வணக்கம், புத்தகங்களுடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், SFI, தமுஎகச, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், பாலர் அரங்கம், ஆகியோருடன் இணைந்து வாசிப்பை முன்வைத்து நமது இயக்கம் சென்னை, தேனாம்பேட்டை அரும்பு அரங்கில் மே.10-20 நடைபெற உள்ளது. சிறார்களுக்கான இப் புத்தகப் பயணம் ஒரு மைல்கல்லாக சிறுவர் இலக்கியத்தின் அடையாளமாக மாறும் என பெருமையாகக் கருதுகிறோம்.
விடுமுறை கொண்டாட்டம் மே.10 மாலை 6 மணிக்கு மேனாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி தொடங்கி வைக்கிறார்.

இருபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் தினமும் சிறார்களுடன் உரையாட உள்ளனர். மேலும் 10 நாட்களும் அறிவியல் இயக்க ஆளுமைகள், ஓரிகாமி, ஓவியம், பாடல், அறிவியல் பரிசோதனைகள், ஆய்வுகள், விஞ்ஞானிகள் சந்திப்பு என மே.20 இரவு வரை தொடர்ந்து பயணிக்க உள்ளனர்.
பாரதி புத்தகாலயம், அரும்பு சிறார் அரங்கம் தொடர்ந்து திறந்திருக்கும். இக்கல்வியாண்டின் தொடக்கம் புத்தகங்களுக்காக இருக்கட்டும்.
வழக்கம் போல் இந்தாண்டும் தங்களின் பேராதரவுடன் புதிய வரலாறு படைப்போம்.
10-25% சிறப்புக்கழிவு உண்டு. சிறுவர்களுக்கான தமிழ், English அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்.
-க.நாகராஜன்,
பாரதி புத்தகாலயம்,
சுதாகர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஒருங்கிணைப்பாளர்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


தள்ளுபடியில் புத்தகங்களைப் பெறுவது எப்படி தோழர்?