாமங்களைப் பரிமாணங்களாகக் கடத்திய நமது மூதாதையர் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு வாய்வழிக் கதைகளாக்கி ஆவணப்படுத்தினர். ஆகச்சிறந்த புலவர் பெருமக்களின் செய்யுட்பாடல்கள், இலக்கியப்புனைவுகள், இதிகாசங்கள், நெடும் கதைகள், வரலாறுகள், சரித்திர சம்பவங்கள் என இன்றும் சங்க கால இலக்கியம் வாகை சூடு நிற்கிறது.

தொடர்ந்த எழுத்து யுகங்கள் புனைவிலக்கியம் அபுனைவிலக்கியம் என இருவகைகளைத் தமக்குள் கொண்டுச் சமகால யதார்த்த நிகழ்வுகளின் பயணங்களின் பிரதிகளாகப் படிமங்களாகச் சாதாரண மக்கள் பேசும் மொழிகளின் புழக்கத்தில் இலக்கியத்தில் நவீனத்துவம் கலந்துப் படைப்புலகில் இன்றுவரை நூற்றாண்டுகளைக் கடந்து பல்வேறு படைப்புகளின் முகங்களை தமக்குள் ஏந்தி நிற்கிறது.

இப்படியான படைப்பூக்கங்கள் கதையுலகில் தான் எத்தனை… நூறைத் தொட்ட கதைச்சொல்லிகள் எழுத்து வழக்கிலும் மொழிப் புலனிலும் வட்டார நில மாந்தர்களின் உடன்குடி நாவிலும் பூத்த வண்ணம் உள்ளனர். படைப்புகளின் ஆகச்சிறந்தத் தோன்றலான மனிதன் மட்டுமே இப்படியான கதைச் சொல்லியாக உயர்ந்து நிற்கிறான் மொழிவளமையின் சிறப்பில்.

உயிர்ப்பது, உறவு கொள்வது, வாழ்ந்துக் களிப்பது, உறவாடி ஓய்வது, இடம் பெயர்வது என்ற பிற உயிர்களிடத்திலிருந்துத் தனித்துப் பயணித்த மனிதன் மட்டுமே தன்னை அசைத்த இசைய வைத்த ஒவ்வொன்றையும் இலக்கியத்துடன் இணைத்துப் பார்த்தான். தன்முன் எதிர் நீளும் பாதைகளைக் கருவாக வடிவமைத்து அதைச் செப்பபனிட்டுப் பல கோணங்களில் படைப்புலகிற்கு வழங்கிப் பெருமைப் சேர்த்தான்.

இந்த உலகம் தான் எத்தனை எத்தனை மனித மாயங்களை தனக்குள் உள்ளொடுக்கியுள்ளது. எத்தனை வாழ்க்கைப்பாடுகளை விழுங்கி நிற்கிறது. எத்தனை மனிதர்களின் நிறங்களை அறியும் சாட்சிகளாகத் தோன்றி நிற்கிறது. சங்க கால இலக்கியத்தின் பெருவாரி புலவர்களும் மேதாவிகளும் கதாசிரியர்களாக ஏடுகளில் களைக்கட்டுகின்றனர்.

பிற்காலத் தமிழிலக்கியச் சிறுகதைகளில் நவீனத்துவம் நிரம்பிய கதைதாரிகள் அநேகர். வா.வே.சு ஐயா, கீ.ரா, கோணங்கி, தமிழ்ச்செல்வன், சூடாமணி என நீளும் வரிசைகள் தமது சிவந்தக் கரங்களைத் தமிழ் மண்ணில் ஆழ விதைத்து வளமாக்கிய கொடிகள் தான் தாராளம். அவற்றிலிருந்து முளைத்த செடிகளாகவும், விருட்சங்களாகவும் பூத்துக் குலுங்கிய கதைப்பூக்கள் தான் ஆயிரமாயிரம்.

சமபாலின எழுத்தாளுமைகளைக் கொண்ட இலக்கியவுலகமாகத் தமிழிலக்கியம் உச்சம் தொட்டுள்ளது. இவர்களின் மற்றுமொரு வெளிச்சமாகப் பெண் எழுத்தாளர்களில் போற்றலுக்குரிய ஆசிரியராக விஜிலா தேரிராஜன் அவர்கள் தமது விரிந்தச்சிறகைக் கதையுலகில் பறக்கச் சிறக்கச் செய்துள்ளார். சமகாலப் பாதிப்புகளையும் புரட்டிப்போட்ட சமூகப் பிளவுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக அவலங்களையும், அசைத்து மட்டும் விடாமல் ஆட்டி வைத்தத் தருணங்களையும், வாழ்க்கை என்பது வெறும் கடத்தலல்ல அன்றாட வாழ்வின் சாதாரணம், தேடி எடுக்கப்பட்ட கருக்களின் மனிதாபிமானங்களில் விதைகள், மையக்கருத்துக்களின் உருவங்கள் என்பதை விஜிலா அவர்கள் தமதிந்த “இறுதிச்சொட்டு” என்கிற சிறுகதைத் தொகுப்பின் வழியே துலங்கி நிற்கின்றார்..

கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பாத தூரம் கடந்தவை. கதைக்காரன் ஒரு சுமைத்தாங்கியாக, முடிவுற்ற அழிந்துப் போன மண்ணை விட்டு மறைந்து மருவிய சம்பவங்களை வரலாறுகளை புனைவாகக் கற்பனைகளின் அதீதத்தில் பாத்திரங்கள் ஊடாக வழங்கி நிற்பதவன் மட்டுமன்று . கதைக்களங்களைச் சமகால அன்றாடங்களைக் கடந்து போகும் யதார்த்த நிகழ்வுகளைக் கொண்டு எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ ஒரு வீதியில் எப்போதோ ஒரு பாதையில் பாதிப்பை ஏற்படுத்திய மாற்றத்தைக்குட்பட்ட கருச்சுளைகளை உதிரி பாகங்களாகக் கொட்டி கிடந்தவற்றைச் சீரமைத்து அதிலிருந்து தேவையின் பொருட்டு வடிகட்டி அவற்றில் வடிவியலைக் கோர்த்துப் புனைவுக் கூட்டி மொழிப் புலமைச் ஏற்றி கொஞ்சமுமாக துள்ளல் சேர்த்து எள்ளல் சற்றே தூக்கலாகத் தூவி நடையில் மெல்லிய நளினத்தை மெருகேற்றி, கதைகளத்திற்கேற்ப உடன்குடி வட்டார வாசனையோடு பேச்சு வழக்கிலும் உறவு முறையிலும் வாயார விளித்தலிலும் நிலத்தின் அடையாளங்களிலும் ஓங்கிப் பிடித்து உருவான கதைத் துகள்களாகத் தோழர் விஜிலா அவர்களின் இறுதிச்சொட்டு நம்மை சொட்டு சொட்டாக நனைய வைத்து குளிருட்டுகிறது.

21 வாழ்க்கை நிறங்களைப் பரிணத்து நிற்கும் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் மாறுபட்ட வர்ணங்களின் ஓவியங்கள்..
அட . ஆமா..
இது பற்றி யாரும் பேசவே இல்லையே..
இது இதேதான்..
நேற்று கூட நான் இதைப்பற்றி நினைத்தேன்..
இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. ஆனால் இன்றோ வேறு மாதிரி..
சமூகம் எப்போது திருந்துமோ… போன்ற பாமர சமூகத்தினரின் நாளொன்றின் ஆதங்க மொழிகளை ஒலித்துப் பேசுகிறது கதை ஒன்றும்.
தொகுப்பில் அனைத்து சமூகம் சார்ந்த தரப்புகள் ஊடாடிக் கிடக்க என்னை வெகுவாக சில கதைகள் வியக்க வைத்தன. அதில் இறுதிச் சொட்டு, மண்குதிரை,பட்டுமனம்,
ரௌத்திரம் பழகு,வன்மம் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

பிள்ளைகளின் வலிகளை அவருக்கே உரித்தான பிரத்யேகப் பிராயத் திமிர்களைச் சுட்டித்தனங்களை நையாண்டிகளைக் காண்பிக்கும் விதமாக, புறத்தில் மழலையின் நெருடலில் தமது மகிழ்வைக் கொண்டாடினாலும் ஒவ்வொரு பிள்ளையின் திரைக்குப் பின்னால் என்பது ஒரு மறைக்கப்பட்ட வதை நிறைந்த இருட்டறை,இருண்ட முகங்கள் என்பதையும் உணர்த்திக் செல்கிறது நூல். அவற்றையெல்லாம் மறைக்கவே பள்ளியில் இயல்பாகத் தம்மை வெளிப்படுத்தும் அத்தனை பிரயத்தனங்களையும் தேடி நிற்கின்றனர் பிள்ளைகள். அப்படியான பிள்ளைகளின் துயர் நிறைந்த மற்றொரு முகங்களைக் கண்டறிந்து ஒரு ஆசிரியராகப் மாணாக்கர்களின் உளவியல் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தப் படைப்புகளாகச் சிலகதைகள் திகழ்ந்தது சிறப்பு.

