Buddhar Cinema Poem By Ka Punithan க. புனிதனின் புத்தர் சினிமா கவிதை

புத்தர் சினிமா கவிதை – க. புனிதன்




பிரமாண்ட அரண்மனை செட்
போதி மரம் செட்
வீதியே பார்த்திராத
ராஜ வம்சம் சார்ந்த
ஒருவன்
ஒரு நாள் இரவில்
துறவி ஆகி வெளியேறும்
கதை

மனைவியைப் பிரிந்த
சோக இசை அமைப்பு
அரண்மனை ஆடைகள்
துறவி ஆடைகள்
சிறப்பான உணவு வகைகள்
அம்பு எய்த அன்னத்தின்
காயத்திற்கு மருந்திடும் சிறுவன்
சிறந்த பின்னணிக் கதை

உலகின் உயர்ந்த இசை
மௌனம் எனும்
சிறப்பு சப்தம்
முழு நிலவில்
முற்றும் உணர்ந்தவன்
புத்தர் பற்றி படமெடுக்க
எவ்வளவு பிரமாண்ட செலவாகும்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *