இந்த ஆண்டு நாட்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸ் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
Xi Jinping 20வது CPC தேசிய காங்கிரஸிற்கு தனது அறிக்கையில் “வளர்ச்சி” பற்றி 100 முறை குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு புதிய வளர்ச்சி முறையை உருவாக்குவதையும், விரைவுபடுத்துவதையும், உயர்தர வளர்ச்சியைப் பின்பற்றுவதற்கும் சீனாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
நாட்டின் புதிய வளர்ச்சித் தத்துவத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகவும், உண்மையாகவும் பயன்படுத்தவும் வேண்டும்.
சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களைத தொடர வேண்டும்.
உயர்தரத் திறப்பை (high-standard opening-up,) ஊக்குவிக்க வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் வகையில் புதிய வளர்ச்சி வடிவத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ஜி அழைப்பு விடுத்தார்.
இவை அனைத்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார ஓட்டங்களுக்கு இடையே நேர்மறை தொடர்புகளை கொண்டுள்ளது.
உலகத்திற்கான வாய்ப்புகள்:
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த 10 ஆண்டுகளில் 54 டிரில்லியன் யுவானில் இருந்து 114 டிரில்லியன் யுவானாக வளர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 18.5 சதவீதமாக உள்ளது. இது 7.2 சதவீத புள்ளிகள் அதிகரித்து வருகிறது என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
2013 முதல் 2021 வரையிலான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சராசரியாக 38.6 சதவீதம் வரை சீனா பங்களித்துள்ளது என்றும் இது ஒட்டுமொத்த ஜி 7 நாடுகள் வளர்ச்சியை விட அதிகமானது என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NBS) வெளியிட்ட விவரங்கள் அடிப்படையில் தெரிவித்தார்.
தற்போதைய COVID-19 தொற்றுநோய், முதலாளித்துவ நாடுகளால் அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம், உலகமயமாக்கலுக்கு எதிராக குறிப்பாக சீனாவுக்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்காக, சீனா தனது புதிய “இரட்டை சுழற்சி” வளர்ச்சி முறையை வெளியிட்டது.
உள்நாட்டு சந்தையை பிரதானமாகக் கொண்டு அதே நேரத்தில் வெளிநாட்டு சந்தையை பலப்படுத்தக்கூடிய முறைகளைக் கையாண்டு தற்காத்துக் கொண்டது.
சீனாவின் புதிய வளர்ச்சி முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் உள்ள வளர்ச்சி வளையம் அல்ல.
வெளி உலகிற்குத் திறக்கும் அதன் அடிப்படை தேசியக் கொள்கைக்கு சீனா என்றும் உறுதிபூண்டுள்ளது. பரஸ்பர நன்மை பயக்கும் திறப்புக் கொள்கையை கடைபிடிப்பதில் சீனா உறுதிபூண்டுள்ளது என்றும் ஜி கூறினார்.
“அதன் சொந்த வளர்ச்சியுடன் உலகிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அனைத்து மக்களுக்கும் அதிக நன்மைகளை வழங்கும் திறந்த உலகளாவிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தனது பங்களிப்பை வழங்கவும் சீனா பாடுபடுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
உயர்தர திறப்பு:
ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை சீனா பல மடங்கு உயர்த்தி உள்ளது. 82வழித்தடங்களுடன், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில்கள் இப்போது 24 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 200 நகரங்களை இணைத்துள்ளது.
ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கிய போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் பயணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்ந்து.
மொத்தம் 1.02 மில்லியன் TEU(twenty foot equivelent unit) சரக்குகள்(containers) கொண்டு செல்லப்பட்டன.
இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சீனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ., லிமிடெட் வழங்கிய தரவுகளை குறிப்பிட்டார்.

– அ.பாக்கியம்
முகநூல் பதிவிலிருந்து
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

