மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் புத்தகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒலி வடிவில் வெளியிடப்பட்டன. பாரதி புத்தகாலயமும், இயல் குரல் கொடை அமைப்பும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த புத்தகம் இயல் பாட்காஸ்ட் தளத்தில் வெளியானது.
வியாழனன்று, நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். இந்த ஒலிப் புத்தகத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகரன் வெளியிட, சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் சுதிர் பெற்றுக்கொண்டார். இயல் குரல் கொடை மற்றும் புக் டே தளங்களில் இந்த ஒலிப்பதிவுகள் இலவசமாக அனைவரும் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இயல் குரல் கொடை சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், அருந்தமிழ் யாழினி, பாரதி புத்தகாலயம் சார்பில் நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.