Subscribe

Thamizhbooks ad

ந க துறைவன் குழந்தை கவிதைகள்

1.

நிலாவில் பாட்டி
வடை சுடுவதை நிறுத்தி விட்டாள்
அங்கே அடிக்கடி
விண்வெளி வீரர்கள் இறங்கி
எதையோ தேடுகிறார்கள்
பாட்டியிடம் மட்டும்
யாரும்
வடை வாங்கி தின்றதில்லை
ஆதலால், பாட்டி
வடை சுடுவதை
நிறுத்தி விட்டாள்
இப்பொழுது பாட்டி
பூமிக்கு போய்விடலாமா? என்று
யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

2.
அழும் குழந்தைக்கு
யாரும் நிலாவைக் காட்டி
சோறு ஊட்டுவதில்லை
கையில் செல்போன் கொடுத்து
படம் போட்டுக் காட்டி
நிதானமாக
ஊட்டி விடுகிறார்கள்.

3.
குழந்தைக்கு சோறூட்ட
வாசலில் நிற்கிறாள்
இடுப்பில் குழந்தையோடு தாய்
வாலாட்டி நிற்கும் நாய்
காட்டி ஊட்டுகிறாள்
பாதையில் போகும்
வாகனங்கள்
காட்டி ஊட்டுகிறாள்
பள்ளி செல்லும் குழந்தைகள்
காட்டி ஊட்டுகிறாள்
அந்த வீட்டின் அருகில்
எந்த மரமும் இல்லை
குழந்தைக்கு பறவைகள் காட்டி
சோறூட்ட
தண்ணீர் குடிக்கும் போது
குழந்தைக்கு புரையேறியது
உச்சந் தலையில் தட்டிவிட்டாள்
இன்னும் கொஞ்சம் என்றாள்
குழந்தை வாங்க மறுத்தது
வயிறு நிறைந்தது
வெளியில் எதையோ பார்த்து
சிரித்தது குழந்தை.

4.
ஸ்கூட்டர் கண்டதும்
குழந்தைக்கு சிரிப்பு
அப்பாவுக்கு முன்
அமர்ந்து கொண்டு
ஓட்டுவது போல பாவனை
செய்து சிரிப்பு
நின்றிருந்த அம்மாவுக்கு
டாட்டா சொல்லி சிரிப்பு
” அப்பா ஆபிஸ் போகணும்
இறங்குடா ” என்று கேட்டும்
இறங்க மறுத்து
அழுது கொண்டே இருந்தது
ஸ்கூட்டர் மறையும் வரை…

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here