“பெண்” என்ற சொல்லின் அர்த்தை தேடுபவர்களா நீங்கள்? அப்படியானால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
மனிதக்குலம் எப்படி தோன்றியது என்ற கேள்விகளுக்கு எல்லாம் விஞ்ஞானம் விடைத் தேடியதில் கடைசி முற்றுப்புள்ளியாக தான் பெண் கண்டெடுக்கப்பட்டதாக சொல்படுகிறது. ஆம் அப்படி முற்றுப்புள்ளியாகி வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தினோமானல் அதில் கிடைத்த பதில் வரலாற்றில் பெண் என்பவளே தெடக்கப்புள்ளியாகிறாள். அப்படியான தேடுதலைத்தான் “பெண்ணின் மறுபக்கம் ” பேசுகிறது. இப்படி பெண் பற்றி மட்டும் தேடாமல் அவளின் அரசியல், ஆளுமை, உடல், பாலியில், போராட்டம் என எல்லா தளங்களில் ஓரு சேர கொடுத்திருக்கிறார் டாக்டர். ஷாலினி.
புத்தகத்தை படிக்கும் போது நாம் எப்படி பட்டவர்களாக வளர்ப்பட்டுயிருக்கிறோம் என்பதை நமக்குள் பல கேள்விகள் எழுகின்றது. கேள்விக்கான பதிலாகவே எல்லா தலைப்பும் நம்மை நகர்த்துகிறது. பெண் பற்றிய கதையாக நமக்கு புகட்டப்பட்ட எல்லா கதையிலும் பெண்ணின் சித்தரிப்பு வேறு மாதிரி ஓரு பிம்பத்தை நம்மில் ஏற்படுத்தி விட்டு இருக்கிறது என்பது தெரிகிறது. பெண்-ஆண் எப்போதும் இரு வேறு துருவங்கள் என்ற சித்திரிப்பின் முலம் ஏற்ற தாழ்வை முன்னிறுத்தி அதில் தொடர்ந்து பயணித்த இருக்கிறோம்.
அதேநேரத்தில், ” பெண்ணின் தலைமைப் பதவி ஆணிடம் எப்படி வந்தது? மீண்டும் அந்தப் பதவியை பெண்ணுக்குத் தராமல் எதற்காக ஆண் வைத்திருக்கிறான்? பெண்ணின் அறிவை அகற்ற எத்தனை விதமான உத்திகளை ஆண் பயன்படுத்துகிறான்? என்று பல கேள்விகளுக்கு விடையை தந்து இருக்கிறார் டாக்டர். ஷாலினி.
அதைப்போன்றே இயற்கை உருவாக்கி எல்லா உயிரினங்களிலும் ஆண் தான் தன் அழகை காட்டி பெண்களிடம் உறவு கொள்ளும் முயலும். அதற்காக தான் ஆண் மயிலுக்கு தோகை ,மானுக்கு கொம்பு, யானைக்கு தந்தம் போன்றவையெல்லாம் படைக்கப்பட்டது. ஆனால் இதில் மனித இனம் மட்டுமே பெண்கள் ஆண்களை கவறுவதாக சொல்லப்படுகிறது. மற்றும் எல்லா உயிர்களைப் போலவே மனித இனத்திலும் பெண் தான் பிரதானம். ஆராம்ப காலத்தில் அவள் தான் மனித கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய இருக்கிறாள். அவள் தான் கடவுள் , அவள் தான் தலைவி, அவள் தான் அரசி!
அப்புறம் எப்படி அவள் நிலைமை மாறியது? இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவள் எப்படி இத்தனை கீழ் நிலைக்கு மாறினாள்? எல்லாம் இந்த மரபணுக்கள் நடத்தும் பாலியல் போரினால் தான்!
மனிதப் பெண் மற்ற மிருகங்களை போல, வெறும் பருவ காலத்தின்போது, அனிச்சை செயலாக புணர்ச்சி கொள்ளும் ஜந்து இல்லை. அவள் அன்பும், பாசமும் , நம்பிக்கையும் உணர்ந்தால் மட்டுமே இணைய தொடங்கும் அவள் ஓரு வித்தியாசமான விளங்காயிற்றே.
மனிதப் பெண்ணின் இந்த மறுப்பக்கத்தை உணர்ந்தவர்கள் அதிசயித்து அவளை ஆராதிக்கிறார்கள் அல்லது அஞ்சி ஓதுங்குகிறார்கள் ;இல்லை போற்றி பாராட்டுகிறார்கள். அல்லது அடக்கி காட்ட முற்படுகிறார்கள். இப்படி அவரவர் மனநிலையைப் பொறுத்து அவரவரது எதிர்வினைகள் மாறினாலும் பெண்ணின் இயல்பு மட்டுமே மாறுவதே இல்லை. இயற்கையின் மற்ற சக்திகளைப் போலவே அவள் எதற்கும் பணியாமல் பயணித்துக் கொண்டே போகிறாள்.
புத்தகத்தைப் பற்றி நல்ல அறிமுகம். பெண்களிடமிருந்து ஆண்களுக்கு அதிகார மாற்றம் நிகழ்ந்தது தற்செயல் இல்லை