புத்தனின் வீடு …..!!!! கவிதை – ச.சக்தி

புத்தனின் வீடு …..!!!! கவிதை – ச.சக்தி




பெரிய மரத்து நிழலில்
அமர்ந்திருக்கிறார் அரசன்
மரம் அரசமரமானது,

மனங்களின் ஆசைகளையெல்லாம்
ஆய்வு செய்த அரசன் ஆலமரத்தடியில்
அமர்ந்திருக்கிறார் அகிலமெங்கும்
கிளைகளை நீட்டியவாறு ,

குழந்தையின்
கையில் இருக்கும்
புத்தரின்  பொம்மை
பேசாமல் இருக்கிறது
உலகத்திலுள்ள அனைத்து
உயிர்களை நேசித்ததால்,

குடிசை வீடெங்கும்
சிரிப்பு மழையாகவும்
ஆனந்த மழையாகவும் தினந்தோறும் பொழிகிறது
குடும்பத்தை அமைதியாக ஆசைகளில்லாமல்
வழி நடத்தி கொண்டிருக்கிறார்
அலமாரியில் தூங்குகின்ற  புத்தனொருவன் “……..!!!!!!!

கவிஞர் ; ச.சக்தி, 
அழகு பெருமாள் குப்பம், 
பண்ருட்டி,
9791642986,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *