கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

உயிர் பிழைக்க வந்தவர்கள் உயிரற்ற நடைபிணங்களாய்... நெடுஞ்சாலையில் நீண்டு, அடங்கும் நிழல்களை துரத்தியபடி... இலக்கற்ற பயணத்தில், இலக்கின் தூரம் மிரட்டுவதில்லை ஒருபோதும்... வியர்வையின் மிச்சங்களை சுமந்து செல்லும் தோள்களுக்கு, பாரங்கள் கனப்பதில்லை எள்ளளவும்... என்ன... கால்களை விடவும் வேகமாய் தேய்ந்து விடுகின்றன…