நூல்: சென்னையின் மறுபக்கம்
ஆசிரியர்: அ. பாக்கியம்
விலை: 90
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.in
சென்னை மாநகராட்சி தேர்தல் நெருங்குகிறது. ஆங்காங்கு மாணவர்கள் அமைப்புகள், வாலிபர்சங்க அமைப்புகள் பகுதி மக்களின் பிரச்சினைகளை தொகுத்து தீர்வு கோறும் இயக்கத்தை தொடங்கிவிட்டனர். பிப்ரவரி 4, 5 தேதிகளில் வட சென்னையில் உள்ள மாணவர் அமைப்பு போட்டோ கண்காட்சிமூலம் புறக்கணிக்கப்பட்டதை, அவலத்தை காட்டியது.. அடாணி துறைமுக கட்டமைப்பால் உருவாகும் பிரச்சினைகள் மின் நிலையங்கள் சாம்பலை கொசத்தலை ஆற்றில் கலப்பதால் சாக்கடையாகும் சோகம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு விளையாட்டுத்திடல் காணாமல் போனது. பூங்காக்கள் அமைக்கும் திட்ட அறிவிப்புகள் கனவாய் போனது இவைகளை எழுத்தால் சொல்வதை விட படங்களால் காட்டுவதால் அதன் தாக்கம் வலிதாகும்.
அதோடு பாரதி புத்தகாலயம் சென்னையின் மறுபக்கம் என்ற கையேடு படங்களால் காட்ட முடியாத பல நிஜங்களை எழுத்துக்களால் படம் பிடிக்கிறது. எழுதியவர் அ.பாக்கியம் மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில குழு உறுப்பினர், மழைநீர் சாலைகளில் புகுமிடங்களை படம் பிடிக்கலாம் ஏன் புகுகிறது என்பதை எழுத்தால்தான் சொல்லமுடியும், வட சென்னையில் அமில மழை ஏன் பெய்கிறது என்பதை சொல்லால் காட்டமுடியும் புறம்போக்கு ஆக்கிரப்பு வகைகளை அரசே பெரும் நிறுவனங்களுக்கு வழங்குவது, ரீயல் எஸ்டேட் மாஃபியாக்கள் அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்பது இதுவே அதிகம் வறியவர்கள் வேறு வழியின்றி வாழ அமைக்கும் வாழ்விடங்கள், அறிவியல்பூரவமாக குடியிருப்பு பற்றிய கொள்கை அரசிற்கு இருக்குமானால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
தவறான நிலப்பயன்பாட்டால் பலகேடுகள் விளைந்ததை ஆதாரங்களுடன் இப்புத்தகம் விளக்குகிறது, அரசின் அறிவியலடப்படையற்ற இச் செயல்களே மழைவெள்ளம் சாலைகளிலும் வீடுகளில் புகும் நிலவரத்தை உறுவாக்குகின்றன என்பதை புரியவைக்கிறது . சாலை போக்குவரத்து வேக தடைகளுக்கும், சாலை அமைப்பால் ஏற்படும் முதுகுவலி நோய்களுக்கும் உள்ள தொடர்பை படம் பிடிக்கிறது.
சமூக நீதி என்றால் சாதி. மத. வர்க்க பேதமின்றி அனைத்துமக்களுக்கும் ஆரோக்கியமாக வாழும் உரிமையை பாதுகாப்பதை அரசு கடமையாக கருத வேண்டும். அதனை உள் ஆட்சி அமைப்பு மூலமே உறுதிபடுத்த முடியும்.என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது.
சேவை மணப்பாண்மையுடன் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிறந்த கை யேடு. சென்னை நகர மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும்வரை போராடும் அரசியல் கள போராளிக்கு அறிவியல் பூர்வமாக பிரச்சினைகளை அணுக உதவும் புத்தகம். தேர்தல் நேரத்தில் பெருமளவில் சென்னை மக்களின் கவணத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கையடக்க நூல்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.