சமுதாயத்தை வெகுவாக உலுக்கி வரும் சமகால வக்கிரமான பாலர் வன்புணர்வுக் கொடுமையை எதிர்க்கிறது ‘மருளாடி’ சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த கதையான “மண்குதிரை” சிறுகதை. வளரிளம் மொட்டுக்களின் மீதான வன்புணர்வு ஏற்கவே முடியாத குரூரம். பிள்ளைகளின் மனதில் ஆழப்புதைந்துக் கிடக்கும் இரணம். அந்த வலியைத் தாயாக ஆசிரியராக உணர்ந்துக் கதைத்துள்ளார் விஜிலா அவர்கள். சற்றே சிந்தித்தோமேயானால் நம் சமூகம் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் முன் வளாகக் கட்டமைப்பு, ஒழுங்குமுறை, கற்பிக்கும் திறன், தேர்ந்த ஆசிரியர் கொண்ட நிர்வாகம் போன்றவற்றின் அடிப்படையில் பெற்றோர்களின் கல்விசார் தேடுதல் அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய சமூக சூழல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறியுள்ளது. பல நூற்றாண்டு முந்தைய குருகுல காலத்தில் கல்வித் தரம் உயர்ந்து நின்றது. தற்போது அச்சுறுத்தி வரும் பிள்ளைகள் சார்ந்த வன்முறைகள் ஆசிரியர் என்ற புனிதத்தை, கற்பித்தல் என்கிற மாண்பை இழந்து நிற்பதுமே பெற்றோர் பள்ளிக் கல்வியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கேற்றார்ப் போல சங்கரன் சார் போன்ற வக்ரபுத்தி ஆண் ஆசிரியர்கள் பிள்ளைகளின் மீது நிகழ்த்தும் பாலியல் வக்கிரம் சுதா போன்ற நல்லாசிரியர் மேலிடத்தில் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் பள்ளியின் நற்பெயர் தொடர்ந்திருக்க, பெண் பிள்ளைகளின் உடல் சார்ந்த அலட்சியப் போக்கு பாலியல் ரீதியான அவர்களின் இப்படியான துன்பங்களை அசட்டை செய்து வருவதைச் சுட்டிக் காட்டி வன்மையாகக் கண்டிக்கிறது கதை. பாலர் வன்புணர்வுக் குரூரங்கள் அநேக எழுத்தாளுமைகள் தமது படைப்புகள் வழியே சாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்த போதிலும் ஒரு பெண் ஆசிரியராக விஜிலா அவர்கள் இப்பிரச்சனையை சமூகத்தில் கொண்டுச் சேர்க்கக் கதையாக்கியுள்ளது சிறப்பு..

பள்ளிஆசிரியர் என்பவர் எப்போதும் கடுமையாகவும் பிள்ளைகளை அடிமைப்படுத்தும் மனப்பான்மைக் கொண்டவராக இருக்க வேண்டி பெரும் மெனக்கிடுவர். இப்படியான ஆசிரியர்களின் முன் அனுமானமான சுய கணிப்புகளை மூடநம்பிக்கைகளைத் தீவிரமாகப் பேசுகிறது “தீதும் நன்றும்” கதை. உடற்பயிற்சி ஆசிரியர் என்பவர் கூடுதலாகவே உடல் மொழியிலும் மொழிக் கண்டிப்பிலும் விறைப்பாய் இருப்பர் என்பது பொத்தாம் பொசிலித்தனமான சமூகப் பார்வை. ஒருவித மேம்போக்கு மனோபாவத்தை ஆசிரியர் மத்தியில் இவ்வாறாக நிறுவியுள்ளது. ஆசிரியர்கள் எப்போதும் கண்டிப்பாகவே இருக்க வேண்டும் என்கிற காலம் தொட்டுப் புரையோடிக் கிடக்கும் ஆசிரியர் மாணாக்கர் வெறுப்புறவை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது கதை. ஆசிரியர்களின் இப்படியான சுயமதிப்பீடு, மாணவர்களைக் கைக்குள் அடக்கிக் கட்டிப் போட வேண்டும், தமக்குக்கீழ் அடங்கியே இருக்க வேண்டும், மீறிய மாணவனை ஒழுக்கம் தவறியவனாக சித்தரித்து ஒருவித வெறுப்புணர்வைப் பிற ஆசிரியர்கள் மத்தியில் உண்டுப் பண்ணுவது, அவனுக்குள் ஒரு காழ்புணர்ச்சியை ஏற்படுத்தி பிற மாணவர் மத்தியில் அவமானப்படுத்தும் ஒரு சில ஆசிரியர்களின் போக்கைப் சமூகவெளியில் விரியப்படுத்துகிறார் விஜிலா அவர்கள். எப்போதும் மாணாக்கர் தவறானவரும் அல்லர் அதேபோல் மாணாக்கர் மீதான ஆசிரியர்களின் சுய கணிப்புகளும் எப்போதுமே சரியாகவே இருந்து விடுவதுமில்லை என்பதற்கு உடற்பயிற்சி ஆசிரியர் கண்ணனுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் பாஸ்கரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரின் மெல்லிய அதிர்வைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது கதை.

பிள்ளைகளின் கனவுகள் என்பவை நினைவுகளின் நனவுகள். பிள்ளைமையின் குதூகலத்தோடுப் பேசுகிறது “வண்ணக்கனவு” சிறுகதை.

ஆம்…. பெரியவர்களுக்கே குறிக்கோள் இலட்சியமெல்லாம். பிள்ளைகளைப் பொருத்தவரை அவர்களுக்கான நிகழ்கால இனிமைத் ததும்பும் வண்ணக் கனவுகளே மகிழ்கூட்டும் கொண்டாட்டங்களே எதிர்கால இலக்கு. நிறைவேறுவதும் கடந்துப் போவதும் அவரவர் இயல்பு வாழ்க்கையின் கணக்கு. அதையும் தாண்டி சின்னத்துரை போன்றச் சுட்டித் தனமான சாதாரண மனநிலைக் கொண்ட பிள்ளைகள் பெரும்பாலும் எதையும் வேடிக்கையோடும் கேளிக்கையோடுமே அனைத்தையும் அணுகுவர். வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் கொஞ்சும் மாண்புடையவர்.எதையும் எளிதில் மறந்துவிடும் மறைத்துவிடும் இயல்பைக் கொண்ட தூய மனம் பிள்ளை மனம் என்பதையே ஆசிரியராக மழலைகளின் அனுபவங்களை வண்ணமயமான நிறம் கூட்டிக் கதை முழுதும் சின்னத்துரை வழியாக திரைக்காணல்களின் ஒவ்வோரு துணுக்குகளையும் திரைப்பாடல்களையும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு ஒலிக்கச் செய்துக் காட்சிப்படுத்தியுள்ளது ஆசிரியரின் திரைப்பட ஆர்வத்தையும் பிள்ளைகளுடனான வகுப்பறை அனுபவத்தையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது.

அடுத்ததாக தாய்மைத் ததும்பும் ஒரு ஆசிரியரின் பிற உயிர்களிடத்தில் ஏற்படும் மானசீக அன்பைக் வெளிகாட்டும் படைப்பொன்றை உள்ளொடுக்கியுள்ளது தொகுப்பு. தாய்மை என்பது பெண்மைக்கு மட்டுமே உரித்தான தனித்த குணம். உலகின் அனைத்து ஜீவராசிகள் மீதும் ஏற்படும் என்பதற்கு “பட்டுமனம்” நாயகி கோமதி எடுத்துக்காட்டு. குருவிகள் அடுக்களையில் கட்டிய கூட்டிலிருந்து அவற்றின் எச்சம் பட்டு அடுக்களை மேடை நிதம் கறைப்பட, பள்ளி விடுப்பில் தமது பிள்ளையைப் பார்க்கத் தாய்வீடுச் செல்லும் கோமதி, தமது இல்லாமையின் போது குருவிகள் அடுக்களை வாராதிருக்க வென்டிலேட்டர் வழியே அட்டை வைத்து அடைக்கிறாள். ஊருக்குப் போக பேருந்து நிலையம் காத்திருக்கும் அவள் ஆவென்று குருவிக்குஞ்சு போல் தம் பிள்ளை வாயைத் திறந்து உணவு கேட்கும் நினைவு வரவே குருவிகள் அடுக்களைக்குள் நுழைந்து தமது குஞ்சுகளுக்கு உணவளிக்க முடியாதவாறு அடைத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வு உறுத்த வீடு நோக்கிப் பயணப்படுத்தியது கோமதியின் தாய்மை. தாய்மனம் பட்டு மனம் என்பதை உணர்த்தியே தாய்மையின் தாகத்தில் மனதை வருடி செல்கிறது கல்கி இதழில் வெளி வந்த இந்தக்கதை. இன்றைய நவீன உபகரணங்களால் மருத்துவ சமூகம் ஏற்படுத்தும் மனரீதியான அழுத்தத்தை உளைச்சலை பயத்தை உளவியல் ரீதியாக படும் அவஸ்தையை “மாதவம்” கதை எடுத்தியம்புகிறது. சாதாரண தொந்தரவுக்காக மருத்துவமனைச் சென்று அல்லப்பட்டு அவஸ்வதைப்பட்டு உறக்கமின்றி குடும்பத்தின் நிம்மதியைப் பறிகொடுத்து என‌ எத்தனை பாடுகள், இறுதியாக ஒன்றுமே இல்லை என்கிற மருத்துவரின் ஒற்றை வார்த்தை மொழிய மனம் நிம்மதி பாராட்ட அமைதி கொண்டு வெளியேறுகிறாள் மருத்துவமனை விடுத்து தேவிகா . அசலில் மருத்துவமனை சென்று ஒன்றுமற்று ஒன்றுமேயில்லை என்று திரும்பி வருவதென்பது ஒரு மகா தவம் தான் இன்றைய மனித சமூகத்திற்கு.அதிலும் பெண்களின் நிலை அதோகதி. கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்றே சாதாரண தொந்தரவுகளைக் கூட நோய்மையின் நோயாக மாற்றிவிடும் ஆங்கில மருத்துவத்தின் வண்டவாளத்தைத் தண்டவாளமாக்குகிறது கதை.

அரசாங்க மின்துறை அலுவலகத்தில் நிகழ்ந்து வரும் கீழ்த்தட்டு மக்களுக்கெதிரான கையூட்டை வெளிப்படுத்துகிறது அடுத்தக் கதை. விவசாயக் குடிகளை நஷ்டப்படுத்தும் கிராம மின்துறை வாரியத்தின் பாரபட்ச நடவடிக்கைகளை அதிகாரதுஷ் பிரயோகத்தை எடுத்துக்காட்டும் கதை சற்றும் வெட்கமேயின்றி மேல்தட்டு மக்களின் கைக்கூலிகளாகும் இப்படியான அரசு ஊழியர்களைச் சமூகவெளிக்குத் தர தரவென இழுத்து வந்து நிற்கச் செய்கிறது “இலவசம்” கதை.ஏழை குடிகளிடமும் அதே மேல்கூலிக்காக பாராமுகம் காட்டும் இவர்களின் கீழ்த்தர போக்கு பிற நேர்மையான அரசுஊழியர்களையும் தலைகுனிய செய்கிறது.

பெண் எழுத்தாளரின் தொகுப்பாயிற்றே பெண்மைக்கான முக்கியத்துவம் வழங்குவதே படைப்பைச் சிறக்கச் செய்யும் என்பதற்கான விடிவெள்ளியாகப் பெண்ணினத்தின் சமகாலப் பிரச்சனைகளைக் கொண்டு விசேஷமாகப் பல படைப்புகளை உள்ளடக்கியுள்ளது தொகுப்பு.

காலந்தொட்டுப் புரையோடிக் கிடக்கும் பெண்களுக்கெதிராக நிகழும் அநீதிகளில் ஒன்று ஆணாதிக்க அடக்கு முறை. தொகுப்பு இப்படியான ஆதிக்கத்திமிரை வன்மையாகக் கண்டிக்கும் விதமாக “புதைக்குழி”. கதை. ஆண்களின் அட்டகாசங்களாகப் போதை களியாட்டம் பெண்களின் அல்லாட்டமாக நாளொன்றின் திண்டாட்டம். நிதம் சிந்தனையிலும் செயலிலும் மொழியிலும் உயிருடன் சித்திரவதிக்கும் இந்திய தேசத்தின் ஏனைய குடிமகன்களில் ஒருவனான கந்தசாமி‌ கதாபாத்திரம். போதையின் தீவிரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படும் அரக்கனாக, மகளா மனைவியா என்கின்றப் பாகுபாடு கூட அறிந்திராத அவனின் போதை மயக்கம் அசுர தனத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும். சில ஆண்களின் இப்படியான மட்டமான போதைமைப் போக்கு ஒருநாள் சமூகத்தையே கொன்றொழிக்கும் என்பதே நிதர்சனம்.

“போதையின் உச்சத்தில் இருட்டு இரவில் கந்தசாமியின் கைகள் நீண்டுத் தடவிய போது தங்கம் தன்னருகே படுத்திருந்த பார்வதியை தடாலென தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அந்த இரவுக்குப்பின் பார்வதியும் முத்துவும் முத்தாயி கிழவியிடம் தான் படுத்துறங்கினார்கள்.”

தலைமுறைகளின் தவிப்பு ஆசிரியரின் வரிகள் விதியை விளக்கி நிற்கிறது துலக்க வழியின்றி…
“அம்மா என்ன பெத்ததும் செத்துப் போச்சாம்.அப்பா பட்டச்சாராயம் குடிச்சே ஈரல் வெந்து செத்துட்டாரு. அண்ணே கூடத்தான் இருந்தேன். அண்ணனும் கட்டிட வேலை பாக்கும் போது போதையிலே மூணாவது மாடியிலிருந்து தவறி விழுந்து செத்துப் போச்சு. அத்தாச்சி சொந்தக்காரவுங்க தான் இவரு..
“இப்படி தலைமுறை தலைமுறையா தண்ணியடிச்சா விளங்குமா?”

பெண் பூதேவி போன்றவள் பொறுமையின் சிகரம் என்றெல்லாம் கொண்டாட்ட வார்த்தைகளை அடுக்கிப் பெண்களை அடக்கி மிதிக்கும் மேம்போக்கு மனோபாவம் கணவன்மார்களிடத்தில் ஆதிகாலம் முதலே ஆக்கிரமித்துத் தான் வருகிறது‌. பெண் பொறுமை தாண்டினால் பூதேவி ஸ்ரீதேவி அல்ல காளிதேவியாகி கணவனை துவம்சம் செய்யத் தயங்க மாட்டாள் தூர தள்ளி வைக்கவும் சுணங்க மாட்டாள் என்பதற்கு “சவால்” கதை ஒரு சவாலாக அமைகிறது. பொன்னக்கா போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் முத்துசாமி போன்ற ஆணவச்செருக்குக் கொண்ட கணவன்மார்களைத் துரத்தித் தள்ளி வைத்துத் தமது சொந்தக் காலில் வாழ்ந்து முடித்துக் காட்ட வேண்டும் என்ற துணிச்சலுடன் முன்வரும் பெண்களை அடையாளங்காட்டி கோழைகளாய் பயந்து ஆண்களை சார்ந்தே வாழும் பெண்களுக்கு தைரியத்தையூட்டும் வகையில் பொன்னக்கா பாத்திரம் விசேஷம். ஆசிரியரின் பெண்களுக்கான வலிமையை கூட்டும் விதமாகக் கதை. பெண்களை எப்போதும் தமக்கான கிளர்ச்சிப் பொருளாகவே பாவிக்கும் ஆண் வக்கிர புத்தியை வெளிச்ப்படுத்துகிறது “ரௌத்திரம் பழகு”கதை. பெண்களைத் தமக்கான போதையாகப் பிரயோகிக்கும் ஆண் மடமை சிந்தனைக் கொண்ட சமூகம்,கனகா போன்ற துணிச்சல் மிக்க பெண்கள் அவர்கள் புறம் வீசும் சொல்லம்புகளின் தீக்கணைகளாக ஆணாதிக்கத்தைப் பொசுக்கியே ஆங்காரத்தை நொறுக்கியே நிற்கிறது பாத்திரம். பெண்களை வதைக்கும் ஆண்களை எதிர்க்க ரௌத்திரம் பழக வேண்டிய நிலை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளதை பறைசாற்றும் படைப்பாக ஆசிரியரின் இந்த கதைத் திகழ்கிறது.

சிரித்துப் பேசும் பெண்களைத் தவறான முறையில் அணுகும் ஆண்களின் கேடு கெட்ட சிந்தனையை சமாதி கட்டும் விதமாக செம்மலர் இதழில் வெளிவந்த “வன்மம்” கதை. கதையின் நாயகி முத்து தமது இயல்பான பேச்சையும் யதார்த்தமாகப் பழகும் முறையையும் தவறாகச் சித்தரித்துத் தப்பான பிடிமானம் கொண்டு அவளை நெருங்க நினைக்கும் அவளின் அக்கா புருஷனின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி உடைத்துத் துரத்தி விடுகிறாள் முத்து.
சமூகத்தில் இப்படியான துணிச்சல் மிக்க பெண்களையும் அடையாளம் காட்டத் தவறவில்லை ஆசிரியரின் தொகுப்பு.

வன்மம் சிறுகதை போல “ரத்தத்தின் ரத்தம்” சிறுகதையும் ஆண்களின் விரலிடுக்குகளில் நசுங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கொத்தடிமை வேதனையை கொப்பளிக்கச் செய்கிறது. ஆணாதிக்கத்தின் உச்சம் பெற்ற குடும்ப அந்தஸ்தனாக பெரியவரும் அவரை வழிமொழியும் மற்றுமொரு ஆதிக்கத் தொடர் சங்கிலியாக மகன் சுந்தர் பேரன் சுரேந்திரன்.இது போதிக்கப்பட்டதல்ல குருதியிலேயே ஊட்டி வளர்த்து இன்று ஊற்றாக ஊறிப்போன ஆண் என்கின்ற மேலாதிக்க எண்ணம். இந்த எண்ணம் வளர ஆண்கள் மட்டுமல்ல சுயவிரும்பிகளாக அடங்கிப் போகும் அடிமை மனநிலைக் கொண்ட பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை கதை. பெண்கள் நிமிராது ஆண்களின் ஆதிக்க உணர்வுத் தாழாது என்பதற்கு..
“என்னடி ரொம்ப வாய் நீளுது பொட்டைக் கழுதை அறைஞ்சேனா….” என்று கையில் இருந்த பனையோலை மட்டையைத் தங்கை மீது வீசியெறிந்தான் சுரேந்திரன்…
இந்தப் பரம்பரை அடிமை சாசனத்தைத் தகர்த்தெறியும் பெண் தலைமுறை இனி துவங்க வேண்டும் இல்லையேல் புதியதொரு மாற்றுவழிமுறைத் துலங்க வேண்டும்..

பெண்களின் உளவியல் நுண்ணுணர்வை மன இறுக்கத்தை பேசும் கதையாகக் “கட்டாய கடிவாளம்” சிறுகதை. பெண்களின் புதைக்கப்பட்ட உணர்வுகளை நுட்பமான அவதானிப்புடன் துல்லியமாக வடித்துள்ளார் ஆசிரியர் விஜிலா. எதையும் எளிதில் வெளிப்படுத்தத் தயங்கும் இயல்பு கொண்டவர் பெண்கள். என்பதற்கு வசுமதி தியாகு மீதான தமது காதலை இறுதிவரை வெளிப்படுத்தத் தயக்கம் கொள்கிறாள். தியாகுவின் திருமண நடந்தேறுகிறது.கட்டாய இறுக்கத்தின் கடிவாளத்தைத் தானே போட்டுக் கொள்கிறாள் வசுமதி. பெண் சார்ந்த உளவியலின் நுண்ணுணர்வை அதி நுட்பமாக ஆராய்கிறது கட்டாய கடிவாளம்.

பெண்களின் உடல் சார்ந்த அவஸ்தையை அந்தரங்க பிரச்சனைகளைப் பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்க வழியற்ற நிலை உடல் சார்ந்த ஒழுக்கசீலத்தின் கட்டாயத் திணிப்பு என அல்லாடும் பெண்களின் அவலத்தை அவர்களிடத்திலிருந்தே சொட்டுச் சொட்டாக மொழிகிறது “இறுதிச் சொட்டு.”பொதுவெளியில், பிரயாணத்தின் போது என பெண்கள் படும் அவஸ்தைகள் ஆண்கள் போல இயல்பாக எவ்விடத்திலும் சிறுநீர் கழிக்கவியலா தருணங்கள் உடல் உபாதைகள் ஆடைகள் சரிசெய்யவியலாத பரிதாபம் என பெண்களின் தவிப்புகள் அவரிடத்திலிருந்தே பேசுகிறது கதை. இது கதையாக மட்டுமே வாசித்துக் கடத்தி விடுவதல்ல, ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள் காலம் தொட்டு புழுங்கிக் கிடக்கும் உளக்குமுறலை உடலியல்பை வெளிப்படுத்தவியலாத தருணங்களின் கையாலாகாதத்தனத்தை மன அங்கலாய்ப்பைப் பெண்களின் உணர்வு சார்ந்த உடல் சார்ந்த குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் படைப்பின் குரல்.

காலம் காலமாக நமது சமூகத்தில் ஸ்திரமாக இருப்பது பெண்களின் தாயகம் மற்றும் புக்ககம் இரண்டிற்கும் இடையேயான குடும்ப உறவுப் பாலம். இதில் சர்ச்சைகளும் பூசல்களும் என்பவை இயல்பு. விட்டுக் கொடுத்தலும் துடைத்துச் செல்வதுமே இயைபு என்பதை அப்போது நமது முன்னோர் வாழ்ந்துக் காட்டி நிரூபித்துள்ளனர் இன்றைய குடும்பங்களில் புக்கத்தாரும் சரி புது மகளும் சரி நீயா நானா என்கிற போட்டி மனப்பான்மையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரையொருவர் குற்றம் கூறியும் குறை பேசியும் வாழ்ந்து வரும் சமூகமாக இன்றைய மாமியார் மருமகள் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.மறுத்தலும் மறுத்தலித்தலுமே ஓங்கி நிற்பதைக் கதைக்கிறது “ஆரஞ்சு பழங்களும் ஹார்லிக்ஸ் பாட்டிலும்” கதை. பெண்களும் தமது பெற்றோரைக் கவனிப்பது போல புக்கத்தாரையும் போற்ற வேண்டும் என்பதே கதை நமக்கு உணர்த்துகிறது.அதே சமயம் மகளைப் போலவே மருமகளையும் கொண்டாட வேண்டும் பெற்றோர்.அப்போதே குடும்பம் என்கின்ற சமூகம் சமன்படும் என்பதே கதையின் தாத்பரியம்.

சுற்றங்களின் அருமையை சுட்டிக்காட்டுமொரு படைப்பாக அடுத்த கதை.
சுற்றத்தாரின் உரிமை மிகுந்த உள்ளார்ந்த அன்பை உதவும் கரங்களைப் புடம் போட்டுக் காட்டும் படைப்பாகத் “தவறிய கணிப்பு” கதை. குடும்ப உறவு என்பது ஒரு புறம் இருந்தாலும் உதவி என்ற அழைத்தக் குரலுக்கு உடன் ஓடோடி வருவது நம் அக்கம் பக்கத்து உறவுகளே. ஆனால் இன்றைய நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மத்தியில் வாழ்பவர் தமது இல்லத்தைத் திராபகக் கதவுகளைக் கொண்டு அடைத்துத் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது தமக்கொவ்வாததாகக் கண்டும் காணாமலும் வாழ்ந்து வருவதே இன்றைய நகர வாழ்க்கை என்னும் நரக வாழ்க்கை என்பதைத் திட்டவட்டபாக விளக்குகிறது கதை.அதற்கான காரணியாகக் கதை முன்வைப்பது சடகோபன் போன்ற மனிதர்களின் முன் முடிவுகளும் சுற்றத்தைப் பற்றிய தவறான கணிப்புகளுமே. அதே வேளை கவிதா போன்ற சுற்றத்தினருடனான நல்லிணக்கம் கொண்ட உறவுகளும் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை ஆசிரியர். உதவி என்ற எதிர்வீட்டுக் குரல் ஒலிக்க ஓடிச் சென்று உதவிய மாண்பைக் கொண்ட பாத்திரமாக கவிதாவின் பாத்திரம் நம் அன்றாட வாழ்வின் தரிசனம். நித்தம் நாம் பழகும் சாதாரண பக்கத்து வீடு எதிர்வீட்டு மனிதர்களைக் காட்சிப்படுத்துகிறது கதை. உண்மையில் இந்தக் கதை ஒவ்வொரு நகர்புறவாசிகள் அன்றாடம் எதிர்கொள்ளூம் அனுபவ செறிவே.

தொகுப்பில் பெருவாரியான கதைகள் வாசக ஈர்ப்பை சமூகத்திற்கான பாடத்தை சமகாலப் பிரச்சனையைப் பேசும் படைப்புகளாக இருப்பினும் ஒரு சில படைப்புகளின் இறுதிக்காட்சிகள் மற்றும் இடையில் கருவின் நகர்தல் சற்றே ஒப்புமையின்றி இருப்பதாக எனக்கு தோன்றியது.அதில் குறிப்பிடும்படியாக “அமுதா ஒரு..” கதை சிறு பிள்ளையாய் அமுதா பிராயகுதூகலத்தில் கொண்டாடியும் மகிழ்ந்தும் அதேசமயம் முதிர்ந்த மனநிலைக் கொண்ட பெண்பிள்ளையாகப் பெற்ற மகளையே பெண்டாள நினைக்கும் தகப்பனின் கீழ்தரச் செயலில் உடைந்துப் போகிறாள் எதிர்த்தும் போராடுகிறாள். தகப்பனின் எல்லை மீறிய மொழியிலும் செயலிலும் தற்கொலை வரை தமது எண்ணத்தில் அடர்த்தியாக நின்று சாதித்தும் விடுகிறாள். ஆனால் இறுதியில் தகப்பனின் அட்டூழியங்களை நீண்ட மனபோராட்டங்களுக்குப் பின் போலீஸிடம் வெளிப்படுத்திவிட்டு மரணிக்கிறாள். அமுதாவின் வாக்குமூலத்தை ஏற்க முடியாமல் ஆத்திரப்படும் அவளது தாய், அமுதாவின் இறப்பிற்கு பின் அவளைத் தூற்றுவதாகக் கதையைச் சித்தரித்துள்ளது சற்றே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சிறுபிள்ளையாக அமுதாவின் முதிர்ச்சியைப் பாராட்டிய ஆசிரியர் பழைய சடங்குகளில் ஊறிய பெண்ணாகக் கணவனின் கேடுகெட்ட செயலை ஆமோதிக்கும் விதமாக அவளது தாயின் கதாபாத்திரம் கதைக்கு உவப்பானதாக இல்லை என்பதே எனது கருத்து. இறுதியில் அமுதாவின் மரணத்திற்குப் பிறகு அவளை சபிக்கும் தாயாக அமுதாவின் அம்மாவைக் காட்டியுள்ளது ஒரு தாய்மையை இழிவுபடுத்தும் விதமாகத் தெரிகிறது.

அடுத்ததாக “ஏலம்” கதை புனைவுக்காக மாறுபட்ட கண்ணோட்டத்தில் வாசகர் ஏற்புடையதாக இருந்தாலும் ஆசிரியப்பணியைக் களங்கப்படுத்தும் விதமாக ஏலம் விடுவதாகப் புனைந்துள்ளது கதையின் தொய்வைச் சற்றே வெளிப்படுத்துகிறது. ஊழல் எங்கு நடந்தாலும் எதிர்குரல் முதலில் ஒரு எழுத்தாளனிடத்திலிருந்தே ஒலிக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் இந்தப் போக்கை எதிர்க்காமல் கதையை முடிந்திருந்தது அத்துனை இதமாக இல்லை‌.நான் அறிந்த வரை ஆசிரியர் பணி பணத்தை முன்வைத்து ஏலம் விடுவதாக கேள்விப்பட்டதில்லை. கல்வி திறமை அறிவு பிள்ளைகளுடனான இணக்கம் பிள்ளைகளின் உளவியலை நேர்த்தியாகக் கையாள்வது இதுவே ஆசிரியர் பணிக்கான தகுதி என்பதே சரியான முறை. புனைவுக்காகக் கூட இப்படியாக ஆசிரியசமூகத்தை இழிவுப்படுத்தும் விதத்தில் படைப்பாக்காயுள்ளது நெருடலை ஏற்படுத்துகிறது. அப்படியே ஏதோவொரு மூலையில் அப்படியாக இயங்கும் அரசுசார்புப் பள்ளிகள் இவ்வாறாகச் செயல்பட்டாலும் அதைப் பொதுவெளியில் இலக்கியப்பரப்பில் வெளியிடுவது பிற அரசு சார்புப் பள்ளிகளுக்கு ஒத்திசைவாக இருந்துவிடக்கூடும். இயல்பான குற்றமாகத் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வர்.தொடர்ந்து இவ்வாறான இழிவு காரியங்களைச் சற்றும் குற்றவுணர்வின்றி மேத்தகு ஆசிரியப் பணியை ஏலம் விடும் பணியைத் தொடர்வர் என்பது என் புரிதல். ஆசிரியர் இலக்கணத்தையே மாற்றுவது போன்ற இறுதிப் பார்வை சற்றே ஏமாற்றத்தை வழங்குகிறது‌.

காதல் திருமணம் என்றால் இன்றும் குடும்பத்தில் வெறுப்பு ஆட்சியமனைகள் உதிர்த்த வண்ணமிருப்பர் பெற்றோர். விழைமேவிய பெண்ணையோ ஆணையோ பிள்ளைகள் மணக்க தமது விருப்பத்தை முன்வைக்கும் தருணம் பெற்றோர் முட்டுக்கட்டையாக முன் நிற்பர். எதிர்ப்பலைகள் ஓயாது வீசிக்கொண்டிருக்கும். வெகு நேரம் வெறும் அதிர்வுகளாக.. கணநேரம் எளிதான சண்டை சச்சரவுகள் என தொடர்ந்து பரிணமிக்கும் இப்பிரச்சனை பல சமயங்களில் குடும்பத்தில் உயிரைக் கூட காவு வாங்கும் என்பதையே தங்கம்மா கதாபாத்திரம் உயிர்த்துறந்து சொல்லிவிட்டு செல்கிறது “ஆத்தா சீருண்டு” கதையில். மகனின் ஆசையைப் மறுத்தலிக்கும் தங்கம்மா மகள்களுக்கான உவப்பான தாயாக இருக்கிறாள். தமது தாலிக் கொடியின் ஒரு பிரிவில் மகள்களுக்காகத் தங்க வளையல்களைச் செய்த தங்கம்மா மகனை பற்றிய சிறு பட்சாதாபமுமின்றி முற்றிலுமாக ஒதுக்கி வைத்தது தாய்மையில் ஒருவித பாரபட்ச மனோபாவத்தை வெளிப்படுவதாகக் காட்டுகிறது. சமூகத்தில் தாய்மையை இவ்வாறாக சித்தரிப்ப

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *