தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ்

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின்…
எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு விளக்கு விருது (Vizhakku Award) அறிவிப்பு, இத்தருணத்தில் அவரைப் பற்றிய ஒரு சிறு வாழ்த்துக்கட்டுரை

விட்டல்ராவுக்கு விளக்கு விருது – பாவண்ணன்

விட்டல்ராவுக்கு விளக்கு விருது - பாவண்ணன் அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும்…
சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம் - A reading experience for children - Udhayasankar - ஆதனின் பொம்மை - உதயசங்கர் - https://bookday.in/

சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம்

சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம் கடந்த 30.9.24 திங்கள் கிழமை அன்று தூண்டில் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன்னெடுத்த நடத்திய "சிறார்களுக்கான வாசிப்பு அனுபவப் பயணம்" சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் கடலோர கிராமங்களைச்…
மதுரை தமுஎகச (TNPWAA Madurai)-வின் வாசிப்போம் நேசிப்போம்-3 | 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) - நூல் வாசிப்பு பகிர்வு

மதுரை தமுஎகச-வின் வாசிப்போம் நேசிப்போம்-3

மதுரை தமுஎகச டாக்டர்.க.செல்வராஜ் கிளையில் 17.9.24 அன்று காலை 10.30 மணிக்கு 'வாசிப்போம் - நேசிப்போம்-3' நிகழ்வில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வும் வலியும் சிறுகதைகளாக இளம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் ரா.பி.சகேஷ் சந்தியாவால் தொகுக்கப்பட்ட 'கடலும் போராளிகளும்' (Kadalum Poraligalaum) என்ற…
விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு (Vijaya Reader Circle's Ki. Ra Award For Writer Nanjil Nadan) - https://bookday.in/

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருதுக்கு தேர்வு

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விஜயா வாசகர் வட்டத்தின் 2024- ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் கூறியிருப்பதாவது: கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின்…
சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...   தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியத்தின் மணிவிழாவினை ஒட்டி 1996ல் அவரது பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு ‘சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், அப்துல் ரகுமான்,…
புத்தரின் ஒற்றைப் புன்னகை (Buddharin Ontrai Punnagai) - பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி - கவிஞர் மு.முருகேஷ் பேச்சு - https://bookday.in/

‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ – நூல் வெளியீட்டு விழா

பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு…
Pothikai Minnal Award for three books published by Bharathi Puthakalayam | பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட பெரணமல்லூர் சேகரனின் 'வன்ம மேகம் கலையும் போது', சரிதா ஜோவின் 'சரஸ்வதிக்கு என்னாச்சு' ஷர்மிளாவின் மகிழினி IPS ஆகிய மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது பொதிகை மின்னல் இலக்கிய மாத இதழ் மாநில அளவில் நூல்…
பால புரஸ்கார் விருதும் சாகித்ய அகாடமியும் – தசிஎகச  கண்டனம்.

பால புரஸ்கார் விருதும் சாகித்ய அகாடமியும் – தசிஎகச கண்டனம்.




வணக்கம்,

2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் என்பது சிறார் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’மல்லிகாவின் வீடு’ நூல், பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதை ‘அப்பாவை ஏன் பிடிக்கும்?’. இதற்கு மிகச் சாதாரணமான பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையின் முடிவாக ஒரு மாணவர்,”எங்கப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஏன்னா, அவர் எங்கம்மாவைக் கல்யாணம் செய்துக்கிட்டாரே!” என்று சொல்கிறார். பட்டிமன்ற நகைச்சுவைத் துணுக்கு போன்ற இதை, சிறுவர் கதை என்கிற முடிவுக்கு தேர்வுக் குழுவினர் எப்படி வந்தனர்?

இப்படி இத்தொகுப்பில் உள்ள முக்கால்வாசி கதைகளில் கதைத்தன்மையே இல்லை. மொத்தத் தொகுப்பும் ஆரம்பகட்ட சிறார் கதைகள் எழுதுபவரின் முயற்சியைப் போலுள்ளது. 1980களில் வந்த புத்தகத்தினைப் போல எந்த வகையிலும் நவீனத்துவம் (இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவது நவீனத்துவம் ஆகி விடாது) சிறிதும் இல்லாத தொகுப்பாக இருக்கிறது. புதிய முயற்சியாகவோ, புதிய கதை சொல்லும் பாணியிலோ, இதுவரையில் யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல முற்பட்டதாகவோ தெரியவில்லை.

விருது என்பது தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டால்தான் அந்தத் துறை வளர்ச்சிபெறும். ஆனால், பால சாகித்ய புரஸ்கார் தேர்வுக் குழுவினரோ, தமிழில் நவீன சிறார் இலக்கியம் வளரக் கூடாது என நினைப்புடன் இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.

விருது கொடுக்கப்பட்டுள்ள நூலாசிரியரின் கதைகள், நூல்கள் தமிழ் சிறார் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ, முன்னுதாரணப் படைப்பாக அடையாளம் பெற்றதுபோலவோ தெரியவில்லை. இந்த விருது வழங்கப்படுவதற்கு முன் எந்த வகையிலும் சிறார்களையோ, சிறார் இலக்கியப் படைப்பாளிகளையோ இந்தக் கதைகள் சென்றடைந்ததுபோலவும் தெரியவில்லை. பால சாகித்ய புரஸ்கார் என்பது சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழுவினர், தேர்வுக் குழுவினருக்கு நெருக்கமானவர்களுக்கே பெரும்பாலான நேரம் கொடுக்கப்பட்டுவருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் செய்யப்பட்டுவருவதை, உறுதிப்படுத்துவதுபோல் இந்த ஆண்டு விருதுத் தேர்வும் அமைந்திருக்கிறது.

இதை சாகித்ய அகாடமியின் தலைமை அலுவலகப் பார்வைக்கும் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கொண்டு செல்லும். இதற்குக் காரணமான தமிழ் பால சாகித்ய புரஸ்கார் தேர்வு குழுவுக்கு கடும் கண்டனங்களை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்வரும் காலத்தில் தகுதியான நூலுக்கு விருதுகளை அளிக்கும்படி சாகித்ய அகாடமி அமைப்பினரைக் கேட்டுக்கொள்கிறது.

எதிர்காலத்தில் சாகித்ய அகாடமியின் பால சாகித்ய விருதுத் தேர்வு மேம்பட்ட வகையில் அமைய கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்:

1. சமகாலச் சிறார் இலக்கியத்தோடு நேரடித் தொடர்புடையவர்களை மட்டுமே விருதுத் தேர்வுக் குழுவுக்குத் தேர்வுசெய்ய வேண்டும்.

2. தற்போது இறுதிக் குறும்பட்டியல் மட்டும் வெளியிடப்படுகிறது. அதே நேரம், இறுதிப்பட்டியலுக்கான நூல் தேர்வு செய்யப்பட்ட முறை, அவற்றைப் பரிந்துரைத்த தேர்வாளர்கள் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும்.

3. சாகித்ய அகாடமி அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு சமகாலத்தில் என்ன மாதிரியான சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

4. விருதுத் தேர்வு முறை நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உத்திரவாதப்படுத்த, வெளிப்படைத்தன்மை வேண்டும்.

5. விருதுக்குரிய நூல் இறுதிப் பட்டியலிலுள்ள மற்ற நூல்களைவிட எந்த வகையில் தகுதியானது என்பது குறித்து விருதுக் குழு நடுவர்களின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

நன்றி,
விழியன் | செயலாளர்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
contact.tncwaa@gmail.com