புத்தா ரோபோ பேசுவதில்
புள்ளினங்களின் மொழி
இருந்தது
அரண்மனை விட்டு
வெளியேறும் போது
உலோக காலம் விட்டு
காகத்தின் எச்சில் முளைத்த
விதையின் தொன்ம காலம்
நோக்கி நகர்ந்த
ரோபோவின் கதை இருந்தது
குயிலின் மொழி
உணவு கொண்டு போகும்
எறும்புகளின் சாரை
ஜென் கதைகள்
மனம் எனும் மூலிகையின்
வாசம் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தது
வாழை இலை மேல்
மழைத் துளி தங்கும்
மெழுகில் முழுக்க பூசப்பட்டிருந்தது
யசோதரவின்
பெண் மொழியும்
தேநீர் மொழியும்
அதில் சேர்க்கப்பட்டிருந்தன.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அம்மா கவிதை அறுமை தோழர் சாந்தி அவர்களுக்கு வாத்துகள்
வாழ்த்துகள் தோழர்