Bryan Sykes's The Seven Daughters of Eve (ஏவாளின் ஏழு மகள்கள் - Evalin Ezhu Magalgal) Book Review By Kotagiri Raju.

நூல் அறிமுகம்: பிரையன் சைக்ஸ் எழுதிய *ஏவாளின் ஏழு மகள்கள்* – கோத்தகிரி ராஜூ



நூல்: ஏவாளின் ஏழு மகள்கள்
ஆசிரியர்: பிரையன் சைக்ஸ் | தமிழில்: டாக்டர். வி. அமலன் ஸ்டேன்லி
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
பக்கங்கள்: 375
விலை: ரூ. 375
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/evalin-ezhu-magalgal/

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி பிரையன் சைக்ஸ் எழதிய இந்த புத்தகம் தமிழில் டாக்டர் வி.அமலன் ஸ்டேன்லி அவர்கள் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவியல் ஆவணம். டிஎன்ஏ எனப்படும் மரபணு ஆய்வு அறிஞரான ஆசிரியரின் மனித குலத்தின் மூதாயை கண்டறியும் முயற்சியை விருவருப்பாக ஒரு மர்ம நாவலைப்போல எழுதியுள்ளார். முதலில் ஐரோப்பியர்களின் மூதாயை கண்டறியும் முயற்சியில் பசிபிக் கடலில் சிறு புள்ளிகளைப்போல் உள்ள தீவுகள் உட்பட ஐரோப்பா முழுவதும் பயணித்து டிஎன்ஏ மூலக்கூறுகளை திரட்டுகிறார் ஆசிரியர். மைட்டோகான்ரிய டிஎன்ஏ நம் தாய்வழி மூலத்தை உள்ளடக்கியுள்ளது.

இந்த டிஎன்ஏ க்கள் மைனஸ் 70 டிகிரி உறைகுளிரில் வைக்கப்பட வேண்டும். சற்று வெப்பநிலை அதிகரித்தாலும் அதனை குப்பையில் போட வேண்டிவரும். பல ஆண்டுகள் கடும் உழைப்பில் திரட்டிய டிஎன்ஏக்களை பகுத்தாய்கிறார். இறுதியில் அவற்றை ஏழு கொத்துகளாக பகுக்கிண்கிறார். ஒட்டு மொத்த ஐரோப்பியர்களின் மூதாயை ‘ஏவாள்’ என்றழைக்கிறார். இந்த ஏழு கொத்துக்களை ஏவாளின் ஏழு மகள்கள் என்று அழைக்கிறார்.

அந்த ஏழு கொத்துக்களும் ஏழு குலங்கள். அவற்றின் மூதாய்களை உருசுலா,எக்சினா,ஹெலினா, வேள்டா, தாரா, காத்ரினா மற்றும் ஜாஸ்மின் என்ற கற்பனை பெயர்களால் அழைக்கிறார். இவர்கள் முறையே 45,000, 25000,20000, 17000,15000,10000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வெவ்வேறு இடங்களில் தோன்றியவர்கள்.

இவர்கள்தான் ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்களின் மூத்த தாய்மார்கள். இந்த ஆய்வை வெற்றிகரமாக நிறுவியபின் மனித குலத்தின் மூதாயை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். அந்த மனித குலத்தின் ஏவாள் ஆப்ரிக்காவில் எத்தியோப்பியாவில் பிறந்து நம் அனைவருக்குமான மூத்த பாட்டியாக கண்டறிகிறார். ஒவ்வொரு பெண்ணும் ஒரு குலத்தை உருவாக்குகிறார். வலியோடு பெற்றெடுக்கும் குழந்தைகளை பாசத்தால் ஒன்றிணைக்கிறாள். மனித நேயத்தால் ஒரு குலத்தை கட்டமைக்கிறாள். ஆனால் ஒரு ஆணின் ‘ஒய்’ குரோமசோம் ஆண்மையைத்தான் கட்டமைக்கிறது. வரலாற்றில் நாம் காணும் ஆண் மைய குலம் அனைத்தும் செல்வம் மற்றும் அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தாய் வழிச்சமூகம் அமைந்திருந்தால் சாதி மத பேதமின்றி அன்பால் மனித நேயத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும். நம் அனைவரின் மூதாயை மனித குலத்தின் ஏவாளை கண்டறிந்த மன நிறைவில் நூலாசிரியர் தன் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் பக்கத்திலிருந்த ஒரு ஆடிடோரியத்தில் இவர் கண்டறிந்த ஏவாளின் ஏழு மகள்கள் வழி வந்த மக்களுக்கு மருந்து தயாரிக்கும் உரிமையை பேடன்ட் போடும் கலந்தாய்வில் மருந்து கம்பெனிகளின் நிர்வாகிகள் தீவரமாக ஈடுபட்டிருந்தனர் என ஆசிரியர் நூலை முடிக்கிறார்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *