நாம் பயணம் செய்யும் இடங்களை தற்போது கூகுளே பதிவு செய்து மாதம் ஒரு முறை நமக்கு காட்டுகிறது. அவற்றை பார்க்கும் பொழுது சுவரசியாயமாகத்தான் இருக்கிறது. நம்மில் சிலர் பயணங்களை கல்வி, வேலை, பொழுது போக்கு, செய்திகளை பதிவு செய்தல் போன்ற காரணங்களுக்காக நீண்ட தூரம் பயணம் செய்யும்படி இடங்களை திட்டமிடுவோம். உதாரணமாக சம தளத்தில் வாழும் பெரும்பாலோனோர் மலை பகுதிகளுக்கு பயணம் செய்வது வழக்கம். ஆனால் பறவைகள் இனப்பெருக்கம் மற்றும் கால நிலைகளுக்காக இடம்பெயர்கிறது. அப்படி இந்தியாவிற்கு வரும் இக்குறிப்பிட்ட இனம் உப்புகொத்தியின் வலசை பாதையை பார்க்கும் பொழுது மிகவும் சுவரசியாயமாகவே இருக்கிறது. நம்மை போன்று நேரம், பணம், வாகனம் போன்ற கட்டுப்பாடுகளுக்கு மாற்றாக அவைகளுக்கு கால நிலை, வேட்டை விலங்குகள், உணவு போன்றவை கவனத்தில் கொண்டு பயணம் செய்கிறது.
இதன் பெயரை வைத்தே இப்பறவையின் வாழ்விடத்தை கணித்து விடலாம். ஆம் கடற்கரை ஓரங்களில் வாழ்பவை. உப்பு நீரில் வாழும் புழுக்கள், பூச்சிகள் மற்றும் கணுக்காலிகளை உண்டு வாழ்கின்றன. கடலில் உள்ள மணல் வண்ணங்களுக்கு ஏற்ப இதன் உடலின் வண்ணம் உள்ளது.
இதன் ஆங்கிலப் பெயர் : Greater Sand-Plover.
அறிவியல் பெயர்: Charadrius leschenaultia
Leschenaultia – Jean Baptiste Louis Claude Théodore Leschenault de la Tour
(1773–1826)
ஜீன்-பாப்டிஸ்ட் லூயிஸ் கிளாட் தியோடோர் லெஷினோல்ட் டி லா டூர் ஒரு பிரெஞ்சு தாவரவியலாளர் மற்றும் பறவையியலாளர் ஆவார். நிக்கோலஸ் பவுடின் 1800 மற்றும் 1803 க்கு இடையில் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட பயணத்தில் முக்கிய தாவரவியலாளராக லெஷ்சனால்ட் இருந்தார்.
பல புதிய மாதிரிகளை 1801 மற்றும் 1802 இல் அவர் சேகரித்தார், இவருடன் ஏழை தோட்டக்காரரின் பையன் அன்டோயின் குய்செனோட் னும் பயணம் செய்த பொழுது, லெஷ்சனால்ட் விட அன்டோயின் அதிகமான தாவர மாதிரிகளை சேகரித்தார், மேலும் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள லேபிள்களைக் கொடுத்தார். ஏப்ரல் 1803 இல் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஆனால் திமோரில் கரைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
அடுத்த மூன்று வருடங்களை ஜாவாவில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அந்தத் தீவின் முதல் முழுமையான தாவரவியல் ஆய்வை மேற்கொண்டவர் நேரத்தைப் பயன்படுத்தினார், இதற்கு முன்னர் கார்ல் பீட்டர் துன்பெர்க்கை தவிர இயற்கையாளர்களால் பார்வையிடப்படவில்லை. அவர் ஜூலை 1807 இல் தாவரங்கள் மற்றும் பறவைகளின் பெரிய தொகுப்புடன் பிரான்சுக்கு திரும்பி வந்தார்.
நெப்போலியன் போர்களைத் தொடர்ந்து, மே 1816 இல் லெஷ்சனால்ட் தாவரங்களை சேகரிக்கவும், புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவை நிறுவவும் இந்தியாவிற்கு வந்தார். அவருக்கு மெட்ராஸ், பெங்கால் மற்றும் இலங்கை வழியாக பயணம் செய்ய ஆங்கிலேயர்களால் அனுமதி வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த பல தாவரங்கள் மற்றும் விதைகளை பிரெஞ்சு தீவான ரியூனியனுக்கு பயிரிட அனுப்பினார். இதில் இரண்டு வகையான கரும்பு மற்றும் ஆறு வகையான பருத்தி ஆகியவை அடங்கும். அவர் 1822 இல் பிரான்சுக்குத் திரும்பினார், இந்த சிறப்பான செயல்பட்டிற்கு அவருக்கு Legion of Honour என்ற விருது வழங்கி மரியாதை செய்தனர்.

அவர் திரும்பி வந்த ஒரு வருடத்திற்குள் லெஷ்சனால்ட் மீண்டும் தென் அமெரிக்கா, பிரேசில் சூரினம் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய பகுதிகளுக்கு தேயிலை அறிமுகப்படுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
லெஷ்சேனால்ட் அவருடைய ஆய்வுகளை சிறிதளவு வெளியிட்டிருந்தாலும், அவரது சேகரிப்புகள் பின்னர் பிற பிரெஞ்சு தாவரவியலாளர்களான ஐமே பான்ப்லேண்ட், ரெனே லூயிச் டெஸ்ஃபோன்டைன்ஸ், அன்டோய்ன் லாரன்ட் டி ஜுஸ்யூ, ஜாக்ஸ் லாபிலார்டியர் மற்றும் எட்டியென் பியர் வெண்டெனாட் உட்பட பலர் பயன்படுத்தினர்.
இதை தவிர வேறு இரண்டு பறவைகள் white-crowned forktail (Enicurus leschenaulti) and sirkeer malkoha (Phaenicophaeus leschenaultii) ஆகியவைக்கும், மூன்று வகையான பல்லிகளுக்கும் இவருடைய பெயர் வைத்துள்ளனர். மேலும் தாவரங்களில் பேரினம் இவருடைய பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றோம். பாரிசில் 14 மார்ச் 1826 அன்று இறந்தார்.
இக்குறிப்பிட உப்புக்கொத்தி பறவை குளிர்காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடம் பெயர்கிறது. இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் வழியாக கடற்கரையை ஒட்டியே வலசை பயணம் மேட்கொள்கிறது. கீழ் உள்ள வரை படத்தில் தெளிவாக காணலாம்.

வரைபடத்தில் மஞ்சள் நிறத்தில் உள்ள துருக்கி பாலைவனங்கள் மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றது. நிலத்தில் சிறு குழியில் முட்டையிடுகிறது.
தற்போது இதன் எண்ணிக்கை சீராக இருப்பினும் குறைந்து வருவதாகவே ஆய்வாளர்கள் கூறுவதால் Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (ஆப்பிரிக்க-யூரேசிய வலசை நீர் பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்ததில்) சேர்த்துள்ளனர்.
நாமும்உலகில் வித்தியாசமான இடங்களுக்கு பயனுள்ள வகையில் பயணம் செய்து உலகை கற்றுக்கொள்வோம்.
தரவுகள்
https://en.wikipedia.org/wiki/Jean-Baptiste_Leschenault_de_La_Tour
http://datazone.birdlife.org/species/factsheet/greater-sandplover-charadrius-leschenaultii/text
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவை 18 – கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.