சாலையில் விழுந்தோரை
சட்டென தூக்கும் கரங்கள்!
கைவிடப்பட்ட முதியோருக்குக்
கைகொடுக்கும் இளைஞர்கள்!
வாலைக் குழைத்துவரும் நாய்க்கு
வாங்கிக்கொடுக்கும் டீ பன்!
சில்லரைக்காக இறக்கபடுவோர்க்கு
சில்லரைகொடுத்து இரக்கபடுவோர்!
கர்ப்பிணியின் கடுஞ்சுமைதூக்கும்
கண்ணியமாய் உடுத்தும் யுவதிகள்!
மனநலம் குன்றிய “பைத்தியம்”மீது
குணநலம் கொண்டு உதவுமீகை !
அனாதை குழந்தை தத்தெடுத்து
ஆதரவுக்கரம் நீட்டும் அறவோர் !
மானுடம் தழைக்க,
தன்னுயிர் போன்று
மன்னுயிர் காக்கிற
படமாடும் கோவில் நிகர்த்த..
நடமாடும் கோவிலாம்
மானுடர் போற்றி போற்றி!
– மரு உடலியங்கியல் பாலா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

